என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று இரவு தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.



    சிறப்பு அலங்காரத்தில் தாயமங்கலம் முத்து மாரியம்மன்.

     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரி யம்மன் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா விழா கடந்த 29-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது.

    இைதயொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண் பானை, கரும்பு தொட்டில் கட்டி வருதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதல் களை நிறைவேற்றினர்.

    ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நீண்ட வரிசையில் நின்று முத்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று (வியா ழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு மின் அலங்கார தேரோட்டம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை பால்குடம், ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8-ந்தேதி (சனிக்கிழமை) தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன்செட்டியார் மற்றும் அலுவலர் கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


    • சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    • இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

    • மாரியம்மன் கோவில் பங்குனி விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெறும்.

    விழாவையொட்டி அம்மன் கையில் காப்புகட்டும் பூஜை நடந்தது. நாளை (5-ந்தேதி) திருவிளக்கு பூஜையும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா 6-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, வேல் குத்துதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி லட்சுமணராக்கு சுவாமிகள், செர்டுபாண்டி, போதும் பொண்ணு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்ைக மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. காப்பு கட்டிய நாள் முதல் காலை, மாலை நேரங்களில் லட்சார்ச்சனை, 108 சங்காபிஷேகம், பால், தயிர், மஞ்சள் மற்றும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக பூச்சொரிதல் விழா நடந்தது. இதையொட்டி நயினார்வயல் அகத்தீசுவரர் கோவிலில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு பல வகையான பூக்கள் அடங்கிய தட்டுகளை எடுத்து வந்தனர். பின்னர் கோட்டூர் முத்துமாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    பங்குனி உற்சவ விழா முளைப்பாரி திருவிழாவில் இன்று இரவு அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. நாளை காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.

    • திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்றன.
    • இந்த போட்டியில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குமாரபேட்டை கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவையொட்டி 5 ஊர் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 69-வது ஆண்டாக பாரம்பரிய மஞ்சு விரட்டு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்றது.

    இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 16 காளைகள் நிராகரிக்கப் பட்டு 274 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் 2 குழுவாக காளைகளை பிடித்தனர். முன்னதாக வயல்வெளிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகியநாச்சி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டு மனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, பொதுமக்களிடம் இருந்து 367 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு தலா ரூ.6ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டிலான தையல் எந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார்.

    2021-22-ம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மணிமேலை விருது வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 சமுதாய அமைப்பி னர்களுக்கு மொத்தம் ரூ.4லட்சத்திற்கான ரொக்கத்தொகை மற்றும் சான்றிதழ் என மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 90ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை பஸ் நிலையம் அருகே போலீசார், ெபாதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
    • நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதையொட்டி தேவகோட்டை நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேவகோட்டை நகருக்கு வரும் பொதுமக்கள் நலன் கருதி தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள காவல் உதவி மையத்தில் தேவகோட்டை நகர் காவல் துறையால் நீர்-மோர் வழங்கும் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் நீர்-மோர் பந்தலை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி உசேன், நமச்சிவாயம், தவமுனி, வைரம், தினகரன், கலா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். நீர்பந்தலில் மோர், சர்பத், ரோஸ் மில்க் ஆகிய 3 வகையான குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

    ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் நீர்-மோர் பந்தலுக்கு சென்று குளிர்பானங்களை வாங்கி பருகி சென்றனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையும் வரை நீர் பந்தல் தொடர்ந்து செயல்படும் என போலீசார் தெரிவித்தனர். பொது மக்களின் தாகத்தை தீர்க்க மாவட்டத்திலேயே முதலில் தேவகோட்டை நகரில் தான் காவல்துறை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

    • வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
    • இறந்த மயில்களின் அருகில் விஷம் கலக்கப்பட்ட உணவு மற்றும் நெல்மணிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவர் சென்னையில் தங்கியிருந்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்த ஊரில் வயல்கள் உள்ளன. ஊர் திருவிழாவை முன்னிட்டு சில நாட்களுக்கு சேகர் சித்தானூருக்கு வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சேகர் தேவகோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மயில்களின் அருகில் விஷம் கலக்கப்பட்ட உணவு மற்றும் நெல்மணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மயில்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தேவகோட்டையில் 10-க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடை பெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட் டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

    ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டிகள் தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காட்டாம்பூர் கண்மாய் நடுவே நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைக்க முயற்சி செய்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தல் உள்ளது. இந்த கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்கள் பாசனம் பெற்று விவசாயம் நடந்து வருகிறது.

    இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் வீட்டுமனை போடப்பட்டு உள்ளது. அதற்கு பாதை இல்லாத காரணத்தினால் கண்மாயின் நடுவே அவர் சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முக வடிவேல் மற்றும் வருவாய் துறையினரிடமும் புகார் செய்தனர்.

    அதன்பேரில் சேர்மன்சண்முக வடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இதைத்தொடர்ந்து சேர்மன் சண்முக வடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்தார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டது.

    திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் ஆய்வு செய்து கண்மாய் நடுவே சாலை அமைக்க முயன்ற தனி நபர் மீது புகார் செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாயில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

    • பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகங்கை காப்பகத்தில் இருந்து தப்பிய 2 சிறுமிகளை தேடி வருகிறார்கள்.
    • பொறுப்பாளர் ஜெயா சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்படும் வருகிறது. இந்த காப்பகத்தில் ஆதர வற்ற குழந்தைகள் தங்கி இருந்து படித்து வருகின்ற னர். மேலும் குற்ற வழக்கு களில் கைதான மைனர் சிறுமிகள் கோர்ட்டு அனுமதி யுடன் இங்கு தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

    இந்த காப்பகத்தில் கடந்த மாதம் காரைக்குடி போலீ சார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலையில் கழிவறை செல்வ தாக கூறிவிட்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் பின்புறம் உள்ள சுவர் மீது ஏறி அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்ப கத்தின் பொறுப்பாளர் ஜெயா இதுதொடர்பாக சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 2 சிறுமிகளும் எங்கு உள்ளனர்? என்று விசா ரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று கருதுவதால் போலீசார் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வேறு எங்காவது சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருது கின்றனர். அதனடிப்படை யிலும் சிறுமிகளை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    ×