என் மலர்
நீங்கள் தேடியது "doctor attack"
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மருத்துவர் தாக்கதப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவர் தாக்கதப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைதொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
- ஒருநாள் வேலை நிறுத்தத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு அறிவித்துள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கும் பணியின்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கொல்கத்தா ஆர்.ஜி. கெர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் அரசு மருத்துவ சங்கத்தினருடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை 4 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
அதன்படி, நாளை மாலை 6 மணி வரை ஒருநாள் வேலை நிறுத்தத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, எமர்ஜென்சி மருத்துவ சேவையை தவிர்த்து, பிற அனைத்து மருத்துவ சேவை பிரிவுகளும் ஒருநாள் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, விக்னேஷ் கத்தியால் தாக்கியதில், தலை, கழுத்த, காது, முதுகு உள்ளிட்ட இடங்களில் மருத்துவர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.
அப்போது, மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
- மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- விக்னேஷ் மீத 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் ஆர்.என். ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
டாக்டர். பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். 7 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் மருத்துவர் மீதான கத்திக்குத்து தாக்குதலை கண்டித்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காலை 10 மணி வரை பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து எதிரொலியாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பொது சிகிச்சைக்காக புறநோயாளிகள் அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
அனுமதிச்சீட்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் மருத்துவர்கள் வராததால் நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதில் தாமதம் ஏற்பட்டது.
புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்களுடன் நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் புகுந்து அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். 7 இடங்களில் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து கிண்டி கலைஞர் மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர் பாலாஜி எங்களிடம் சகஜமாக பேசினார்.
- டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர் மீது வாலிபர் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினார். கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் டாக்டரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
டாக்டர் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
* கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பாலாஜி எங்களிடம் சகஜமாக பேசினார்.
* பாலாஜிக்கு பொருத்தப்பட்ட பேஸ்மேக்கரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
* இன்று மதியத்திற்கு பின்னர் டாக்டர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனியறைக்கு மாற்றப்படுவார்.
* டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* மருத்துவ கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* அரசு ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பு குறித்து கூட்டு தணிக்கை நடத்தப்படும்.
* நோயாளியுடன் வருவோருக்கு டேக் பயன்பாடு சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தார்.
- டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது.
- நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
சென்னையில் அரசு டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டார். டாக்டர் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் சார்பில் இன்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டம் இன்று நடந்தது. குமரி மாவட்டத்திலும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் புறநோயாளிகள் பிரிவு வழக்கம்போல் செயல்பட்டது. நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இன்றி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை கூடங்கள் வழக்கம்போல் செயல்பட்டது. ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் மாவட்டத்திலுள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் விக்னேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- எந்த விதமான சூழலிலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றிய மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே ஆஸ்பத்திரியில் தாம்பரத்தை அடுத்துள்ள புதுபெருங்களத்தூரை சேர்ந்த பிரேமா என்பவர் சிகிச்சை பெற்றுள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மகன் விக்னேஷ் உடனிருந்து கவனித்துள்ளார். தனது தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவ விவரங்கள் பற்றி முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் இவர் கருதினார்.
இதைத்தொடர்ந்து அவர் மருத்துவர் பாலாஜியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் தலை, உடல், கழுத்து உள்பட 7 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மருத்துவர் பாலாஜிக்கு அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு மருத்துவர் பாலாஜியை சக மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில் வாலிபர் விக்னேசை சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். கிண்டி போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
விக்னேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாய் பிரேமா, கிண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவர் பாலாஜி முறையான சிகிச்சை அளிக்காமல் திட்டியதாலேயே ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தினேன் என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.
இதைதொடர்ந்து வாலிபர் விக்னேஷ் மீது கடுமையான 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கைதான அவரை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு 11 மணி அளவில் புழல் சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு கடந்த ஆண்டு ஐ.பி.சி. சட்டப்பிரிவுகளுக்கு பதிலாக புதிதாக பி.என்.எஸ் சட்டப் பிரிவுகளை உருவாக்கி அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்டப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது.

அந்த சட்டப்பிரிவுகளின் படியே மருத்துவரை சரமாரியாக குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட வாலிபர் விக்னேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பி.என்.எஸ்.109 கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகள் பாய்ந்துள்ளதால் வாலிபர் விக்னேசுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தொவித்து
உள்ளனர். மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பி.என்.எஸ் 126(2) அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்.
115(2) திட்டமிட்டு தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்துதல்.
118(1) ஆபத்தான ஆயுதங்களால் தாக்கி கொடுங்காயத்தை ஏற்படுத்துதல்.
121(2) அரசு பணியில் இருப்பவரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்து தாக்குதலில் ஈடுபடுதல்.
109 (கொலை முயற்சி) 351 (3) நேரில் மிரட்டி எச்சரிக்கை விடுத்தல்.
இந்த 6 சட்டப்பிரிவுகள் தவிர 2008-ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ சட்டப்பிரிவான பிரிவு 3-ன் கீழும், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின் கீழ் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் விக்னேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகள் அனைத்தும் ஆஸ்பத்திரியில் மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டப் பிரிவுகள் என்றும், இதனால் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எளிதாக ஜாமீன் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது,
அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறவருபவர்கள் பொறுமையை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்றும், எந்த விதமான சூழலிலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. ஆஸ்பத்திரிகளில் வன்முறை சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் அவர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கிண்டி சம்பவத்தை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைதான வாலிபர் விக்னேஷ் கூறியிருப்பதை கிண்டி ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் முழுமையாக மறுத்து உள்ளனர்.
இது தொடர்பாக கூறியுள்ள அவர்கள், புற்று நோய் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த விக்னேசின் தாய் பிரேமாவுக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
- மருத்துவ ஊழியர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஸ்கேன், மெட்டல் டிடெக்டர் பரிசோதனையின் சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவத்தையடுத்து அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட விருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கத்திக்குத்தால் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜியை இன்று நேரில் பார்த்து நலம் விசாரித்தேன். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு ஏற்கனவே பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன் செயல் பாடுகளை அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மருத்துவர் பாலாஜி பிற்பகலில் கட்டணம் செலுத்தும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மருத்துவர் பாலாஜி மிகச் சிறந்த மருத்துவர். அவருக்கு இன்னும் 5 ஆண்டுகள் பணிக்காலம் உள்ளது. இந்த பணிக்காலத்தையும் கிண்டி ஆஸ்பத்திரியிலேயே செய்ய வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்கள்.

டாக்டர் பாலாஜி மீது கொடுமையான தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 126 (2) அத்துமீறி நுழைதல், 115 (2) காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுதல், 118 (1) ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், 121 (2) பணியில் இருக்கும் பொது ஊழியருக்கு காயம் ஏற்படுத்துதல், 109 கொலை முயற்சியில் ஈடுபடுதல், 351 (3) உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காயத்தை ஏற்படுத்தி மிரட்டுதல் என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மருத்துவ ஊழியர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அரசோடு இணைந்து மருத்துவ கட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சேவை ஆகியவை பாதித்து விடக்கூடாது என்பதில் மருத்துவர்களும் கவனமாக இருப்பதற்கு பாராட்டுக்கள்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவ மனைகளில் காவல் மற்றும் சுகாதாரதுறை இணைந்து பாதுகாப்புக் குறித்து கூட்டுத் தணிக்கை நடத்தப்பட வேண்டும்.
36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசு மருத்துவ மனைகள் மற்றும் வட்டார மருத்துவமனைகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும். மருத்துவமனைகளில் தேவையான வெளிச்சம், மற்றும் விளக்குகள் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணி சார்ந்த பணியாளர்கள் காவல் உதவி என்கிற செயலியை அவர்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை முறைப்படுத்த பார்வையாளர் அடையாள அட்டை முறை அமல்படுத்தப்படும்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வெளி நோயாளிகள் பிரிவு செயல்படுகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். எனவே ஸ்கேன், மெட்டல் டிடெக்டர் பரிசோதனையின் சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் மருத்துவரின் சிகிச்சை முறையில் குறைசொல்ல எந்த முகாந்திரமும் இல்லை. விக்னேஷின் தாயார் புற்று நோய் முற்றிய நிலையில் இருக்கிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கிறார்கள். இருந்தாலும் தாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வெறியால் இந்த செயலில் விக்னேஷ் ஈடுபட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அவருக்கு கடுமையான தண்டனை பெற்று தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
- இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி:
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவ மனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் எரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முன்பு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் இந்திய மருத்துவ கழகம் ஆகியோர் இணைந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்து மருத்துவர்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் என்று கோரிக்கையை முன் வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் மருத்துவர் அருளீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மூத்த மருத்துவர்கள் அஷ்ரப், குணசேகரன், இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் முகேஷ் மோகன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
- 16 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
- மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணை தலைவர் மற்றும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாசம் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மருவத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர் மீது தாக்குதல் சம்பவங்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு5 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் 16 ஆண்டுகள் ஆகியும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் மீது மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் குற்றவாளிகள் அதிகார பலம், ஆள் பலம் மிக்கவர்களாக உள்ளதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நேற்று மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மீது எந்த வழக்கு போடுவது என்று தெரியாத அளவிற்கு காவல் துறையினர் உள்ளனர்.
எந்த மருத்துவரும் தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவது இல்லை. இனி வரும் காலங்களில் அரசு மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் போய்விடும்.
தற்போது நடைபெற்ற சம்பவத்திற்கு தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசியது பாராட்டுக்குரியது. இனி வரும் காலங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் 12 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .15 நாட்களுக்குள் குற்ற நகல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
மேலும் மருத்துவமனையில் முக்கிய இடங்களுக்கு மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் குற்றம் செய்யும் நபர்கள் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து எங்கள் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது இந்திய மருத்துவ சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சாது பகத்சிங், செயலாளர் குமார், தலைவர் தேர்வு மோகனசுந்தரம் ,துணைத் தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






