என் மலர்
வேலூர்
வேலூர்:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்தவர் அரசப்பன் மகள் தமிழரசி (வயது 30). ஊசூரில் உள்ள வங்கியில் கிளர்க் வேலை செய்து வந்தார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவரது ஊரை சேர்ந்த மகேஷ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகேஷ்குமார் சென்னை ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் தமிழரசி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் விடுதியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்துவாச்சாரி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
காட்பாடியில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோரது வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது.
அப்போது தி.மு.க. பிரமுகரின் சிமெண்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மற்றும் நாமக்கல்லில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.11 கோடி பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பணமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் வருமானவரித் துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேலும் தீவிரப் படுத்தி உள்ளனர்.
அரக்கோணம், திருப்பத்தூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.1¼ கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொரட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் அ.தி.மு.க. பிரமுகரான இவர், பைனான்ஸ், சீட்டு, நடத்தி வருகிறார்.
இவரது வீட்டில் வருமான வரி துறை இணை கமிஷனர் அபிநயா தலைமையில், 9 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணியளவில் முடிந்தது. இதில் ரூ.26 லட்சம் பணம் சிக்கியது.

இந்த பணத்தை வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் வைத்திருந்தாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
அரக்கோணத்தை அடுத்த மின்னல் அருகே உள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன். தொழிலதிபரான இவர் லுங்கி உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து லுங்கிகளை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரது உறவினர் மாதவன் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக உள்ளார்.
நேற்று மாலை 4 மணியளவில் தீனதயாளன் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அவரது அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றிலும் சோதனையில் ஈடுபட்டனர். மாதவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இரவு முழுவதும் நடந்த சோதனை அதிகாலை 2 மணியளவில் முடிந்தது. தீனதயாளன் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து ரூ.1 கோடியே 1 லட்சமும், மாதவன் வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் பஸ்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.54 லட்சம் பணமும் பிடிபட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து மேல்மலையனூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் ஸ்கூல் பேக் கேட்பாரற்று கிடந்தது. அதில் கட்டுக்கட்டாக 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. அனைத்தும் ரூ.500, 200 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.
அந்த பணத்தை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இந்த பணத்தை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக யாரேனும் எடுத்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விளாத்திகுளம் அருகே பஸ்சில் பயணம் செய்த ராமராஜ் என்பவரின் துணிப் பையில் கட்டுக்கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது.
ராமராஜிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமராஜ், அ.தி.மு.க. புதூர் ஒன்றிய செயலாளர் ஞானகுருசாமியின் உறவினர் ஆவார்.
இதற்கிடையே அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
இதில் நெமிலி முன்னாள் பேரூராட்சி தலைவரான காங்கிரஸ் பிரமுகர் வினோபா, தி.மு.க. உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று வரையில் ரூ.182 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 991 கிலோ தங்கமும், 611 கிலோ வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.284.67 கோடி ஆகும். #LokSabhaElections2019 #ITRaids
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், அரக்கோணம், பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் கலெக்டர் ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குறைபாடு உள்ள வாக்கு சாவடி மையங்களை சீரமைக்க உத்தரவிட்டனர். மேலும் மாற்று திறனாளிகள், முதியவர்கள் 3 சக்கர சைக்கிள்களில் செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தேர்தல் அன்று சிரமமின்றி சென்று வாக்களிக்க ஆயிரம் 3 சக்கர சைக்கிள்கள் இன்று வேலூருக்கு வந்தது.
இதனை கலெக்டர் ராமன், உதவி கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலி அனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும்.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் வெயில் அளவு அதிகரித்து, மே மாத இறுதியில் உச்சத்தை தொடும். அந்த சமயத்தில் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தும். ஆனால் இந்தாண்டு கடந்த மாத இறுதியில் இருந்து தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.
காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சம் அடைகிறது. கடுமையான வெயில் அனல் காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வேலூரில் நேற்று வெயிலின் அளவு இதுவரை இல்லாத வகையில் 106.5 டிகிரி கொளுத்தியது. இதனால் வேலூரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
பொதுமக்கள் வெயிலின் வெப்பத்தை தணிக்க குளிர்பான கடைகள், பழச்சாறு கடைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பகலில் அடித்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்தது. மின்விசிறிகள் அனல்காற்றை கக்கியது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் தூங்க முடியாமல் தவித்தனர். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று வேலூர் உள்பட 11 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. அதிகபட்சமாக, வேலூரில் 106.5 டிகிரி கொளுத்தியது.
கரூர் பரமத்தியில் 105 டிகிரியும், மதுரை விமான நிலையம், மதுரை தெற்கு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரியும், சேலம், நாமக்கலில் 103 டிகிரியும், தருமபுரி, பாளையங்கோட்டையில் 102 டிகிரியும், கோயம்புத்தூரில் 100 டிகிரியும் வாட்டியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் இன்று வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என்றும் அதேநேரத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Summer

இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ITRaids
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் சார்பனாமேட்டில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பிரேமலதா விஜயகாந்த் இரவு 10.15 மணிக்கு தான் சார்பனாமேட்டிற்கு வந்தார் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இரவு 10 மணிக்கு மேல் மைக் மூலம் வாக்கு சேகரிக்க கூடாது என்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தங்கள் கைகளை உயர்த்தி இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்தனர். பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக குடியாத்தம், வாணியம்பாடியில் அவர் பேசியதாவது:-
இந்த கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டணி என்றைக்கும் ஆட்சிக்கு பக்க பலமாக இருக்கும்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க.வை கேவலப்படுத்த நினைத்தார். கடவுள் உங்களை கேவலப்படுத்தி விட்டார். ஒட்டுமொத்த வேலூர் மக்களுக்கும் உங்கள் நிலை தெரிந்து விட்டது. பாதாளத்தில் தோண்ட தோண்ட பணம் வருகிறது.
அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், இளைஞர்களும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்ற உடன் வாணியம்பாடி தொகுதியில் நீண்ட நாட்களாக உள்ள ரெயில்வே பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும், கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, தரமான குடிநீர் வசதி, தரமான சாலைகளை அமைத்திடவும் பாடுபடுவார்.
நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவள். எனது கணவர் இந்த மாவட்டத்து மருமகன். வாணியம்பாடி மக்களின் அனைத்து கனவுகளையும் நனவாக்க ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் குல்பி ஐஸ், 12 ஆயிரம் மோர் பாட்டில், 3 ஆயிரம் லிட்டர் மோர் பாக்கெட், 3 ஆயிரம் லஸ்ஸி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AavinMilk
வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-
தி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.
வழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

அப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand
தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல் கட்ட பிரசாரம் தொடங்கிய சில நாட்களிலேயே துரைமுருகன், அவரது கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ரூ.10.50 லட்சம் பணம் சிக்கியது. அந்த பணத்துக்கு கணக்கு காட்ட முடியும் என்று துரைமுருகன் கூறினார்.
கடந்த 1-ந்தேதி காட்பாடியில் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது கட்டமாக சோதனை நடத்தினர். அப்போது மூட்டைகளில் கட்டுகட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் ரத்தாகும் என்று பரவலாக பேசப்பட்டது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் அறிக்கையை பொருத்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சிலுப்பன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்துள்ள மனுவின்மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காட்பாடி மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வெகுநேரம் நடந்த ஆலோசனையில் முழுமையான முடிவு கிடைக்கவில்லை. இதனால் மாஜிஸ்திரேட் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இன்று மீண்டும் மாஜிஸ்திரேட்டிடம் காட்பாடி டி.எஸ்.பி. சங்கர், இன்ஸ்பெக்டர் புகழ் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து மாஜிஸ்திரேட் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து வேட்பாளர் கதிர்ஆனந்த் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் சீனிவாசன், தாமோதரன் ஆகிய 3 பேர் மீதும் காட்பாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கதிர் ஆனந்த் மீது 125 (ஏ) பிரிவின் கீழ் பிரமான பத்திரத்தில் தவறான தகவல் அளித்தல், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171 (இ மற்றும்சி) பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் தாக்கல் செய்ய வேட்புமனுவில் தன்னிடம் ரூ.98 ஆயிரத்து 450-ம், தனது மனைவி சங்கீதாவிடம் ரூ.6 லட்சத்து 45 ஆயிரம் பணம் கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட தகவல் காரணமாக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
வேலூர்:
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சுரேசுக்கு ஆதரவாக வேலூர் மண்டித்தெருவில் நேற்று இரவு பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில், கமல்ஹாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் எங்கு சென்றாலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு நான் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளேன். 4 வயது முதல் என்னை தோளிலும், மார்பிலும் சுமந்தது தமிழகம். மக்கள் நீதி மய்யத்தின் கூட்டம் நடைபெறும் இடங்களில் எல்லாம் கூட்டம் முடிந்த பின்னர் அப்பகுதியை தொண்டர்கள் சுத்தம் செய்வது வழக்கம். அதேபோன்று தமிழகத்தையும் சுத்தம் செய்வோம். நாங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி வைத்திருக்கின்றோம். இளைஞர்கள், படித்தவர்கள் உங்களுக்காக உழைக்க தயாராகி விட்டார்கள்.
பழைய அரசியல்வாதிகளை ஒழித்து தள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. பழையன கழிந்தே ஆகும், புதியன புகுந்தே ஆகும். அதேபோல் தமிழகத்தில் பழைய அரசியலும் ஒழியும். புதிய அரசியல் உருவாகும். காடுகளில் தீப்பிடித்தால் அதனை இயற்கை பார்த்து கொள்ளும் என்று சொல்லும் அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை. ஆபத்து நம்மை நோக்கி வருவதற்கு முன்பாக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உலகில் தண்ணீர் இல்லாமல் தவிக்க போகும் நகரங்களில் பெங்களூரு 2-வது இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற நிலை வேலூருக்கோ, தமிழகத்துக்கோ வரக்கூடாது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்.
எங்கள் வேட்பாளரை வெற்றிபெறச்செய்தால் விவசாயிகள், சிறுவியாபாரிகள், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை ஒழித்து காட்டுவோம்.
உங்களின் பணத்தை உங்களுக்கே இலவசம் என்ற பெயரில் தருவது இனிமேல் நடக்காது. 5 ஆண்டு வாழ்க்கையை பொதுமக்கள் 5 ஆயிரம் ரூபாய்க்காக விற்று விடாதீர்கள். மக்கள் நீதி மய்யம் அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கும். ஏழைகளை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது.
ஒரேநாளில் எதுவும் நடக்காது தான். ஆனால் அதற்கான விதையை நாங்கள் விதைத்து விட்டோம். நாற்காலியின் நுனியில் உட்காராமல் உங்களுக்கான தேவைகளை கேட்டு வாங்கி வருவார்கள் எங்கள் வேட்பாளர்கள். நான் தேர்தலில் போட்டியிடாததால் பயந்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். நான் பயப்படுபவனாக இருந்திருந்தால் இங்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய இலக்கு தமிழகம் தான். அரசியல் என் தொழில் அல்ல. நான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு. இனி என் எஞ்சிய காலம் தமிழக மக்களுக்காக தான்.
சாராயத்தை உன்னதமான தொழிலாக எண்ணி அரசு அதனை நடத்தி வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் கண்ட கனவுபோல் நாங்களும் கனவு காண துணிவோம். நமது சொத்தையே நமக்கு இலவசம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தருகிறார்கள். நோட்டாவிற்கு ஓட்டு போடாமல் நல்ல வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். காவல்துறையை தங்கள் கடமையை செய்ய விட்டால் நிமிர்ந்து நிற்பார்கள். அரசியல்வாதிகள் காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் மக்களின் ஏவல்துறையாகும்.
இவ்வாறு அவர் பேசினார். #kamalhaasan #makkalneedhimaiam #tnpolitical
ஆம்பூர்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஆம்பூரில் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-
வருமானவரித் துறையினர் எதிர்கட்சி வேட்பாளர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடத்துகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர்களின் ஒருவர் வீட்டிலும் இதுவரை சோதனை நடத்தவில்லை. எனது வீட்டில் நடந்த சோதனையில் என்னுடைய மகன் கதிர்ஆனந்தை சாப்பிட விடாமலும், கழிப்பறைக்கு கூட செல்ல விடாமலும் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதை பார்த்த என்னுடைய மனைவி நமக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவருக்கு இந்த எம்.பி. பதவியெல்லாம் வேண்டாம். அவரை விட்டு விடுங்கள் என்று கண்ணீர் வீட்டார். அந்த கண்ணீருக்கு அனைவரும் பதில் சொல்லியே தீர வேண்டும்.

தேர்தலில் இரு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் இருவரும் பிரசாரம் செய்யட்டும், மக்கள் வாக்களிக்கட்டும், வெற்றி பெறுபவர் பாராளுமன்றம் செல்லட்டும். இது நியாயம். ஆனால் குத்து சண்டையில் ஒரு போட்டியாளரின் கையையும், காலையும் கட்டிப்போட்டு விட்டு அதன் மூலம்தான் வெற்றி பெற்றதாக கூறுவதை எப்படி ஏற்க முடியும்.
அதுபோல எங்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த செய்து, தேர்தல் பணிகளை முடக்கி விட்டு அதன் மூலம் தேர்தலில் வீழ்த்தி விட்டோம் என்று கூறுவது நியாயமாக இருக்காது. ஆம்பூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெறும் என உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.
அதனால் இந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தலையும் என்னை காரணம் காட்டி நிறுத்திவிடலாம் என நினைக்கின்றனர். எனது மகன் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் சிறப்பாக பணியாற்றி தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார்.
இவ்வாறு அவர் பேசினார். #DuraiMurugan #DMK
வேலூர் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றும் மூட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் 11-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக எல்லையில் 5 கிலோ மீட்டருக்குள் இயங்கி வரும் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6 மணிவரையில் மூடி வைக்க வேண்டும்.
அதேபோன்று தமிழ்நாட்டில் வருகிற 18-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் 18-ந் தேதி இரவு 12 மணிவரையிலும், மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அன்றைய தினத்திலும் சில்லரை விற்பனை மதுபான கடைகள் மற்றும் மதுக்கூட்டங்களை மூடி வைக்க வேண்டும். ஆக மொத்தம் மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மேற்படி நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் அன்றைய தினங்களில் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுக்கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுக்கூட உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019






