search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cemetery Road"

    • நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிரா மத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதி யை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஈமச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
    • அங்கு செல்வதற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாடு மூலமாக அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஈமச்சடங்கு கள் செய்து வருகின்றனர். அங்கு செல்வ தற்காக அந்த பகுதியில் சாலை அமைக்க பொது மக்கள் நாங்கு நேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வினிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கை யை ஏற்று இன்று ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்ப தற்கான பூஜை செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆரோக்கிய எட்வின் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர், இந்த மாத இறுதிக்குள் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். பணிகள் துரிதமாக நடை பெற்று வருகிறது. அந்த கிரா மத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் பணிக ளையும் ஆய்வு செய்துள்ளோம் என்றார். அப்போது செண்பக ராம நல்லூர் பஞ்சாயத்து தலை வர் முருகம்மாள், தி.மு.க. அவைத்த லைவர் செல்ல த்து ரை, நிர்வா கிகள் விநாயகம், மாடசாமி, அனுமார், புதுக்கு ளம் சிவா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
    • மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார்.

     அவினாசி:

    அவினாசி அருகே மயான சாலையை மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் இராமநாதாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி தாலுகா அலுவல்கத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால மயானத்திற்கு செல்லும் வழியில்லாத நிலை ஆகிவிட்டது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மயான சாலையை மீட்டுத் தரவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×