என் மலர்
வேலூர்
- தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
- 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
- சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
- விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று பா.ஜனதா மூத்த தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் மூழ்கும் கப்பலுக்கு சென்றுள்ளார். விஜயகாந்த் அரசியலில் நேர்மை, நாணயம், பெண்களுக்கு பாதுகாப்பு. தன் ரசிகர்களுக்கு, மக்களுக்கு பாதுகாப்பு என பேசி வந்தார். அவருடைய கட்சி இந்த முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது.
தொண்டர்களின் விருப்பம் என பிரேமலதா சொல்கிறார். தமிழக அரசியலில் கேப்டன் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த ஒரு கட்சி மூழ்கும் கப்பலில் கேப்டனாக போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது. நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.
27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. கிராமங்களுக்கான அதிகார பகிர்வை கொடுக்காமல் அவர்கள் எப்படி மாநில உ மைகள் பற்றி பேசுகிறார்கள். தோல்வி பயத்தால் இன்று மாநில சுயாட்சியை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளது. பெண்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காகத்தான்.
த.வெ.க. தலைவர் விஜய் வேலூர் வருகை தர இருப்பது குறித்து கேட்டதற்கு, அவர் வரட்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். எந்த உயிரும் போகக்கூடாது. உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். வேலூருக்கு பிரதமர் மோடி வருகிறார். அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க. கூட்டணிக்கு ஒரு கட்சி வந்து விட்டதால் தேசிய ஜனநாயக கூட டணிக்கு பெரிய இழப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அங்குள்ள காங்கிரஸ் அங்கேயே இருப்பார்களா? அல்லது விசிலிடம் போவார்களா? என தெரியவில்லை என கூறினார்.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது.
- வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.
வேலூர்:
விஐடி பல்கலைக்கழகத்தில், இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் வேலூர் கிளை சார்பில், " ஜிஎஸ்டி விதிமுறைகளை கையாளுதல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விழிப்புணர்வு மாநாடு இன்று நடைபெற்றது.
புதுடெல்லி ஐசிஏஐ மத்திய கவுன்சில் உறுப்பினர் பி.ராஜேந்திர குமார் சிறப்பு விருந்தினராக காணொலி வாயிலாகப் பங்கேற்று, ஜிஎஸ்டி துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மாநாட்டிற்கு தலைமை வகித்து விஐடி பல்கலைக்கழக செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி பேசும்போது, "ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியானது, மாணவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணத்தில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, வேலூர் கோட்ட ஜிஎஸ்டி உதவி ஆணையர் டி.பி. சுரேஷ் பேசும்போது, "நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றி வருகிறது. வருங்காலத் தலைமுறையினர் ஜிஎஸ்டி வரி நடைமுறைகளை தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்" என்றார்.
மாநாட்டில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள், 1000-க்கும் மேற்பட்ட வணிகவியல் துறை மாணவர்கள், 50 பட்டய கணக்காளர் சங்க மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விஐடி சமூக அறிவியல் மற்றும் மொழிகள் துறை முதன்மையர் வி.செல்வம், இணை முதன்மையர் சரிகா குப்தா, வணிகவியல் துறை தலைவர் எஸ்.உஷா ஆகியோர் பங்கேற்றனர்.
- வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
- அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் அடுத்த அகரம்சேரியில் வருகிற 23-ந்தேதி த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரிசீலனை செய்து அனுமதி வழங்குவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் நேற்று த.வெ.க. நிர்வாகிகளிடம் வழங்கினார்.
அதனை பூர்த்தி செய்து துணை போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கும்படி கூறினார்.
இந்த கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் குடிநீர், கழிப்பறை, மருத்துவம், வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் விஜய் வேலூருக்கு வருகை தருகிறார்.
அவரை வாகனத்தில் யாரும் பின்தொடர வேண்டாம், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வர வேண்டாம், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும், பாதிப்பும் இன்றி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சி.எம்.சி. டாக்டர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
மேலும் அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வந்தனர். அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் முன் பகுதியில் இருந்த கதவை இழுத்து பூட்டினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்து சோதனை செய்தனர். குடியிருப்பில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
முதற்கட்ட விசாரணைகள் கேரளாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் சி.எம்.சி.யில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
டாக்டருடன் தங்கி இருந்தவர்களுக்கும், டாக்டருக்கும் என்ன தொடர்பு இருந்தது என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சி.எம்.சி. வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
- தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை என்றார்.
வேலூர்:
வேலூர் ஸ்ரீ நாராயணி பீடம் 50-வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அதன்பின் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள கஞ்சா புழக்கத்திற்கு, மத்திய அரசுதான் காரணம் என்கிறார்.
இப்படியெல்லாம் சொல்வதற்கு பதில், காவல் துறையை என்னால் நிர்வகிக்க முடியவில்லை என ஸ்டாலின் கூறிவிடலாம்.
தன் தோல்வியை முதல்வர் ஒப்புக் கொண்டால், கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த ஆலோசனை சொல்கிறேன்.
தமிழக காங்கிரசில் ராகுல் அணி, ஸ்டாலின் அணி என இரு அணிகள் உள்ளன.
இரு கோஷ்டியினரும் மாறி மாறி ஜால்ரா போடுகின்றனர். தமிழக மக்களுக்காக சிந்திக்கக்கூட அவர்களுக்கு நேரம் இல்லை.
காங்கிரஸ் விஜயோடு கூட்டணியாகச் சென்றால், சிதம்பரம் புதிய கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என சொல்கின்றனர்.
இந்தியாவில் எப்படி காங்கிரஸ் என்ற கட்சி இல்லையோ, அதுபோல தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து எறும்பு அளவில் உள்ளது.
காங்கிரஸ் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஒரு கட்சி; அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே சான்று.
வரும் சட்ட சபைத் தேர்தலுக்குப் பின் தமிழக காங்கிரசார் நடுத்தெருவில் நிற்பர். சீட் கேட்பது மட்டுமல்ல, பண பேரமும் நடக்கிறது என தெரிவித்தார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
- தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார்,
வேலூர்:
வேலூர் மின் பகிர்மான வட்டம் வேலூர் மற்றும் இறைவன்காடு துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன் பஜார், சலவன்பேட்டை, ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம், கிருஷ்ணாநகர்,
பிஷப்ரோடு, கொசப்பேட்டை, ஓல்டுடவுன், சார்பனாமேடு, பி.டி.சி.ரோடு மற்றும் வல்லாண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை மின்வாரிய அதிகாரி ஆரோக்கியஅற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
- சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
- ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வருகை தந்தார்.
அவரை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மேயர் சுஜாதா ஆகியோர் வரவேற்றனர்.
கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 1,700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகரையும், 70 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியையும் தரிசனம் செய்தார்.
சீனிவாசா பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்த பின்னர் சொர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நட்டார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். தங்க கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி வருகையையொட்டி வேலூரில் டிடோரன்கள் பறக்க தடை செய்யப்பட்டது. வேலூர், அணைக்கட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தரிசனம் முடிந்ததும் ஜனாதிபதி மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.
- ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
- தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.
வேலூர்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.
தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.
அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.
- வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார்.
- படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது55), விவசாயி. இவரது மனைவி மல்லிகா(50). இவரது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22).
லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விகாஷ், ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே ஜானகிராமனுக்கு உதவியாக நர்சரி கார்டன் வைத்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு ஜானகிராமன் மற்றும் அவரது மகன்கள் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார். இதனை பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 மகன்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.
சிறிது நேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்த பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் (52), விவசாயி என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குப்பம்பட்டு கிராமத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது.
- வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது.
வேலூர்:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ந்தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது.
அவர் 4-ந் தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.
ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள்.
வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள்.
எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






