search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு வண்டி பந்தயம்
    X

    பந்தயத்தில் சீறிச்செல்லும் மாடுகள். 

    மாட்டு வண்டி பந்தயம்

    • தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.

    போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×