என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. It is said to be hovering in the sky for an hour.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    விமானத்தின் ஹைட்ராலிக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால், அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்க முடியவில்லை. இதன் காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விமானம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. விமானத்தில் எரிபொருள் குறைந்த பிறகு அதனை தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்துக்கும் அதிக ஆம்புலன்ஸ்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், நான்கு தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன.

    • அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.
    • அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன்.

    திருச்சி:

    திருச்சியில் பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    3-வது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது.

    இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை.

    தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் பந்தயம் நடப்பதற்கு முன்னேற்பாடுகளை தொடர்ந்து கவனித்த உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார். தமிழக காவல்துறை இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாதிகளையும் கைது செய்யவில்லை.

    கஞ்சாவை தவிர வேறு எந்த ஒரு போதைப் பொருளையும் தமிழக காவல்துறை பிடித்ததாக தெரியவில்லை. எந்த வகையிலும் தோற்றுப் போன அரசாக திமுக ஆட்சி உள்ளது. 2026-ல் மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.

    ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு.

    அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் தற்போது தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறையும் உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம்போட முடியாத நிலை தமிழகத்தில் அடுத்த மூன்றுமாதத்தில் உருவாகும், நிர்வாக திறன்மையின்மைக்கு மத்திய அரசு குறைசொல்வதை ஏற்கமுடியாது.

    அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். தி.மு.க. என்பது இந்து விரோத அமைப்பு தான். அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். பேட்டியின் போது மாவட்ட தலைவர் ராஜசேகரன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் முரளி, ஸ்ரீராம் சங்கர், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
    • கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

    மணப்பாறை:

    மணப்பாறையை அடுத்த வடுகபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் வயிற்று வலி ஏற்பட்டு மணப்பாறையில் உள்ள காமராஜர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றர்.

    டாக்டர்கள் அவரை ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளும்மாறு கூறினர்.

    அந்த பெண்ணிற்கு ஸ்கேன் செய்து பார்த்த போது வயிற்றில் கர்ப்பபை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த கர்ப்பபை கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றிட வேண்டும் என்ற நிலையும் இருந்தது.

    இதனிடையே அந்த பெண்ணின் ரத்தத்தின் அளவு 4 எச்.பி. புள்ளி மட்டுமே இருந்துள்ளது. சராசரியாக 10 க்குள் மேல் இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை உணர்ந்த மருத்துவக்குழுவினர் இதுதொடர்பாக குடும்பத்தினரிடம் பேசி அந்த பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தொடர் சிகிச்சை முறைகளை தொடர்ந்தனர்.

    மேலும் ரத்ததின் அளவை அதிகரிக்க 4 யூனிட் ரத்தமும் அந்த பெண்ணிற்கு செலுத்தப்பட்டு உடல் நிலையை மேம்படுத்துவதற்கான அனைத்து சிகிச்சை முறைகளும் சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மீண்டும் ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்ட போது 11 புள்ளிகளை கடந்ததுடன் உடலும் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு தேறி வந்ததை அறிந்து நேற்று அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிட மருத்துவக்குழுவினர் முடிவு செய்தனர்.

    அதன்படி தலைமை மருத்துவர் தமிழ்மணி மேற்பார்வையில் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் மஜிதா, விஜயா மயக்கவியல் மருத்துவ நிபுணர் மலைதுரை, அறுவை சிகிச்சை அரங்க செவிலியர்கள் அம்சவள்ளி, ராஜலெட்சுமி, ஜோன் ஆப்ஆர்க் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை தொடங்கினர்.

    சில மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப்பின் பெண்ணின் வயிற்றில் இருந்த பிரமாண்ட அளவிலான 5 கிலோ கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் அறுவை சிகிச்சைக்குப்பின் உள்ள மருத்துவ அறைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    குறைந்த அளவு உடலில் ரத்தம் இருந்ததோடு 5 கிலோ எடையுள்ள கட்டி வயிற்றில் இருந்ததால் கடும் அவதிக்கு ஆளாகி வந்த வந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவில் எந்தவித செலவுமின்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அசத்தி உள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.

    ஏற்கனவே இதுபோன்ற அறுவை சிகிச்சை மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டாலும் கூட 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனித்துவம் பெற்று வருகின்றது.

    அரசு மருத்துவமனை என்றால் அலட்சியம் நிறைந்து இருக்கும் என்று சொல்லப்படும் நிலையில் பெண்ணுக்கு 5 கிலோ கட்டி கடும் சவாலான நிலையில் அகற்றி இருப்பது தான் சிறந்து வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    • உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருச்சி:

    லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முதல் வருகிற 8ம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.

    திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கோடைக்கு இணையான வெப்பதாக்குதலை மக்கள் சமாளித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு ஆறுதலை அளித்தது. திருச்சியில் வெயில் வாட்டி வதைத்தது பின்னர் மாலையில் கரு மேகங்கள் திரண்டு ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. மாலை 6 மணி அளவில் திருச்சி மாநகர பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது.

    திருச்சி மத்திய பஸ் நிலையம், ஜங்ஷன் ,தில்லை நகர், பொன்மலை, கொட்ட ப்பட்டு, விமான நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், மலை க்கோட்டை, உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. எதிர்பாராத இந்த மழையின் காரணமாக மார்க்கெட் மற்றும் வெளியிடங்களுக்கு சென்ற மக்கள் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு செல்ல நேரிட்டது.

    திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழை நீர் குளம் போல்தேங்கியது.

    இடி மின்னல் காரணமாக திருச்சி மன்னார்புரம் சுப்பிரமணியபுரம் கொட்டப்பட்டு பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது உப்பிலியபுரம் பகுதியில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது உப்பிலியபுரம் வெங்கடாசலபுரம் மாரடி ,கோட்டப்பாளையம், வைரிச்செட்டிப்பாளையம், பி மேட்டூர், புளியஞ்சோலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அய்யாற்றில் செந்தண்ணீர் கரைபுரண்டு ஓடியது மேலும் உப்பிலியபுரம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    இரண்டாம் குறுவைநெல் சாகுபடி அறுவடை தொடங்கியுள்ள நிலையில் இந்த மழையால் அறுவடை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 719.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதில் அதிகபட்சமாக மணப்பாறை பகுதியில் 76.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு;-

    கள்ளக்குடி 30.2, லால்குடி 49, நந்தியாறு அணைக்கட்டு 70, புள்ளம்பா டி 33.4 , தேவி மங்கலம் 7.2, சிறுகுடி 18.8 , வாத்தலை அணைக்கட்டு 4.2 ,பொன்னணியாறு அணை 35, கோவில்பட்டி 39.2, மருங்காபுரி 64.2 , முசிறி 16, புலிவலம் 8 , தாப்பேட்டை 10, நவலூர் கொட்டப்பட்டு 1, துவாக்குடி 17.2 ,கொப்பம்பட்டி 40, தென்பர நாடு 20, துறையூர் 25, பொன்மலை 44.2 , திருச்சி ஏர்போர்ட் 55, திருச்சி ஜங்ஷன் 36, திருச்சி டவுன் 19. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 29.97 மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது.

    இந்த மழையின் காரணமாக திருச்சியில் வெப்பம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    • அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.
    • பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    துவாக்குடி:

    திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி குருவான மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார்.

    இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

    இங்கு இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா தொடங்கியது. முதல் நாள் ஜெய் அகோர காளி சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு பூசிகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

    நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ர யாகத்தின் போது அகோரி குருவான மணிகண்டன், ருத்ராட்ச மாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் இட்டு யாகபூஜை செய்தார்.

    இந்த யாகபூஜையின் போது சக அகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும், சங்கு நாதங்கள் முழங்கியும், மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து ஜெய் அகோர காளி, ஜெய் அஷ்ட காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது.

    இதில் பெண் அகோரிகள் உட்பட தமிழகம் மற்றும் வடமாநில பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகிற 7-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் ஒரே நேரத்தில் 9 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    திருச்சி பாரதிதாசன் சாலை, மேலப்புதூர், மன்னார்புரம், சிங்காரத்தோப்பு, கருமண்டபம், கே.கே. நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளுக்கும், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 2 கல்லூரிகளுக்கும் அலுவலக மெயிலுக்கு நேற்று காலை 7.30 மணியளவில் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

    அதில் வெடிகுண்டு வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மதனகோபால் என்ற ஐ.டி.யில் இருந்து இந்த மெயில் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து போலீசார் அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விடுமுறை விடப்பட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பள்ளி மற்றும் ஆச்சாரியா, காட்டூர் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவை தவிர்த்து மிரட்டல் விடுக்கப்பட்ட 6 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கு இ.மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பள்ளி கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மர்ம நபரை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
    • கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் மோகன். கடந்த 2002-ம் ஆண்டு மோகனின் தந்தை கணேசன் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரிடமிருந்து லால்குடி மங்கம்மாள் புரத்தில் உள்ள 94 செண்டு நிலத்தை கிரயம் பெற்றுள்ளார்.

    மோகன் தனது தந்தையின் பெயரில் வாங்கி இருந்த நிலத்திற்கு உண்டான பட்டாவில் கிருஷ்ணசாமி என்பதற்கு பதிலாக கிருஷ்ணமூர்த்தி என்று தவறுதலாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த மார்ச் 5 தேதி லால்குடி உதவி கலெக்டருக்கு விண்ணப்பித்தார்.

    விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்து லால்குடி துணை தாசில்தாருக்கு அனுப்பி உள்ளார். இதனிடையே தான் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் தனது வேலை முடியாத காரணத்தால் மோகன் லால்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த துணை தாசில்தார் ரவிக்குமாரை சந்தித்தார்.

    அப்போது தனது மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு துணை தாசில்தார் ரவிக்குமார் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உங்களது மனுவை பரிந்துரை செய்து அனுப்புவதாக சொல்லியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மோகனின் மனுவை பரிந்துரை செய்ய முடியும் என ரவிக்குமார் கண்டிப்புடன் கூறியுள்ளார். தாலுகா அலுவலகத்தில், மோகனிடமிருந்து 20 ஆயிரம் லஞ்சம் பணத்தை ரவிக்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையின் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் ரவிக்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

    இதன் காரணமாக லால்குடி தாலுகா அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது. கைதான துணை தாசில்தார் ரவிக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே காட்டூரில் மான்போர்ட் தனியார் சி.பி.எஸ்.இ. உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 3000 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு காலாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறக்கப்படும் நிலையில் அதிகாலை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

    பள்ளி இ மெயில் முகவரிக்கு வந்த தகவலில் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாகவும், மதியம்1 மணிக்குள் இந்த வெடிகுண்டு வெடித்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பள்ளியின் முதல்வர் ராபர்ட் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விரைந்து வந்தனர். திருச்சி வெடிகுண்டு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் தலைமையில் சுமார் 7 பேர் மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகத்திற்குள் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர்

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் காரணத்தினால் திறக்கப்பட வேண்டியிருந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மேலும் சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். ஸ்வேதா பாலகிருஷ்ணன் என்ற பெயரில் இந்த இமெயில் பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோலி கிராஸ் பள்ளி, கல்லூரி, கேம்பியன் ஸ்கூல், சமது மேல்நிலைப்பள்ளி, கேகே நகர் ஆச்சார்யா ஸ்கூல், புனித வளனார் பள்ளி உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சி.பி.எஸ்.இ. பள்ளி தவிர்த்து இதர பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. ஆனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் ஹோலி கிராஸ் கல்லூரி இன்று செயல்படுகிறது.

    எனவே வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் பாம் டிடெக்டர் கருவியுடன் இக் கல்லூரியில் அங்குலம் அங்குகலமாக சோதனை செய்து வருகின்றனர்.

    மாணவிகள் யாரும் வகுப்பறையில் இருந்து இருந்து வெளியேற்றப்படவில்லை. சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    கே.கே. நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    ஒரு பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவர் 9,140 சிகரெட்டுகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.1.55 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே விமானத்தில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வாசனை பொருட்களை மறைத்து எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.47 ஆயிரம். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக விமானம் மூலமாக வெள்நாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவை கடத்தல் குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    • மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் லிங்கநகர் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்போது மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்காரணமாக அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அந்த மது கடை மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து மதுக்கடையை மீண்டும் மூடுவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததால் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஸ்குமார் தலைமையில் லிங்கநகர் மதுபான கடை அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்காததால் மக்களை கலைந்து போகும்படி தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும் அ.ம.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்பு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்பட 100-க்கும் மேற்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், தன்சிங், ராமமூர்த்தி, வண்ணை லதா, ஹேமலதா, பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ்குமார், கமுருதீன், முன்னாள் கவுன்சிலர் கதிரவன், மதியழகன், கருப்பையா, உமாபதி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன்,

    குப்புசாமி, சங்கர் பாலன், அணி செயலாளர்கள் பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவகுமார், தண்டபாணி, வக்கீல் பிரகாஷ், ஜான் கென்னடி, என்.எஸ். தருண், சாந்தா, நாகூர் மீரான், நல்லம்மாள், கல்லணை குணா, மலைக்கோட்டை சங்கர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் கழக மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார்.
    • 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான்.

    பெரம்பலுார்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இதை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து விஜய் ஏற்கனவே கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இதை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். நேற்று அவர் பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

    விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டிற்கு குடும்பத்துடன் வர வேண்டும். கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், பெண்களை மாநாட்டிற்கு பாதுகாப்புடன் அழைத்து வரவேண்டும்.

    கட்சியின் தலைவர் விஜய் தான் உங்களை மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்க என்னை அனுப்பி வைத்துள்ளார். எனவே மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். கட்சியின் முதல் அரசியல் மாநாடு வெற்றி மாநாடாக தான் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    கட்சிக்கு உண்மையாக உழைப்பவா்களுக்கு மட்டும் தான் பதவிகள் வழங்கப்படும். அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும் மக்களுக்கு சேவை செய்து கொண்டு நலத்திட்டம் கொடுத்த இயக்கம், கட்சி என்று சொன்னால் அது தமிழகம் வெற்றிக்கழகம் தான். இப்போது விஜய் உச்சத்தில் இருப்பதால் கட்சிக்கு பலர் வருவார்கள். அவர்களை வரவேற்கிறோம். வர வேண்டாம் என்று சொல்லவில்லை.

    ஆனால், 32 ஆண்டுகளாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவர்கள் நீங்கள்தான். உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தலைவர் விஜய் வந்து நிற்பார். தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும்.

    எனவே, சந்தேகப்பட வேண்டாம். எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிறகுதான். காசு, பணம் இருந்தாலும் ரசிகர்களை மீறி எதுவும் நடக்காது. ஒரே ஒரு தொண்டனாக இருந்தாலும் சரி, தோழனாக இருந்தாலும் சரி, அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கைவிடப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக அரியலூரில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேசுகையில், அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுக்கு வரும்போது கவனமாக வருகை தர வேண்டும். 2026-ல் கட்சித் தலைவர் விஜய்யை தமிழக முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    ×