search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

    சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை

    • சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர்.

    திசையன்விளை, ஜூலை. 8-

    2022-23-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முதல் சுற்றில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று 11 மாண வர்கள் 2ம் கட்டத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    சர்வதேச ஒலிம்பியாட்

    இம்மாணவர்கள் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற சர்வதேச ஒலிம்பி யாட் தேர்வை கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை தேர்வு மையத்தில் எழுதினர். இத்தேர்வை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். இதில் மாணவி லாவண்யா பாஸ்கர் தமிழ்நாடு பட்டியலில் 16-வது இடத்தையும், மாணவன் விஜய்குமார்ராய் 38-வது இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மேலும் மாணவி ஜெர்லின் 85-வது இடத்தை யும், மாணவி டீனா பாஸ்கர் 119-வது இடத்தையும், மாணவன் சந்தோஷ் சார்லஸ் 138-வது இடத்தை யும், மாணவி தியானா 161-வது இடத்தை யும், ஜெரோம் பொன்னையா 177-வது இடத்தையும், மாணவி ரக்சஷனா 258-வது இடத்தையும், மாணவன் நோவா 324-வது இடத்தையும், மாணவன் ஹா ராஜா 333-வது இடத்தையும், விபிஷ்னு ராஜகோபால் 339-வது இடத்தையும் பெற்று தமிழ்நாடு மாநில அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்களுக்கு பாராட்டு

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சர்வதேச ஒலிம்பியாட் தேர்வானையம் சார்பில் சான்றிதழ் வழங்கப் பட்டது.

    Next Story
    ×