search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invasive"

    • பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.
    • கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் கிராமத்தில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து தினந்தோறும் மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் தேவகோட்டை, காரைக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள பல்வேறு வேலை தொடர்பாகவும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகிறார்கள். புளியால் சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து வசதிக்காக இந்த பஸ் நிறுத்தத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.

    பயணிகள் நிழற்குடை அருகே ஆக்கிரமிப்பாலும், எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் நிழற்குடை மேல் பிளக்ஸ் போர்டு இருப்பதாலும் பயணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நிழற் குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகாரிகள் நிழற்குடையின் மேல் உள்ள பிளக்ஸ் போர்டையும் அருகில் உள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி மாணவ- மாணவிகள் மற்றும் பெண்களுக்கு நிழல் தரும் வகையில் அமைந்தால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து கட்டிய நிழற்குடை பயன்பாட்டிற்கு வரும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் ராசாமணி உத்தரவிட்டார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் ராசாமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ராசாமணி கூறியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி களிலும் சாலை பாதுகாப்பு அமைப்பு தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவுப்படி உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், நீர் நிலை புறம்போக்கில் செங்கல்சூளை, விவசாயம் போன்ற பணிகள் செய்யப்பட்டு இருந்தாலும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள காவிரி நீரை ஏரி, குளங்களில் நிரப்புவதற்கு முழுவீச்சில் செயல்பட வேண்டும். ஏரி, குளங்களில் நீர் நிரப்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பயன்பாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) சங்கரநாராயணன், துணை கலெக்டர் கமல்கிஷோர் உள்பட மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×