search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    22-ந் தேதி திருவண்ணாமலை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு
    X

    கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிய போது எடுத்த படம்.

    22-ந் தேதி திருவண்ணாமலை வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு

    • வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
    • சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமையில் ரெட்ட ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை ச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,

    இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவ ண்ணாமலையில் நடைபெற இருக்கின்ற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகின்ற 22 -ந்தேதி வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், மாசிலாமணி செந்தமி ழ்செல்வன்,தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாள ர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி ,பொதுக்குழு உறுப்பினர் வீடுர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் நெலி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×