என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார்.
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலத்துடன் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி தொடங்கிய பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியட்டாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல் வெளிக்கு வந்த நம்பெருமாள்

    மாலை 6 மணிவரை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இன்று (31-ந்தேதி) அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக்கொள்ளையனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார்.

    வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்படாள் வாசல்வழியே மணல்வெளிக்கு வந்துவிடு வதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை.

    10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    • தி.மு.க. அரசு அமைந்த பிறகு, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் வரவில்லை.
    • வெள்ள நிவாரண தொகை போதாது, தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களூக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பது தெரியவரும். அ.தி.மு.க. தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமையும். புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.

    உலக முதலீட்டாளர் மாநாட்டை ஏற்கனவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார். அதில் எந்த பயனும் தெரியவில்லை. புதிய தொழிற்சாலை வந்ததாக சொல்கிறார்கள். அவை அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை.

    தி.மு.க. அரசு அமைந்த பிறகு, தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புதிய தொழிற்சாலைகள் வரவில்லை.

    நிர்வாக திறமையற்ற அரசாங்கம் உள்ளதால், மிச்சாங் புயலின்போது உரிய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை. இதனால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.

    கனமழை பெய்து கொண்டிருந்த போதே, தாமிரபரணியில் தண்ணீரை திறந்து விட்டதால் 2 லட்சம் கனஅடி தண்ணீர் புகுந்து பல பேர் உயிரிழந்து உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நான் சென்று ஆய்வு மேற்கொண்டபோது எந்த உதவியும் கிடைக்கவில்லை, எந்த அமைச்சரும் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தி.மு.க. ஆட்சி, பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்ற ஆட்சியாக உள்ளது.

    வெள்ளம் வந்து மக்களுக்கு இவ்வளவு பெரிய துன்பம் ஏற்பட்டபோதும் கூட, முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார். இவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார்.

    வெள்ள நிவாரண தொகை போதாது, தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்க வேண்டும். சென்னையில் கடலில் எண்ணெய் மிதப்பதால் மீன் பிடி தொழில் செய்ய முடியாமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கும் நிவாரண தொகை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

    அ.தி.மு.க.வின் வயது 51 ஆகிவிட்டது. எனவே அதில் மாற்றம் செய்ய தேவை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • வேட்பாளராக களமிறங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், பொருளாளர் ஜி.ராஜன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மிச்சாங் புயல் ஏற்படுத்திய வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொருள்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால தேவையை உணர்ந்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு உதவிட வேண்டும். வடகிழக்கு பருவமழையின் மிக அதிதீவிர மழை பொழிவினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, பாரிவேந்தரும், ரவி பச்சமுத்துவும், தங்கள் சொந்த செலவில் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கிய தற்காக பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. பாரிவேந்தர் எம்.பி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.
    • தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டது குறித்து சுற்று சூழல் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:-

    அமோனியா கசிவு ஏற்பட்ட நிலையில் 15 நிமிடத்தில் ஆலை நிர்வாகம் அதனை சரி செய்துள்ளது. இந்த வாயு கசிவால் 18 பேர் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக அப்பகுதிக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சென்று, பரிசோதனை நடத்தினர்.

    அப்போது அப்பகுதியில் பூஜ்யம் சதவீதம் அமோனியா இல்லை என்று கண்டறியபட்டது. எனவே விபத்து ஏற்பட்ட போதிலும் அது உடனடியாக சரிசெய்யபட்டது.

    அந்த தனியார் தொழி சாலை ரெட் கேட்டகிரியில் உள்ளது. இதே போல ரெட் கேட்டகிரியில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். அதே சமயம் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது, அதனை தடுக்க நவீன தொழில்நுட்ப அம்சங்கள் உடனடியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பது குறித்து ஒரு குழு அமைத்து வல்லூனர்கள் உதவியுடன் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

    இரவில் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் அங்கு உள்ளனர். மேலும் அந்த தனியார் கம்பெனி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. சல்ப்யூரிக் ஆசிட் பிளாண்ட் மட்டும் உடனடியாக மூட முடியாது என்பதால் படிப்படியாக மூடும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. எதிர் காலத்தில் இது போன்று விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்ன நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்பதை விரைவில் அறிவிப்போம். அங்கு மட்டும் அல்லாமல், நிரந்தர தீர்வை எட்டும் வகையில் இந்த ஆய்வு தமிழக முழுவதும் நடை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    * 4 மாவட்டங்கள் உற்பத்தி திறன் இழந்துள்ளது.

    * தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    * மழை வெள்ளத்தால் தமிழக அரசுக்கு படிப்பினை இல்லை.

    * மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.
    • தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    திருச்சி:

    பெரியார் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவும், விளிம்பு நிலை மக்கள் வலிமை பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் பெரியார். சனாதானத்தை நமது பகை தொடர்ந்து வேரறுப்பது மூலமே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என உலகுக்கு உணர்த்திய அவரது அரசியலை நீர்த்துப் போவதற்கு சில சனாதான சக்திகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

    தொடர்ந்து அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சனாதான சக்திகளை விரட்டி அடிப்போம் என பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்கோடு செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பொருட்டாக மதிப்பதில்லை, அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லை. அவர்கள் விரும்பியது போல சட்ட மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது.

    மக்கள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள். வருகிற 29-ந் தேதி தமிழக, முழுவதும் ஏ.வி.எம். எந்திர வாக்குப் பதிவு முறையை மாற்றி வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்.


    சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கணக்கில் கொண்டு திருச்சியில் நடைபெற இருந்த 'வெல்லும் சனநாயக மாநாடு' தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி இறுதி வாரத்தில் மாநாடு நடைபெறும்.

    முதலமைச்சரை சந்தித்த பின்பு எந்த நாள் என்பதை அறிவிப்போம். அமைச்சர் பொன்முடி வழக்கை முனைப்போடு எதிர்கொள்வதற்கு தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். சட்டப்படி உரிய தீர்வை பெறுவார்கள்.

    பா.ஜ.க.வை சார்ந்தவர்கள் ஊழலை குறித்து பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். சி.ஏ.ஜி. மெகா ஊழல் வெளியாகி உள்ளது. இந்திய ஊடகங்கள் இதைப் பற்றி பேசவில்லை. முன்பு இல்லாத வகையில் இந்த ஆட்சி ஊழலில் முன்மாதிரியான ஆட்சியாக உள்ளது.

    ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய 900 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கி உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு வழங்குகிற நிதி. ஆனால் பாதிப்புக்கு ஏற்றார் போல புயல் மழைக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை.

    அதை பா.ஜ.க. அரசு பொருட்படுத்தவே இல்லை. ரூ.21,000 கோடி கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் சிறப்பு கூடுதல் நிதி ஒரு பைசா காசு கூட வழங்கவில்லை.

    வழக்கம் போல ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நிதி வழங்கிவிட்டு தாங்கள்தான் அதில் கரிசனம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்வது போன்ற முயற்சி ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி நிர்மலா சீதாராமன் பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பிரதமராக எண்ணிக்கொண்டு பேசுகிறது போல தொணியை ஏற்படுத்துகிறார். எந்த வகையில் ஏற்புடையது அல்ல.

    இந்த பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
    • நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.

    இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.

    முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.

    அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.

     வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

     வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.

    சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

    • திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானத்தை ஓட்டி வந்த விமானிகள், சக்கரங்களை வெளியே வரச்செய்யும் பொத்தானை இயக்கினர்.
    • தைரியமாக விமானத்தை தரை இறக்குமாறு, விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினந்தோறும் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் இரவு 10.20 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு திருச்சி வந்தடைந்தது.

    திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள், சக்கரங்களை வெளியே வரச்செய்யும் பொத்தானை இயக்கி உள்ளார். சக்கரம் வெளியே வந்தபோது, அதனை கவனித்த விமானிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. காரணம் பின்பக்கத்தில் உள்ள இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பினர்.

    பரபரப்பான கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள், உடனடியாக விமானம் தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். தீயணைப்பு வண்டி உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக தயார் நிலைக்கு வந்தது.

    இதனை தொடர்ந்து, தைரியமாக விமானத்தை தரை இறக்குமாறு, விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானிகளும் சாதுர்யமாக செயல்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கினர். விமானம் ஓடுபாதையை தொட்ட உடனேயே விரைவாக வேகத்தை குறைத்து விமானத்தை தொடர்ந்து தரையில் ஓட விடாமல் நிறுத்தினர். பின்னர் மெதுவாக விமானத்தை இயக்கி பயணிகள் இறங்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    இதனால் அதில் பயணம் செய்து வந்த 180 விமான பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டதோடு, விமானியையும் கைத்தட்டி பாராட்டி உள்ளனர்.

    இந்த விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்ல இயலாததால் அதில் பயணம் செய்ய காத்திருந்த 176 பயணிகளும் திருச்சியில் தங்க வைக்கப்பட்டனர். மலேசியாவில் இருந்து புதிய டயர்கள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு, தரையிறங்கிய விமானத்தில் பொருத்தப்பட்டது. அதன் பின்னர் ஒரு நாள் தாமதமாக அந்த விமானம் 135 பயணிகளுடன் மலேசியா புறப்பட்டு சென்றது.

    டயர் பஞ்சரான நிலையில் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாள்.
    • திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காது காப்பு, ரத்தின அபயஹஸ்தம், விமான பதக்கம், முத்துமாலை, பவள மாலை, காசு மாலை, ரத்தின அடுக்கு பதக்கங்கள் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    • தலைமறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.
    • வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகள் செயல்பட்டு வந்தன.

    இந்த நகைக்கடை நிர்வாகத்தினர் அறிவித்த கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தில் பொதுமக்கள் நம்பி பல கோடி முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், முதிர்வுத் தொகையைத் தராத நகைக்கடை நிர்வாகத்தினர் திடீரென நகைக்கடைகளை மூடியதால் முதலீடு செய்தவர்கள் அந்த கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து திருச்சி, மதுரை, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் முதலீட்டாளர்கள் அளித்த புகாரின்பேரில், ரூ.100 கோடி வரையில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சி, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, தஞ்சை, நாகர்கோவில் உள்ளிட்ட 11 இடங்களில் உள்ள அந்த மோசடி நிறுவனத்தில் நகைக்கடைகளில் அதிரடி சோதனை நடந்தி 22 கிலோ வெள்ளி, 1, 900 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 711 ரொக்கம் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நகைக்கடை உரிமையாளர் மதன் அவரது மனைவி கார்த்திகா, மேலாளர் நாராயணன் ஆகிய 3 பேர் மீது மோசடி செய்தல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி செய்தல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நகைக்கடை மேலாளர் நாராயணன் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தலை மறைவாக இருந்த நகைக் கடை உரிமையாளர் மதன், மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 7-ந் தேதி சரணடைந்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்ற அனுமதியுடன் டிசம்பர் 18-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நகைக்கடை உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகாவை திருச்சி, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, மதுரை முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

    அவரிடமிருந்து ரூ. 52,000 ரொக்கம் மற்றும் 2 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அந்தத் தொகையை திருப்பி வழங்க மோசடி நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெரும்பாலான சொத்துக்கள் அடமானத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை மீட்டு பறிமுதல் செய்யும் முயற்சியிலும் இறங்கி உள்ளனர்.

    அதேபோன்று கடைகளுக்கு அட்வான்ஸ் கொடுத்த தொகை சுமார் ரூ.3 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. ஆகவே அந்த தொகையையும் கைப்பற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ரூ. 100 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் பறிமுதல் செய்ய இருக்கும் சொத்துக்களின் மதிப்பு வெகு குறைவாக உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    ஆகவே வெளிநாடுகளில் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த உள்ளனர்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
    • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    • கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டு தோறும் கொண்டாடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தார்.
    • நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் பொன்மொழியைக் கூறி உலகத்தை ஆட்கொள்ள வந்த அன்புத் தந்தை இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டு தோறும் கொண்டாடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவினை சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை, நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்த உள்ளார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×