என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார், லாரி மீது கார் மோதி நிற்கும் காட்சி.
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதி வெளிநாட்டினர் காயம்
- கண்டெய்னர் லாரியை பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த அப்ரோச் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டி ருந்தார்.
- ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருநெல்வேலிக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்த அப்ரோச் (வயது 27 ஓட்டிக் கொண்டு சென்று கொண்டி ருந்தார். அந்த லாரியானது திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே வரும்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆரோவில் சென்ற கார் மீது எதிர்பா ராத விதமாக கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது
. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த செய்த 2 வெளிநாடு பயணி கள் படு காயம் அடைந்தனர். அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத் தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






