என் மலர்
சிவகங்கை
- திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.
- மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
- சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.
சிவகங்கை:
சிவகங்கையில் சமூகநலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நீதிமன்றங்கள் அனுமதியோடு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமியும், தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2-ந் தேதி அதிகாலை காப்பகத்தில் இருந்து சுவர்ஏறி குதித்து தப்பி சென்றுவிட்டனர்.
சிறுமிகள் இருவரும் மாயமானது குறித்து விடுதி காப்பக பொறுப்பாளர் ஜெயா, சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மாயமான சிறுமிகளை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமிகள் இருவரையும் மீட்டு சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- தேவகோட்டை பெருமாள் கோவில் தேர் பவனி நடந்தது.
- விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகரில் பழமையான கோதண்டராம சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கருடசேவை, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று காலை பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் தேர்பவனி நடந்தது.
பெருமாள் கோவில் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா நாமம் சொல்லி தேர் இழுத்தனர். தேர் முன்பாக பக்தர்கள் மங்கள இசை, மேளதாளத்துடன் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தபோது குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
- தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிவகங்கை
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.
- சிவகங்கை, காளையார்கோவில் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வேளாண்மை-உழவர்நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் ரூ.81 லட்சம் செலவிடப்பட்ட இரு தரிசு நில தொகுப்புகள் மாங்குடி மற்றும் மேலமருங்கூர் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்டப்பணிகளில் நிலுவை இனங்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 லட்சம் நிதி செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 30 ஏக்கர் பரப்பில் நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை, காளை யார்கோவில் வட்டாரங்களில் சுந்தரநடப்பு மற்றும் பருத்திக் கண்மாய் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பசுமைப் போர்வை திட்டத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2.65 லட்சம் மரக்கன்றுகள் முழுமையாக ரூ.39.75 லட்சம் மானியத்தில் 531 எக்டேர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்திக்கண்மாய் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மகாகனி மற்றும் ரோஸ்உட் மரக்கன்றுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த 50சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறிகள் 200 எண்கள் 1.94 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது. இதில் பருத்திகண்மாய் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்ட இனகவர்ச்சி பொறியை ஆய்வு செய்து பருத்தி கண்மாய் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பண்ணைக் கருவிகள், விசைத்தெ ளிப்பான் மற்றும் விதைப்பு செய்யும் கருவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம் (வேளாண்மை), அழகுமலை (தோட்டக்கலைத்துறை), வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் இந்திரா, சண்முகநதி, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் வளர்மதி, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புரவி எடுப்பு விழா நடந்தது.
- மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.வைரவன்பட்டி மகிழம்பூ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளப்பட்டது.
புரவி எடுப்பு நாளில் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவிப் பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புரவிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடலில் இருந்து புரவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு 2 பெரிய புரவிகளைத் தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோயில் சென்றடைந்தது. இதில் கே.வைரவன்புட்டி மற்றும் அதன் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
- அய்யனார் கோவில் சேமக்குதிரைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
- அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் செல்லும் சாலையில் அலங்காரக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோவில் உள்ளது. இதன் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சேமக் குதிரை சிலை, அய்யனார், மடப்புரம் காளி, மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. 2-ம் கால பூஜை முடிந்து பூர்ணாகுதி நடைபெற்றதும் கடம் புறப்பாடு நடைபெற்றது. சேமக் குதிரைக்கும், அதன் மீது எழுந்தருளியுள்ள அய்யனார் சுவாமிக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை காண கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் உள்ள சோனையா சுவாமி, மாயாண்டி சுவாமி மற்றும் அய்யனார் சுவாமிக்கும் மகாஅபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கார் வேன்களில் சென்ற ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அய்யனார், சோனையா சுவாமிகளையும், சேமக் குதிரையையும் தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை மானாமதுரை ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச்சங்கத்தின் தலைவரும், கோவில் பரம்பரை நிர்வாக அறங்காவலருமான காளீஸ்வரன் செய்திருந்தார்.
- மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நாளை நடக்கிறது.
- பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.

பாலகுருசாமி
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர் வர்த்தக சங்க தலைவரும், சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பாலகுருசாமி. இவர் மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகில் கீழமேல்குடி ரோட்டில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் அமைத்துள்ளார்.
இதன் திறப்பு விழா நாளை (9-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு வர்த்தக சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குத்து விளக்கேற்றி திறந்து வைக்கிறார்.
இதில் வர்த்தக சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், மானாமதுரை நகர் வர்த்தகர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்க தலைவர், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் பாலகுருசாமி செய்து வருகிறார்.
புதிதாக திறக்கப்பட உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தரமான முறையில் கிடைக்கும்.
- தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மின்விளக்கு அலங்கார தேரோட்டம் நடந்தது.
- திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் 8 -ம் நாளில் மின்விளக்கு அலங்காரத் தேரோட்டம் நடந்தது.
இந்த கோவிலில் நடை பெற்று வரும் பங்குனி திருவிழாவில் பொங்கல் வைபவத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிலில் திரண்டு விடிய, விடிய தீச்சட்டி எடுத்தும், குழந்தை களுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும், ஆடு கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டும், மாவிளக்கு பூஜை நடத்தியும் நேர்்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
நேற்று முன்தினம் இரவு நடந்த தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் முத்து மாரியம்மன், சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடாகி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினார்.
சம்பிரதாய பூஜைகள் முடிந்து இரவு 8 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோவிலைச் சுற்றி வந்து தேர் நிலை சேர்ந்தது. தேரோட்ட விழாவில் கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பங்குனித் திருவிழாவின் 9-வது நாளான ேநற்று காலை பால்குடம், மாலை யில் ஊஞ்சல் உற்சவம், இரவு பூப்பல்லக்கில் முத்து மாரியம்மன் பவனி வருதல் நடந்தது.
- தேவகோட்டை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
- மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.

மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் வள்ளியப்ப செட்டியார் ஊரணி வடக்கு வீதியில் சாரதா நகரில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் பங்குனி பெருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அப்போது அம்மனுக்கு காப்பு கட்டு நிகழ்ச்சியும், பிறகு மாலை சக்தி கரகம் எடுத்தாலும் நடைபெற்றது.
அன்றைய நாளில் தாய மங்கலம் முத்துமாரியம்மன் அலங்காரமும், புதன்கிழமை மீனாட்சி அம்மன், வியாழக்கிழமை காமாட்சி அம்மன், வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அம்மன் போன்ற அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று இரவு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்ய பாக்கியம் வேண்டியும், தடையின்றி குடும்பத்தில் சகல சுப நிகழ்ச்சிகள் நடக்க வும், மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் பெண்கள் மற்றும் மாண விகள் கலந்து கொண்ட னர்.
அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசா தங்கள் வழங்கப்பட்டது. வருகின்ற 10-ந் தேதி பூச்செரிதல் விழாவும், 11-ந் தேதி முளைப்பாரி எடுத்து சுற்றி வருதல், 12-ந் தேதி பால்குடம், பூக்குழி இறங்கு தலும், மாலையில் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது.






