என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
    • கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தினந்தோறும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு வேலை தொடர்பாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். புளியால் சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    பயணிகள் நிழற்குடை அருகே ஆக்கிரமிப்பாலும், எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் நிழற்குடை மேல் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நிழற் குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நிழற்குடையின் மேல் உள்ள பிளக்ஸ் போர்டையும் அருகில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நிழல் தரும் வகையில் அமைந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • 49 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை யில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊன முற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்தி றனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 331 மனுக்கள் பெறப்பட்டன.

    வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பயனா ளிகளுக்கு பல்வேறு வகை யான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

    திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தீ விபத்தால் இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் , காரைக்குடி வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

    செபாஸ்டின் என்பவர் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்த போது கொரோ னாவால் உயிரிழந்ததை யொட்டி, அவரது வாரிசு தாரரான மனைவிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.5 லட்சம், தேவகோட்டை வட்டத்தைச் சார்ந்த ஜெகதீசுவரன் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.1லட்சம் என மொத்தம் ரூ.8லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சாக்கோட்டை ஊராட்சியைச் சார்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை உள்ளிட்ட மொத்தம் 49 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.

    • சிவகங்கை அருகே காவல்துறை சார்பில் மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகர், வட்டத்தை சேர்ந்த 7காவல் நிலையங்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் கலைவாணி, எஸ்.எஸ்.கோட்டை அந்தோணி செல்லத்துரை, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் டவுன், நாச்சியாபுரம், கண்டவராயன்பட்டி திருக்கோஷ்டியூர் கீழச்சிவல்பட்டி எஸ்.எஸ்.கோட்டை மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுகளுக்கு, புகார்தாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களுக்கு கடந்த 3தினங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டு அந்த மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பத்தூர் செல்வபிரபு, பாலகிருஷ்ணன், சிவாஜி பாண்டியன், விஜய்,பெரியசாமி, கலையரசன், சாமுண்டீசுவரி, சேதுபாமா மற்றும் போலீசார் பங்கேற்று விசாரணை மேற்கொண்டனர். முகாமில் 300 மனுக்கள் விசாரணை மேற்கொண்டதில் 105 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    • பணிச்சுமையால் மன அழுத்தத்தில் உள்ள போலீசாருக்கு மாதம் ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
    • இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    போலீசார் பல காவல் நிலையங்களில் விடுமுறையின்றி இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இந்த பணி சுமை அவர்களுக்கு மன அழுத்ததை தருகிறது. இதனால் போலீசாருக்கு மன அழுத்த நோய், சர்க்கரை நோய், காலில் நரம்பு சுருள் நோய் (வெரி கோஸ்)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    திருவிழா காலங்கள், அரசு மற்றும் அரசியல் விழாக்களில் போலீசார் நீண்ட நேரம் பணியமர்த்தப்படுவதால் அவர்கள் இந்த வகை நோய்களால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடும்பங்களை சரிவர கவனிக்க முடியா மலும், உடல் நிலையில் கவனம் செலுத்த முடியா மலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை விடுமுறையானது சில இடங்களில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.

    அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் முதல்-அமைச்சர் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி மாதந் தோறும் காவல் நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் மாதம் ஒரு முறையாவது பணியில் இருக்கும் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று காவலர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மானாமதுரையில் பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறக்கப்பட்டது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கீழமேல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு சூப்பர் மார்கெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    பாலகுருசாமி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவருமான எஸ்.பாலகுருசாமி வரவேற்றார். இதில் பேரமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு மாநில, மண்டல, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை நகரில் மிகபெரிய சூப்பர் மார்க்கெட் இதுவாகும். இங்கு அனைத்து மளிகை பொருட்கள் முதல் வீட்டு உபயோகபொருட்கள் முழுவதும் ஒரேஇடத்தில் வாங்கிச்செல்ல முடியும். மதுரையில் இருந்து தினமும் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு தரமான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது என்று சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் எஸ்.பாலகுருசாமி தெரிவித்தார்.

    • மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

    சிவகங்கை:

    சிவகங்கையில் சமூகநலத்துறை சார்பில் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் நீதிமன்றங்கள் அனுமதியோடு தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமியும், தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 2-ந் தேதி அதிகாலை காப்பகத்தில் இருந்து சுவர்ஏறி குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    சிறுமிகள் இருவரும் மாயமானது குறித்து விடுதி காப்பக பொறுப்பாளர் ஜெயா, சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க சுரேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    மாயமான சிறுமிகளை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பல இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறுமிகள் இருவரும் நாகப்பட்டினம் அருகே கீழ்வேலூர் கிராமத்தில் ஒரு சிறுமியின் நண்பர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சிறுமிகள் இருவரையும் மீட்டு சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • தேவகோட்டை பெருமாள் கோவில் தேர் பவனி நடந்தது.
    • விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை நகரில் பழமையான கோதண்டராம சுவாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று கருடசேவை, யானை, குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று காலை பெருமாள் தேரில் எழுந்தருளினார். அதன் பின்னர் தேர்பவனி நடந்தது.

    பெருமாள் கோவில் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா நாமம் சொல்லி தேர் இழுத்தனர். தேர் முன்பாக பக்தர்கள் மங்கள இசை, மேளதாளத்துடன் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தபோது குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

    சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வி.ஏ.ஓ. பதிவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிவகங்கை

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ராஜன் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் வரவேற்று பேசினார். மாநில பொது செயலாளர் சந்தான கிருஷ்ணன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    விவசாயத்துறை பணியான அக்ரி ஸ்டாக் பணியை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயப்படுத்த கூடாது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட செயல்படாத சிம்கார்டுகளை திரும்ப பெற்று அதற்கு பதிலாக அனைவருக்கும் இணையதள சேவை செலவின தொகையாக மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர் பதவியை மீண்டும் டெக்னிக்கல் பதவியாக அறிவிக்க வேண்டும். தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருவாய் கணக்குகள் தனியாக உள்ளதற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை அதிகப்படுத்த வேண்டும்.

    சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சான்றுகள் வழங்குதல் தொடர்பான களப்பணி விசாரணைக்கு சென்று வருவதற்கு வசதியாக அரசு மூலம் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். எரிபொருள் செலவினம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வுகளுக்கு பட்டப்படிப்பை அடிப்படை கல்வி தகுதியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர்கள் செல்வன், பாண்டியன், விஜயராஜ், மாநில அமைப்பு செயலாளர் அசோக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்றல் தமிழோசை நன்றி கூறினார்.

    • சிவகங்கை, காளையார்கோவில் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் காளையார்கோவில் வட்டாரங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல்துறை ஆகியவைகளின் திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை-உழவர்நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 43 தரிசு நிலத்தொகுப்புகளில் 330 எக்டேர் பரப்பில் முட்புதர்கள் நீக்கி போர்வெல் அமைத்து மின் இணைப்புடன் கூடிய மின்மோட்டார் அமைத்தல், நுண்ணீர் பாசனம், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், பழக்கன்றுகள் நடவு செய்தல் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தில் அரசு மானியமாக இதுவரை ரூ.3.5 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    இதில் ரூ.81 லட்சம் செலவிடப்பட்ட இரு தரிசு நில தொகுப்புகள் மாங்குடி மற்றும் மேலமருங்கூர் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, திட்டப்பணிகளில் நிலுவை இனங்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து சாகுபடி திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.8 லட்சம் நிதி செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 30 ஏக்கர் பரப்பில் நெல் தரிசில் உளுந்து சாகுபடிக்கென மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக சிவகங்கை, காளை யார்கோவில் வட்டாரங்களில் சுந்தரநடப்பு மற்றும் பருத்திக் கண்மாய் கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    பசுமைப் போர்வை திட்டத்தில் பயன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.2.65 லட்சம் மரக்கன்றுகள் முழுமையாக ரூ.39.75 லட்சம் மானியத்தில் 531 எக்டேர் பரப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்திக்கண்மாய் கிராமத்தில் நடவு செய்யப்பட்டுள்ள மகாகனி மற்றும் ரோஸ்உட் மரக்கன்றுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தென்னையில் காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்த 50சதவீத மானியத்தில் இனக்கவர்ச்சி பொறிகள் 200 எண்கள் 1.94 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கபட்டுள்ளது. இதில் பருத்திகண்மாய் கிராமத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நிறுவப்பட்ட இனகவர்ச்சி பொறியை ஆய்வு செய்து பருத்தி கண்மாய் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் பண்ணைக் கருவிகள், விசைத்தெ ளிப்பான் மற்றும் விதைப்பு செய்யும் கருவிகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (வேளாண்மை) தனபாலன், துணை இயக்குநர்கள் பன்னீர்செல்வம் (வேளாண்மை), அழகுமலை (தோட்டக்கலைத்துறை), வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர்கள் இந்திரா, சண்முகநதி, வேளாண்மை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் வளர்மதி, செந்தில்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புரவி எடுப்பு விழா நடந்தது.
    • மகிழம்பூ அய்யனார் கோவில் சென்றடைந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கே.வைரவன்பட்டி மகிழம்பூ அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி ஒரு மாதத்திற்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டு குலாளர்களால் புரவிகள் செய்யப்பட்டது. கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டு விரதம் மேற்கொள்ளப்பட்டது.

    புரவி எடுப்பு நாளில் குதிரைகள் ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடல் புரவிப் பொட்டலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு இரவு முழுவதும் கோலாட்டம், கும்மியாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. புரவிகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    ஊர் நடுவேயுள்ள அய்யனார் திடலில் இருந்து புரவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு 2 பெரிய புரவிகளைத் தொடர்ந்து சிறிய புரவிகளுடன் 50-க்கும் மேற்பட்ட மதலைகள் நேர்த்திக்கடனாக மகிழம்பூ அய்யனார் கோயில் சென்றடைந்தது. இதில் கே.வைரவன்புட்டி மற்றும் அதன் சுற்றப்புர கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×