search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லை கோவில்களில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- மேயர் சரவணன் நடத்தி வைத்தார்
    X

    சந்திப்பு சாலைகுமாரசுவாமி கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணத்தை மேயர் சரவணன் நடத்தி வைத்தார்.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நெல்லை கோவில்களில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- மேயர் சரவணன் நடத்தி வைத்தார்

    • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.
    • மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் உள்ள கோவில்களில் ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண விழா இன்று நடைபெற்றது.

    நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு பீரோ, கட்டில் மற்றும் சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரிய தர்ஷினி, உதவி ஆணையாளர் கவிதா செயல் அலுவலர் ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் சந்திப்பு வரதராஜபெருமாள் கோவில், பாளையங்கோட்டை பிரசன்ன விநா யகர் கோவில் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள 4 கோவில்களில் 5 ஜோடி களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

    Next Story
    ×