search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் நிதி நிறுவனர் கொலையில் 3 பேர் சிக்கினர்: ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை
    X

    விழுப்புரத்தில் நிதி நிறுவனர் கொலையில் 3 பேர் சிக்கினர்: ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை

    • இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.
    • இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் என்ற ராம்குமார் (வயது 30). இவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதை வசூல் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் பாலாஜி (27) என்பவர் ஸ்ரீராமிடம் ரூ.2 ஆயிரம் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு ஸ்ரீராம் எந்த வேலை யும் செய்யாமல் ஊதாரித்த னமாக சுற்றிவரும் உனக்கு கடன் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீராமை திட்டி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஸ்ரீராம் விழுப்புரம் நகர போலீசில் பாலாஜி மீது புகார் கொடுத்தார்.

    பணம் தராமல் அனுப்பிய கோபத்தில் இருந்த பாலாஜிக்கு இந்த புகார் சம்பவம் கடும் ஆத்திரமடையச் செய்தது. இதனால் ஸ்ரீராமை பாலாஜி கொலை செய்ய முடிவு செய்தார். அதற்காக பாலாஜி ஸ்ரீராம் எங்கெங்கு செல்கிறார். தனியாக செல்லும் இடங்களை கண்காணித்து திட்டம் தீட்டினார். இதனையடுத்து நேற்று மாலை தனியாக தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரிக்கரை ரெயில்வே கேட் அருகில் வந்த ஸ்ரீராமை பாலாஜி மற்றும் பாலாஜியின் கூட்டாளி யான கண்டமங்கலம் பகுதி யை சேர்ந்த அய்யப்பன் (28), பிரகாஷ் (25) ஆகி யோர் வழிமறித்து வீச்சரி வாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் ஸ்ரீராமுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் ஸ்ரீராம் சாலையில் சரிந்தார். பின்னர் பாலாஜி மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த ஸ்ரீராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து முன்விரோதத்தில் ஸ்ரீராமை கொலை செய்த பாலாஜி மற்றும் பாலாஜி யின் கூட்டாளி களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பாலாஜி, அய்யப்பன், பிரகாஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பிடிபட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×