என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
    • நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    இந்த ஆண்டில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    204 வழக்குகளில் விசாரணை

    நெல்லை மாவட்டத்தில் நெல்லை உட்பட 4 தாலுகாக்களில் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களால் மொத்தம் 5 அமர்வுகளுடன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய சீனிவாசன் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமாகிய நசீர் அகமது முன்னிலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜீத வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி குமரேசன், மகளிர் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் செயலாளரும், சார்பு நீதிபதியுமாகிய இசக்கியப்பன், முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்தானம், 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வள்ளியம்மாள், நீதித்துறை நடுவர்கள் திருவெனி, ஆறுமுகம், விஜய்ராஜ்குமார், பாக்கியராஜ், கவிபிரியா, அருண்குமார் மற்றும் முரளிநாதன், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ், வக்கீல்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நில ஆர்ஜிதம் உள்ளிட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் 204 வழக்குகள் தீர்வு காணும் வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் அக்டோபர் 2019-ம் ஆண்டு பழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் வன காவலர் ஜெயலட்சுமி உயிரிழந்த வழக்கு தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நடைபெற்ற சமரச தீர்வில் ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புகை அளிக்கப்பட்டு அதற்கான காசோலை சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நசீர் அகமது தலைமையில் வழங்கப்பட்டது. இதே போல் மற்றொரு விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு ரூ.5 லட்சம் ரொக்க பணமும் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது.

    மொத்தமாக இன்றைய தினம் 2 விபத்துகளில் தொடர்புடைய வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு ரூ.42 லட்சம் இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினர் செயலர் நசீர் அகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நில ஆர்ஜித வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கான சமரச தீர்வு மையம் மூலம் 150 சிறப்பு நீதிமன்றம் இன்றைய தினம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 11,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகம் முழுவதும் எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசம் காணும் முயற்சி நடைபெறுகிறது.

    சாலை விபத்து, நில ஆர்ஜிதம் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 204 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு சாலை விபத்து தொடர்பான இரு வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.42 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை சிறப்பு நீதிமன்றம் மூலம் 4.5 லட்சம் வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிரா மத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதி யை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஈமச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
    • அங்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்கு கள் செய்து வருகின்றனர். அங்கு செல்வ தற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்கு நேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று இன்று ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்ப தற்கான பூஜை செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. அந்த கிரா மத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிக ளையும் ஆய்வு செய்துள்ளோம் என்றார். அப்போது செண்பக ராம நல்லூர் பஞ்சாயத்து தலை வர் முருகம்மாள், தி.மு.க. அவைத்த லைவர் செல்ல த்து ரை, நிர்வா கிகள் விநாயகம், மாடசாமி, அனுமார், புதுக்கு ளம் சிவா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான, வழக்கில் அவரது மேல் முறையீடு மனுவை குஜராத் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    நாங்குநேரியில் போராட்டம்

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் நாங்கு நேரி சட்டமன்ற தொகுதி காங்கிரசார் 500-க்கும் மேற்பட்டோர் நாங்குநேரி டோல்கேட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் பொரு ளாளர் ரூபி மனோகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ராகுல்காந்திக்கு இப்படியொரு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது, முற்றிலும் திட்டமிட்ட ஒரு செயல். பாராளுமன்றத்தில் ராகுல்காந்தியின் கேள்வி களுக்கு பதில் அளிக்க முடியாமல், அவர் தெரி விக்கும் குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ள முடியாமல், அவர் பாராளு மன்றத்துக்கு வருவதையே தடுக்கும் வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இப்படியொரு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல், மக்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்து பயந்து போய் இருக்கிறது மத்திய அரசு. அதனால்தான், ராகுல்காந்திக்கு எதிரான செயல்களில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

    ஜனநாயகத்துக்கு எதிரான, மக்கள் விரோத பா.ஜ.க. அரசை மக்கள் தூக்கி எறியும் நாள் நெருங்கி விட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள். மோடியை வீழ்த்திவிட்டு, ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மாலையில் அவர்களை விடுவித்தனர்.

    ஆலோசனை கூட்டம்

    இதற்கிடையே நேற்று மாலை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தல் தொடர்பான ஆலோனை கூட்டத்தை நடத்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திட்டமிட்டு இருந்தார்.

    சாலை மறியல் போ ராட்டத்தில் தொண்ட ர்களுடன் கைதாகி, திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டதால், ஆலோனை கூட்டம் நடத்த முடியாமல் போனது.

    ஆனாலும், அந்த ஆலோசனை கூட்டத்தில் பேச வேண்டிய விஷய ங்களை, கைதாகி அடைக்க ப்பட்டு இருந்த திருமண மண்டபத்திலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸர் கட்சியினர் எப்படி எதிர்கொள்வது? பூத் கமிட்டியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? என்பது விரிவாகப் பேசினார்.

    மேலும், காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு வட்டாரத் தலைவரும் தங்கள் பகுதியில் இதுதொடர்பான கூட்டம் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக அனை வரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் இலக்கு, அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவது ஒன்றுதான். அதற்காக ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டரும் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும், தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

    • வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.
    • ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை முதல்-அமைச்சர் அளித்துள்ளார் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியனில் உள்ள ஊராட்சி பகுதிகளில் உள்ளூர் நீராதாரத்தை வைத்து குடிநீர் பிரச்சி னையை உடனடியாக தீர்ப்பது தொடர்பான ஆலோ சனை கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி பேசியதாவது:-

    வள்ளியூர் யூனியனில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி மன்றங்களில் உள்ள சிறிய கிராமங்கள், வார்டு பகுதிகள், ஒன்றிய வார்டு பகுதிகள், மாவட்ட ஊராட்சி வார்டு பகுதிகள் அனைத்திலும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகத்தான் இந்த ஆலோசனைகூட்டம் நடத்தப்படுகிறது.

    குடிநீர் பிரச்சினை, ஆழ்துளை கிணறுகளின் தேவை, பைப்லைன் தேவை களை விரிவாக தெரிவி த்தனர். உங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நீர் ஆதாரங்கள், ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றை ஊராட்சி ஒன்றிய அதி காரிகள், பொறி யாளர்கள் ஆய்வு செய்து ஆழ்துளை கிணறுகளின் நீராதாரத்தை கணக்கிட்டு உடனடியாக குடிதண்ணீர் விநியோகம் செய்யும் நடவடி க்கையை தொடங்குவார்கள்.

    மோட்டார் இல்லாத ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்துவது, பழுதான மோட்டார்களை சரிசெய்து மாற்றுவது, பைப் லைன்களை சரி செய்வது, பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தரைமட்ட தொட்டிகளை பழுபார்ப்பது இது போன்ற அனைத்து பணிகளுக்கும் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவைகள் தவிர முன்னீர்பள்ளம் அருகே தாமிரபணி ஆற்றில் இருந்து ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்க ளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.605 கோடி நிதியை அளித்துள்ளார்.

    இது தவிர திசையன்விளை, மூலக்கரைப்பட்டி, பணகுடி, வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, திருக்குறுங்குடி பேரூராட்சிகளுக்கும் மற்றும் களக்காடு நகராட்சிக்கும் சேர்ந்து தனியாக குடிநீர் திட்டம் ரூ.423.13 கோடியில் தனியாக ஒரு திட்டத்திற்கு நிதியை தந்துள்ளார்கள்.

    ஆக மொத்தம் ராதாபுரம் தொகுதியில் குடிநீர் திட்டத்திற்கு மட்டும் ரூ.1,028 கோடியே 13 லட்சம் நிதியை நமது முதல்-அமைச்சர் அளித்துள்ளார். இந்த திட்டங்கள் இன்னும் 18 மாதங்களில் நிறைவே ற்றப்பட்டு உங்கள் வீடு களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வடக்கன் குளம், தனக்கர்குளம், காவல்கிணறு, செட்டிகுளம், லெவஞ்சிபுரம், கருங்குளம், ஆவரைகுளம் உள்ளிட்ட ஊராட்சி பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கவேண்டும், மின்விநியோகம் சீரமைக்க ப்படவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட தேவைகள் குறித்து பேசினர்.

    கூட்டத்திற்கு வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், பேரூராட்சி உதவி இயக்குனர் அனிதா, பொதுப் பணித்துறை செயற்பொ றியாளர் கனகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர் வளன்அரசு, பொதுப் பணித்துறை உதவி செயற் பொறியாளர் கென்னடி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர்.

    மேலும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து செல்கின்றனர். சில நாட்களாக மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வப்போது சூறாவளி காற்றும் வீசுகிறது.

    இந்நிலையில் பலத்த சூறாவளி காற்றால், மாஞ்சோலை ஊத்து தேயிலை தோட்ட பகுதியில் இருந்த செல்போன் கோபுரம் திடீரென முறிந்து அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மீது விழுந்தது. இதனால் செல்போன் டவர் சேதமடைந்து அப்பகுதியில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது.

    இதனால் அங்குள்ள பள்ளி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என அனைவரையும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    உடனடியாக நடவடிக்கை எடுத்து டவரை சரி செய்ய வேண்டுமென தேயிலை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர். இதேபோல் 2 நாட்க ளுக்கு முன்பு அங்கு சாலையின் குறுக்கே ராட்சத மரமும் முறிந்து விழுந்த நிலையில் அதை அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களே அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
    • பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளக்கூடாது.

    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக உள்ள பார்கள் மற்றும் சந்து, பொந்துகளில் மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வோம், பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், உழைக்கும் மகளிர் அனைவருக்கும் ரூ. 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் 2½ வருடங்கள் முடிந்த பின்னரும் இன்னமும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இது அவர்களது பாராளுமன்ற தேர்தல் வாக்கு வங்கியை பாதிக்கும். ஓட்டு வாங்கும் போது ஒரு கோரிக்கையை கொடுத்து விட்டு தற்போது அதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதனை தடுக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெங்களூருவில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது. அவர் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அந்த ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர்.

    திசையன்விளை, ஜூலை. 8-

    2022-23-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சர்வதேச ஒலிம்பியாட்

    இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர். இத்தேர்வை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் மாணவி லாவண்யா பாஸ்கர் தமிழ்நாடு பட்டியலில் 16-வது இடத்தையும், மாணவன் விஜய்குமார்ராய் 38-வது இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மேலும் மாணவி ஜெர்லின் 85-வது இடத்தை யும், மாணவி டீனா பாஸ்கர் 119-வது இடத்தையும், மாணவன் சந்தோஷ் சார்லஸ் 138-வது இடத்தை யும், மாணவி தியானா 161-வது இடத்தை யும், ஜெரோம் பொன்னையா 177-வது இடத்தையும், மாணவி ரக்சஷனா 258-வது இடத்தையும், மாணவன் நோவா 324-வது இடத்தையும், மாணவன் ஹா ராஜா 333-வது இடத்தையும், விபிஷ்னு ராஜகோபால் 339-வது இடத்தையும் பெற்று தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்களுக்கு பாராட்டு

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச ஒலிம்பியாட் தேர்வானையம் சார்பில் சான்றிதழ் வழங்கப் பட்டது.

    • 15-ந் தேதி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது.
    • 21-ந் தேதி ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் திருவிழாவான 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வீதி உலா வருதல் நடக்கின்றது.

    21-ந் தேதி மாலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் அம்பாள் சன்னதி முன்புள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அன்று அம்பாள் கர்ப்பிணி போல் அலங்கரிக்கப்பட்டு வயிற்றில் முளைகட்டிய பாசிபயிற்றை கட்டி வைத்து அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி சீமந்தம் சீர்வரிசைகள் செய்து அனைத்து வகை பலகாரங்களும் படைக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும்.

    இதில் கலந்து கொண்டு அம்பாள் மடியில் கட்டப்பட்ட முளைகட்டிய பாசிப்பயிரை வாங்கி சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

    • கடந்த சில மாதங்களாக சுரேஷுக்கு வயிற்று வலி இருந்து வந்தது.
    • கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார்குளம், கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (வயது22). இவர் சென்னையில் ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்று வலி தீரவில்லை. இதனால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 6-ந் தேதி இரவில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.

    இதுபற்றி அவரது தந்தை முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.
    • மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, உதவி ஆணையாளர் கவிதா செயல் அலுவலர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், பாளையங்கோட்டை பிரசன்ன விநா யகர் கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள 4 கோவில்களில் 5 ஜோடி களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

    • பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
    • சுகாதார அலுவலர்கள் தலைமையில் மாநகர பகுதி கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகரப் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டுள்ளார்.

    அதிகாரிகள் சோதனை

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் இறைச்சிகடை, மீன் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு சகஜமாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர பகுதியில் 4 மண்டலங்களிலும் சுகாதார அலுவலர்கள் தலைமையில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    வியாபாரிகளுக்கு அபராதம்

    அந்த வகையில் நெல்லை மண்டலத்தில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது நயினார் குளம் மார்க்கெட் முக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு சில கடைகளிலும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 15.500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடைகளுக்கு அபராதமாக ரூ. 4,600 விதிக்கப்பட்டது.

    • ராகுல் காந்தி மீது பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • போராட்டத்தின்போது காங்கிரசார் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    நெல்லை:

    கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

    எம்.பி. பதவி பறிப்பு

    இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பூர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதனால் அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். அதை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டை ராகுல் காந்தி நாடினார்.

    விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்ட னையை நிறுத்தி வைக்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லையில் போராட்டம்

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரசார் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மோடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் உருவப் பொம்மைக்கு தீயிட்டு கொழுத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு வந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹரிஹரன் மற்றும் போலீசார் உருவ பொம்மையை பறித்தனர். அப்போது அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    25 பேர் கைது

    இதை எடுத்து பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் தனசிங் பாண்டியன்,மாவட்ட பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் கெங்க ராஜ்,பிவிடி. ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, ரசூல் மைதீன் நிர்வாகிகள் வெள்ள பாண்டி, சின்ன பாண்டி,குறிச்சி கிருஷ்ணன் உள்பட 25 பேரை கைது செய்தனர்.

    ×