என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவா சைக்கு மறுநாள் நவராத்திரி விழா தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு மாலையில் அம்மனுக்கு ஆதி அங்காளம்மன் அலங்காரம் செய்யப்பட்டு இரவு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை யத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த ஓமந்தூரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவரது காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற நாராயணசாமி, அங்கிருந்த வேப்பமரத்தில் வேட்டி யால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார், நாராயணசாமி உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
    • சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமையில் ரெட்ட ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை ச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,

     இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவ ண்ணாமலையில் நடைபெற இருக்கின்ற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகின்ற 22 -ந்தேதி வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், மாசிலாமணி செந்தமி ழ்செல்வன்,தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாள ர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி ,பொதுக்குழு உறுப்பினர் வீடுர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் நெலி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் தமிழ்நாடு மாநில எல்லையையும், புதுச்சேரி மாநில எல்லையையும் இணைக்கும் மற்றொரு முக்கிய சாலையாக திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை - காசிப்பாளையம் - பூத்துறை - மேட்டுப்பாளையம் மற்றும் பூத்துறை - பெரம்பை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலையை பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊசுட்டேரி சுற்றுலாத்தளம், பறவைகள் சாரணாலயம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் இந்த சாலை பயன்படுத்தப்பட்டு வருவதால், போக்குவரத்து நெரிசலுடன் உள்ளது.

    இந்த சாலையை அகலப்படுத்தவும், பழைய பாலங்களை புதுப்பித்து புதிய பாலங்களை கட்டித்தரவேண்டுமென பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் நீண்டகால கோரிக்கையாக வைத்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியினை, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருச்சிற்ற ம்பலம்-காசிப்பாளையம் வரை உள்ள 3 கீ.மீ. நீள சாலையினை 3 மீட்டரிலிருந்து 5 மீட்டராக அகலப்படுத்தவும், பழைய பாலங்களை மேம்பாடு செய்வதற்கும், ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், காசிப்பாளையம் முதல் பூத்துறை வரை உள்ள 2 கீ.மீ. சாலை ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படவுள்ளது. மேற்காணும் 5 கீ.மீ. நீள சாலை, நெடுஞ்சாலை த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக பூத்துறை-மேட்டு ப்பாளையம் சாலையானது (2.95 கீ.மீ. நீளம்) 1.69 கோடி மதிப்பீட்டிலும், பூத்துறை-பெரம்பை சாலையானது (1.35 கீ.மீ. நீளம்) ரூ.72.85 லட்சம் மதிப்பீட்டிலும், சாலை மேம்பாட்டு பணிக ளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி யுள்ளது. அதனடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் பழனி,திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை முதல் பூத்துறை வரை உள்ள சாலையை அகலப்படுத்தும் பணிகள், பாலம் அமைக்கும் பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவல ர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • ஜீனத் பி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்
    • தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் அப்பாஸ் அன்சாரி. இவரது மனைவி ஜீனத் பி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் இருந்து அப்பாஸ் அன்சாரி தனது மனைவி ஜீனத் பீ மற்றும் மகன் முகமது சூர்யா,மகள் பானு பேரகுழந்தை நூமான் ஆகிேயார் காரில் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

    காரை ஜாகிர் உசேன் ஓட்டி வந்தார். இந்த கார் அதிகாலை 4.30 மணி அள வில் ஆரோவில் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அன்சாரி மனைவி ஜீனத் பீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 வயது பேரக் குழந்தை மகன், மகள் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சை க்காக ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.இந்த விபத்து குறித்து ஆரோ வில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது.
    • நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை பணி கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாதாள சாக்கடை பணியின் போது பல்வேறு இடங்களில் சரிவர மூடப்படாத பள்ளத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. மேலும் பல்வேறு இடங்களில் பள்ளத்தில் வாகனங்கள் விழுந்து குடிநீர் குழாயும் அவ்வப்போது உடைந்து தண்ணீர் வீணாவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போடப்பட்ட பாதாள சாக்கடை பள்ளம் திடீரென உள் வாங்கி அதிலிருந்து குழாய் உடைந்து குடிநீரானது வீணாக ரோட்டில் ஆறு போல் ஓடியது. இது குறித்து நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பொது பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
    • கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறை வடைகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கூட்டு சாலை அருகில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்தநாளி னை முன்னிட்டு, சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி லட்சுமணன் ஆகியோா இன்று (14.10.2023) கொடி யசைத்து தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படி யும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்படி, அண்ணா பிறந்த நாளினை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், இன்று, விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு, மிதி வண்டி போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டி யானது, 13, 15 மற்றும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலி யனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தி லும், 13 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி, கோலியனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம் வீரன் கோவிலி லும், 15 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி யானது, கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பக்கம், காகுப்பம் வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 15 வயது பெண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்திலும், 17 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலி யனூர் கூட்டு சாலை அருகில் தொடங்கி, பொய் யப்பாக்கம், காகுப்பம் வழி யாக மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், 13 வயது ஆண்கள் பிரிவு சைக்கிள் போட்டி கோலியனூர் கூட்டு ரோடு அருகில் தொடங்கி, பொய்யப் பாக்கம், காகுப்பம் ஆயுதப் படை மைதானத்தில் நிறைவடைகிறது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்க ளுக்கு ரூ.5000-, 3,000-, 2,000-, எனவும் 4 முதல் 10 வரை இடங்களை பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250- வீதம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயச்சந்திரன், கோலி யனூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சச்சி தாநந்தம், மாவட்ட விளை யாட்டு அலுவலர் வேல்முரு கன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள்.
    • இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சாராய மேடு கிராமத்ைத சேர்ந்தவர் அரவிந்த். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் பிரியா (5). இவள் அதே பகுதியில் உள்ள ஊட்டச்சத்து மையத்தில் படித்து வந்தாள். பிரியா நேற்று முன்தினம் இரவு தனது பெற்றோருடன் தூங்கி கொண்டு இருந்தாள். அதிகாலையில் அவளை பாம்பு கடித்தது. கன்னத்தில் கடித்ததால் சிறுமி கதறினாள்.சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்தனர். அப்போது சிறுமியை கடித்த பாம்பு அங்கு மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.30 மணிக்கு இறந்தாள். இது குறித்து திருவெண்ணை நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர்.
    • மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    திருக்கோவிலூர் அடுத்த அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் தமிழ்(வயது23). இவர் நேற்று இரவு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.அவர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது,அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் அவரது வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். பின்னர் வரும் வழியில் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர்கள் தாங்கள் சிறுநீர் கழிப்பதாக கூறி வாகனத்தை நிறுத்த சொன்னதாக தெரிகிறது.

    அங்கு மறைவில் நின்றிருந்த மற்றும்3 பேர் சேர்ந்து 5 பேர் வாலிபர் தமிழை மடக்கி பிடித்து அவர் வைத்திருந்த செல்போனை கேட்டுள்ளனர். செல்போ னை தர மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் முதுகில் ஒருவர் குத்த மற்றவர்கள் அவரின் முகத்தில் ஓங்கி அடித்துள்ளனர் . இதில் நிலை குலைந்த தமிழ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே அந்த கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மயங்கி விழுந்த தமிழ் அதிகாலை 4.30 மணியளவில் மயக்கம் தெளிந்து அந்த வழியே சென்றவர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை திண்டிவனம் அரசு மரு த்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டிய ம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழிப்பறி சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைசெய்து வருகின்றனர்.

    • சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.
    • பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஹாஸ்பிடல் ரோடு பகுதியில் தங்கதுரைக்கு சொந்தமான கடையில் அனுமதி இன்றி பட்டாசு பெட்டி வைத்திருப்பதாக திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்த போது கடையில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதை யடுத்து திண்டிவனம் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பட்டாசு கடைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ, பட்டாசுகளை எந்த முறையில் அனுமதி இல்லாமல் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டிவனம் டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தெரிவித்தார்.மேலும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன.
    • இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சியை அடுத்த நெகனூர் பட்டி கிராமத்தில் குன்றின் மீதுள்ள அடுக்குப் பாறையில் சமணப்படுக்கையும் 4 -ம் நூற்றாண்டை சேர்ந்த பிராமி தமிழ் கல்வெட்டும் பழங்கால வெண்கோட்டுரு ஓவியங்களும் உள்ளன. இந்த பாறைகளின் அருகே வெடிவைத்து கல் உடைத்ததில் பாறையில் விரிசல் ஏற்பட்டது.இது குறித்து கடந்த 2020 -ம் ஆண்டு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றார். தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் நெகனூர்பட்டி மற்றும் தொண்டூர் கிராமத்தில் உள்ள கிராமிய கல்வெட்டு களை பாதுகாக்கப்பட்ட வரலாற்று நினைவு சின்னமாக அறிவித்தார். தற்போது இந்த நினைவுச் சின்னத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில் சின்னம் உள்ள இடத்திலிருந்து 300மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டுமானமும் வெடி வைத்தலும் செய்யக்கூடாது. ஆனால் 87 மீட்டர் தூரத்தில் பாறைகளை வெடிவைத்து உடைத்து வருகின்றனர். இதையடுத்து நேற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சென்னை அலுவ லகத்தை சேர்ந்த உதவி பொறியாளர் ராஜேஷ் இந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் பின்னர் அவர் இது குறித்து செஞ்சி தாசில்தாரிடமும், போலீசிலும் அவர் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் ஜமீனா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். யாரேனும் வெடி வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியை சேர்ந்த செஞ்சி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் செஞ்சி- திருவண்ணா மலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமைக் கழக நிர்வாகி செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அன்பழ கன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன் பேரூ ராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலை சந்திக்க தொகுதியில் உள்ள பாக முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் பணியில் பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்.  நாம் முதல்-அமைச்சர் செய்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்த்தால் தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியினர் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, மாநில தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவைத்தலைவர் சேகர், மாவட்ட துணை செயலாளர் அமுதா ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராம. சரவணன், மாவட்ட மகளிர் .அணி திலகவதி, மாவட்ட மாணவர் அணி பிரசன்னா, அனைத்து ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    ×