என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • காயங்களுடன் இருந்த வெளிநாட்டு பறவை மீட்கப்பட்டது.
    • அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குதிரைப்பாதை சாலை அருகே கழிவு நீர் கால்வாயில் ஒரு வெளிநாட்டு பறவை காயங்களுடன் நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட சமூக ஆர்வலர் அய்யப்பன் அதனை மீட்டு தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரத்த காயங்களுடன் இருந்த அந்த பறவைக்கு மருத்துவர் கவீன் சிகிச்சை அளித்தார். இந்த பறவை பற்றி மருத்துவர் கூறுகையில், பாலைவன பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் இதுபோன்ற பறவைகளை காணலாம். இமயமலைக்கு வடக்கே ஆசியாவிலும், இந்தோனேசியா மற்றும் சில பசிபிக் தீவுகளிலும் இந்த பறவை காணப்படும் என்றார். இந்த பறவையை மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறை அலுவலர் சங்கையாவிடம், சமூக ஆர்வலர் அய்யப்பன் ஒப்படைத்தார். அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தனித்துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய்த்துறை, வேளாண்துறை, மருத்துவத்துறை, கால்நடைத்துறை, பள்ளிக் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த குறித்த தகவல்களை பயனாளிகளுக்கு தெரிவித்தனர். முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் கண்ணதாசன், வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • குடிநீர் ஊரணியை தூய்மைப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
    • உறுப்பினர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணி குடிநீர் ஊரணியானது சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    காவிரி கூட்டு குடிநீர் வராத சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க இதிலிருந்து தண்ணீர் எடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்சமயம் இந்த ஊரணி முழுவதும் பாசம் படிந்துள்ள காரணத்தினால் அதனை போக்கும் விதமாக கட்லா, ரோகு, சிசி, கெண்டை முதலிய ரகங்களை சேர்ந்த சுமார் ரூ.16 ஆயிரம் மதிப்பீட்டிலான 4000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

    ஊரணியில் ஏற்பட்டுள்ள பாசங்கள் முற்றிலுமாக அகற்றும் நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    இந்த பணியில் பேரூராட்சி மன்ற சேர்மன் அ.புசலான், செயல் அலுவலர் வே.கணேசன், இளநிலை உதவியாளர் சேரலாதன்,வார்டு உறுப்பினர் கண்ணன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ஆறாவயல் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 22 ஆம் ஆண்டு குதிரை மற்றும் மாட்டுவண்டி பந்தயம் இன்று காலை நடைபெற்றது.

    இரு பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் கும்பகோணம் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த13 மாட்டு வண்டிகளும், 13 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன. பெரியமாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கு போக வர 8 மைல் தூரமும் சென்று வந்தன.

    பெரியமாடு பிரிவில் முதலாவதாக வெளிமுத்தி வாகினி, 2-வதுவெட்டிவயல் சுந்தரேசன், 3-வது பீர்க்கலைக்காடு, வாளரமாணிக்கம் மாடுகள் பரிசு பெற்றன. சின்னமாடு பிரிவில் முதலாவது ஆலத்துபட்டி, 2-வது கண்டதேவி மருதுபிரதர்ஸ், வெளிமுத்தி வாகினி, 3-வது கோட்டையூர் மாட்டுவண்டிகள் பரிசு பெற்றன. குதிரை வண்டி பந்தயத்தில் முதலாவது உஞ்சனை புதுவயல், 2-வது கார்குடி தேவர்மகன் குனா, 3-வது ஆறாவயல் காளிதாஸ் குதிரை வண்டிகள் வெற்றி பெற்றது.ஆறாவயல் காரைக்குடி சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையாக நின்று கண்டு களித்தனர். வெற்றி பெற்ற மாடுகளுக்கும், குதிரைகளுக்கும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • கல்லல், சாக்கோட்டை, காரைக்குடியில் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், கல்லல், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் தற்போது அனைத்து அலுவல கங்களிலும் ஆண்டாய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி கல்லல், சாக்கோட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஒவ்வொரு பிரிவைச் சார்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும், இ-சேவை மையம், நிலஅளவை பிரிவு, வட்ட வழங்கள் பிரிவு ஆகிய பிரிவுகளிலும், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    நிதிநிலை மற்றும் அலுவ லகங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், கூடுதல் கட்டிடங்கள், பயனற்ற நிலையில் உள்ள கட்டிடங்கள், அலுவலர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.

    வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, பகுதி வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டிஅறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, உதவி திட்ட அலுவலர்கள் சேகர் (கல்லல்), இளங்கோ (சாக்கோட்டை), காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், செழியன் (கல்லல்), ஊர்காவலன், தவமணி (சாக்கோட்டை) உள்ளிட்ட பலர் கலந்து ெகாண்டனர்.

    • சிவகங்கை தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
    • rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    2023-24-ம் கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டத்தின்படி 2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் மே 21-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர், விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவைகளை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 12 வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.5.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.5.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாகிர் உசேன் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
    • தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரியின் 53-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார்.

    உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கல்லூரி செயலர் பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினராக இளையான்குடி பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    • தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கட்டுக்குடிப் பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட செல்லியம்பட்டி, தேனம்மாள்பட்டி ஆகிய பகுதிகளிலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் புதிய மின்மாற்றி கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்மாற்றி களை இயக்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.

    அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றும் பொருட்டு, பொது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தை தங்கு தடையின்றியும், சீராக வும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்வ தற்கென 2021-22-ம் நிதியாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புக்கள், நடப்பாண்டில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் ஜான் கென்னடி, சோலை செல்வி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் ஜெயலெட்சுமி (பிரான்பட்டி), புகழேந்தி (கட்டுக்குடிப்பட்டி), சண்முகம் (செல்லியம்பட்டி), ஜெயலெட்சுமி (தேனம்மாள் பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் அருகே கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டியில் உள்ளது முத்து மாரியம்மன் கோவில். இங்கு சித்திரை திருவிழாவை யொட்டி கடந்த 9-ந்தேதி உற்சவ அம்பாள் இளையாத்தங்குடியில் இருந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கீரணிப்பட்டிக்கு வந்தடைந்தார். பின்னர் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் வெள்ளி ரிஷபம், அன்னம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் நடந்தது. 5-ம் நாளன்று பால்குட விழாவும் தொடர்ந்து 6-ம் நாளில் அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்தார்.

    7-ம் நாளில் அம்மன் பூப் பல்லக்கிலும், 8-ம் நாளன்று குதிரை வாகனத்திலும் அருள்பாலித்தார். 9-ம் நாளான நேற்று அதிகாலை முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான திரவி யங்களால் அபிஷேகம், அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பின்னர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தரு ளினார். அதனை தொடர்ந்து பக்தர்கள் முத்து மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்கத் தேரோட்டம் சிறப்பபாக நடைபெற்றது.

    பக்தர்கள் பழங்களை சூரைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கீரணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, இளை யாத்தங்குடி, திருப்பத்தூர், சேவிணிப்பட்டி, கீழச் செவல்பட்டி, செவ்வூர், குருவிக்கொண்டான்பட்டி, விராமதி, இரணியூர், முதலையான்பட்டி, சேத்தம்பட்டி உள்பட சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • திரளானோர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆனந்த வல்லி சோமநாதர் கோவிலில் சித்திரை சோம வார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    கொடி மரம் முன்உள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதேபோல் இக்கோவில் பின்புறம் உள்ள சிருங்கேரி சங்கரமடம், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவிலில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் காசி நந்திக்கு சிறப்பு அபிஷேக பூஜை, கங்கை தீர்த்தம் அபிஷேகம் நடைபெற்றது.

    இடைக்காட்டூர் மணி கண்டஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி கோவி லிலும் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • வகுப்பறை கட்டிடம், கலையரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும்.

    சிவகங்கை

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பங்களிப்புடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயில் மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று வகுப்பறை கட்டிடங்கள், நுழைவு வாயில், கலையரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 115 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்டதாகும். ஓலைக்கொட்டகையில் தொடங்கப்பட்டு அதன் பின்னர் ஓடுகள் அமைத்தும், தற்போது கான்கிரீட் அமைத்து, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாக 500 மாணவர்கள் படிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    இந்த பள்ளியில் கட்டிடத் திறப்பு விழா, விளையாட்டு விழா மற்றும் 115-வது ஆண்டு விழா முப்பெரும் விழாவாக கொண்டா டப்படுகிறது. இந்த பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் தற்போது உயர்ந்த நிலையில் இருந்து வருவது குறித்து, இங்கு எடுத்துரைத்தனர்.

    எதிர்கால சந்ததியினர்களாகிய மாணவர்களுக்கு தரமான கல்வியை பெறுவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று சிவகங்கை மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்து வதற்கென மேலும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து அரசுடன் இணைந்து செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நூற்றாண்டு விழா காணும் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நூற்றாண்டு நுழைவுவாயில் அமைப்பதற்கும், சூரியமின் சக்தி, புதிய கணினிகள், பெருந்தலைவர் காமராஜர் கலையரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு, அரசுடன் இணைந்து பணியாற்றியது பாராட்டுக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து, பள்ளி நூற்றாண்டு விழாவில் 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு கொடை யாளர் பங்களிப்பில் வழங்கப்படும் ஊக்கத்தொகையுடன், தனது சொந்த நிதியில் இருந்தும் மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    மாநில அளவில் சிலம்ப போட்டியில் 2-வது இடத்தை பெற்ற மாணவனுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை யும், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொ கையாகவும் வழங்கினார்.

    இந் நிகழ்ச்சிகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன். கல்லல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சொர்ணம் அசோகன், கல்லல் ஊராட்சி மன்றத்தலைவர் நாச்சியப்பன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×