என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: வட்டிப் பணம் தராத தம்பியின் காதை வெட்டிய அண்ணன்
- கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
- குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலவன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவர் தனது பெரியப்பா மகன் நாகப்பன் (50) என்பவரிடம் கொரோனா தொற்று காலத்தில் ரூ35 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நாகப்பனிடம் கடன் வாங்கிய பணத்தை வேலவன் திரும்ப கொடுத்த நிலையில், வட்டி பணம் தரவேண்டுமென என வேலவனிடம், நாகப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வேலவன் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குடி போதையில் வந்த நாகப்பன், வேலவனை வழிமறித்து பணத்தை கேட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நாகப்பன், வேலவனின் தலையில் வெட்டினார். இதில் வேலவனின் இடது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் வேலவனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கெடார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்