என் மலர்
விழுப்புரம்
- வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- முதல் 3 இடங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கலைஞரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேச்சு போட்டிகள் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரசூல் பாஷா, சிவப்பிரகாசம், மலையரசன், சரவணன், வெங்கடேச பெருமாள், மோகன் தாஸ், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து கருணாநிதி வரலாறு குறித்த பேச்சு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசும் போது, ஏழை தொழிலாளர்களின் மகன், மகள்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்தவர்கருணாநிதி. அவர் வழியில் இன்று ஆட்சி செய்யும்முதலமைச்சர் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி இன்று பெண்களை பட்டதாரிகளாக உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் என்றார்.
பேச்சுப்போட்டியில் பல்வேறு கல்லூரியிலிருந்து ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு கருணாநிதியின் வரலாற்றுகளையும், தமிழக மக்களுக்கு அவர் செய்த பல்வேறு சாதனைகளையும், பற்றி எடுத்துரைத்தினர். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கல்லூரி செயலாளர் ஸ்ரீபதி, ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், நகர செயலாளர் கார்த்திக்,தொண்டரணி பாஷா விளையாட்டு மேம்பாட்டு அணி வக்கீல் சந்திரன், அட்மா குழு வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட முதல் இ3டங்களை பிடித்த4 பேருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
- இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
- ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் இரும்பை கிராமம் உள்ளது. இங்குள்ள மாகாளேஸ்வரர் கோவில் வீதியில் வசிப்பவர் மணிமாறன் (வயது 40). தனது குடும்பத்துடன் பங்களாதேஷில் தங்கி வேலை செய்கிறார். இதனால் இங்குள்ள வீட்டை பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை பார்த்துக் கொள்ள சொல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மணிமாறனின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணி மாறனுக்கும், ஆரோவில் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யிலான போலீசார், வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த வெள்ளி பொரு ட்கள், பட்டுப்புடவைகள் திருடப்பட்டிருந்தது.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், ரூ,50 ஆயிரம் மதிப்பிள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். வானூர், ஆரோவில் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்கி றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
- பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர் பகுதியைஒரு மனநல பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் யாரும் இல்லாததை கண்ட மர்ம நபர்கள் வீட்டில் உள்ளே இருந்த அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பெண் வெளியே வந்து அருகே உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் ரோசனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநல அவருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மன நலம் பாதித்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அந்த பகுதி மக்களுடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே பரசுரெட்டிப்பா ளையத்தை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கேரளாவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அதே ஊரில் உள்ள பாட்டியின் பராமறிப்பில் இம்மாணவி உள்ளார். இதே ஊரைச் சேர்ந்த மாணவன், மாணவி படிக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். இவ்விருவரும் கடந்த 11-ந் தேதி மாலை அதே ஊரில் உள்ள கரும்பு தோட்டம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டன் (வயது 38) இருவரையும் கண்டித்துள்ளார். மேலும், அந்த மாணவனை அங்கிருந்த கரும்பால் தாங்கி விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இரவு 7 மணியளவில் வீட்டிற்கு வந்த மாணவி, நடந்த விஷயத்தை பாட்டியிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக ஊராட்சி தலைவரை முன்னிலையில் மாணவன், தனியார் பள்ளி டிரைவர் மற்றும் மாணவி ஆகியோரிடம் பஞ்சாயத்து பேசி முடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வளவனூர் மருத்துவமனைக்கு பிளஸ்-2 மாணவன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு தன்னை ஒருவர் கரும்பால் அடித்து விட்டதாக கூறியுள்ளார். இத்தகவல் அறிந்த வளவனூர் போலீசார் விரைந்து சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் படி தனியார் பள்ளி டிரைவர் மணிகண்டனிடம் வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிறுவந்தாடு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
- கண்டெய்னர் லாரியை பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த அப்ரோச் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டி ருந்தார்.
- ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த அப்ரோச் (வயது 27 ஓட்டிக் கொண்டு சென்று கொண்டி ருந்தார். அந்த லாரியானது திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே வரும்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆரோவில் சென்ற கார் மீது எதிர்பா ராத விதமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது
. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செய்த 2 வெளிநாடு பயணி கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத் தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது.
- இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது.
விழுப்புரம்:
மழை பெய்ய வேண்டிய இந்த சமயத்தில் செஞ்சி பகுதியில் நேற்று திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பனிமூட்டம் புகை மண்டலம் போல காட்சி அளித்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஓட்டி சென்றனர். இந்த பனி மூட்டம் காலை 7மணி வரை நீடித்தது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தான் பனிமூட்டம் இருக்கும். தற்போது மழை காலம். எனேவ பனிமூட்டம் இருப்பது இல்லை. இது குறித்து ஒருவர் கூறுகையில் தற்போது எல்லாம் தலை கீழாக மாறுகிறது. அது போல் இயற்கையும் மாறுகிறது என்றார்.
- அரசு பஸ்சில் பயணம் செய்த ஐகோர்ட்டு வக்கீல் நெஞ்சுவலி ஏற்பட்டு பஸ்சின் இருக்கையிலேயே இறந்தார்.
- விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி:
சென்னை வேளச்சேரி வி.ஜி.பி. செல்வா நகரை சேர்ந்தவர் ரவி ஆனந்த் (வயது 45).இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பஸ்சில் சென்று விட்டு நேற்று இரவு மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன் டிரைவராகவும், ராமநாதபுரம் எஸ்.வி.மங்கலமத்தை சேர்ந்த சந்திரமோகன் கண்டக்டராகவும் இருந்தனர். அரசு பஸ் இன்று அதிகாலை 5.45 மணிக்குவிக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு ஓட்டலில் நின்றது.
பஸ்சில் பயணம் செய்த அனைவரும் இறங்கி சென்றனர். ரவி ஆனந்தும் பஸ்சில் இருந்து இறங்கி கழிவறைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பஸ்சில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தார். 5.55 மணிக்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்களிடம் நெஞ்சு வலி உள்ளதாக கூறியுள்ளார்.
உடனடியாக பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் கண்டக்டர், டிரைவர் ஆகியோர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்தவர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி போலீஸ்காரர் செல்வகுமார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த ரவி ஆனந்த் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெஞ்சுவலியால் இறந்தவரின் மனைவி வினித்ரா சென்னை தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்ட வாலிபர்கள், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.
அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதனை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
- மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட நகரான் தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது (45)இவர் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இவரது குழந்தைகளும் பள்ளிக்கு சென்று உள்ளனர் .இந்நிலையில் நேற்று மாலை இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென கூரை வீடு முழுக்க பரவி உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள ராஜேந்திரன் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் 2 கூரை வீடுகளும் தீப்பற்றி முழுவதுமாக எரிந்துவிட்டது
இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, டி.வி, கட்டில், பாத்திரங்கள், நில பத்திரம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகிவிட்டது இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் வடக்கு மாவட்டதி.மு.க. துணை செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் பேரூராட்சி துணை தலைவர் தலைவர் பலராமன், கவுன்சிலர்கள் தயாளன், பிரபாகரன் வருவாய் ஆய்வாளர் தினகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்து கணேஷ் மற்றும் வருவாய் துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஜனார்த்தனன் வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தான் இந்த தீ விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 2குடும்பத்திற்கும்தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
- 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது.
- கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர 32-வது வார்டில் வசிக்கும் மக்கள் சார்பில் விழுப்புரம் கலெக்டருக்கு மனு அளித்தனர். அதில் உள்ளதாவது;- விழுப்புரம் நகராட்சி 32-வது வார்டிற்குட்பட்ட கவுதம் நகர், ஸ்ரீராம் நகர், வழுதரெட்டி காலனி, பாண்டியன் நகர், சாலாமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளின் தெருக்களின் வழியாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால் செல்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த வாய்க்கால் தற்போது தூர்ந்து போய் இருப்பதால் வடகிழக்கு பருவமழையின் போது அதிகளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு மேற்கண்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய சூழ்நிலை இருக்கிறது.
கடந்த காலங்களில் பெய்த பருவமழையின் போது குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் இன்ன ல்களுக்கு ஆளானார்கள். இது குறித்து கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்ற உடன் வழுதரெட்டி ஏரி வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வடக்கிழக்கு பருவமழைக்கு முன்பாக வழுதரெட்டி ஏரி வாய்க்கால்களை தூர்வாரி வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
- குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் நாகப்பன் (50) என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நாகப்பனிடம் கடன் வாங்கிய பணத்தை வேலவன் திரும்ப கொடுத்த நிலையில், வட்டி பணம் தரவேண்டுமென என வேலவனிடம், நாகப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வேலவன் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நாகப்பன், வேலவனின் தலையில் வெட்டினார். இதில் வேலவனின் இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வேலவனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- இதனையடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
காவிரியில் நீர் திறக்காத கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாக சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வ தற்காக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பம் பகுதியில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார், சென்னைக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனை யடுத்து விவசாயிகள் வா க்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கரும்பு மற்றும் நெற்பயிர்களை கையில் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மறியல் ஈடுபட்ட விவசா யிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், சென்னை போராட்ட த்திற்கு செல்ல அனுமதி அளித்த னர். தொடர்ந்து விவசாயி கள் தங்கள் மறியலை கைவி ட்டனர். விவசாயி களின் இந்த மறியல் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






