திருச்சி, நாகை, சிதம்பரம், கடலூர் மாவட்டங்களில் துணை முதலமைச்சர் 3 நாள் சுற்றுப்பயணம்

திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.
திருச்சி, நாகை, சிதம்பரம், கடலூர் மாவட்டங்களில் துணை முதலமைச்சர் 3 நாள் சுற்றுப்பயணம்
Published on

திருச்சி:

திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகிறார்.

இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடையும் அவர் மாலை 4 மணிக்கு கார் மூலமாக துறையூர் புறப்பட்டு செல்கிறார்.

பின்னர் மாலை 5.30 மணிக்கு துறையூர் ஆஸ்பத்திரி சாலை ரத்னா காம்ப்ளக்ஸில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 5.45 மணிக்கு துறையூர் திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் எம்.பி., கே.என். அருண் நேருவின் அலுவலகத்தை திறக்கிறார்.

மாலை 6 மணிக்கு துறையூர் பஸ் நிலையம் பகுதியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

பின்னர் துறையூர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செல்கிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் வி.பி.என். திருமண மண்டபத்தில் நடைபெறும் மீனவர் அணி துணை செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

அதன் பின்னர் காலை 11 மணிக்கு நாகப்பட்டினம் அவுரி திடலில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

மதியம் 12 மணிக்கு நாகப்பட்டினம் ஏ.எஸ்.ஏ. திருமண மஹாலில் திமுக சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மயிலாடுதுறை சிக்னேச்சர் திருமண மண்டபத்தில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல் நிகழ்ச்சியாக கடலூர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி கம்மியம்பேட்டையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குகிறார். காலை 11:15 மணிக்கு கடலூர் துறைமுகம் சங்கரன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக காலை 11. 45 மணிக்கு கடலூர் துறைமுகம் எம்.எம்.எம். திருமண மண்டபத்தில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு கடலூர் அண்ணா நகர் சி.கே. பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்குகிறார் பின்னர் மாலை 4:30 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் கலந்து கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com