என் மலர்
சிவகங்கை
- பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா நடந்தது.
- மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி வ.உ.சி ரோடு செல்வி பெட்ரோல் பங்க் வளாகத்தில் பள்ளத்தூர் மோட்டார்ஸ் எல்.எல்.பி. எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தொடக்க விழா நடந்தது. நிர்வாகிகளான செல்வி குரூப் ஆப் கம்பெனி மாணிக்கம், விசாலம் சிட்பண்ட் இயக்குநர் அரு.உமாபதி வரவேற்றனர்.
விசாலம் சிட்பண்ட் நிர்வாக இயக்குநா் அரு. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பி.எல்.படிக்காசு நிறுவனத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் வாகனத்தை தொழில் அதிபர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.
இதில் விசாலம் சிட் பண்ட் இயக்குநர் அரு. மீனாட்சி, தொழில் அதிபர் எம்.எம்.கணேசன், ஓ.பி. ஆர்.ராமையா, சன்னா ராமலிங்கம், எஸ்.கே.எம்.பெரியகருப்பன், கோவை ஒயிட் அண்டு கோ வெள்ளையன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, பல் மருத்துவர் பிரபாகரன், பிரபு டெண்டல் இயக்குநர் டாக்டர் பிரபு, வக்கீல் கமல் தயாளன், மூன் ஸ்டார்
சி.சி.டி. லட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும்.
- சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப் பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.
எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த உதவித தொகை பெற விண்ணப் பிக்கலாம்.
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தோ்ச்சி பெற்ற வா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை பெற சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப் பத்தை அலுவ லகத்தில் வேலை நாளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுய உறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம்.
சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 25-ந்தேதி தொடங்குகிறது.
- நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 25.4.2023 முதல் 4.6.2023 வரையிலான காலங்களில் நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அனைவரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக் கலாம்.
இந்த திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,000 ஆகும். இந்த தொகையை phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருக்க வேண்டும்.
நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் முதற் கட்டமாக 25.4.2023 முதல் 7.5.2023 வரையிலும், இரண்டாம் கட்டமாக 9.5.2023 முதல் 21.5.2023 வரையிலும், மூன்றாம் கட்டமாக 23.5.2023 முதல் 4.6.2023 வரையிலும் நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நேரம் காலை 7.30 மணி முதல் 8.30 வரை மற்றும் 8.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகும்.
நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 12 நாட்களுக்கு ஒருவேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கான தொகை ரூ.1,000 (18% GST) via phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்கள் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அரங்கம்-04575 299293, மாவட்ட விளையாட்டு அலுவலர்-74017 03503, நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மானாமதுரை ரோடு, ஆர்.டி.எம். கல்லூரி அருகில், சிவகங்கை என்ற அலுவலக முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு "என் குப்பை என் நீர்நிலை கூட்டு பொறுப்பு" உறுதிமொழி எடுத்தல், துப்புரவு பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள் நடந்தன.
செட்டிகுளத்தில் நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டது. துணைத்தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார்.
கவுன்சிலர் லதாமணிகண்டன் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். தூய்மைப்பணி மேற்பார்வையாளர் கார்த்திக், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் காயத்ரி மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் பாண்டிச்செல்வம் நன்றி கூறினார்.
- சிவகங்கையில் இ.கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகர இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூட்டம் பொருளாளர் சேகர் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், நகரச் செயலாளர் மருது, துணைச் செயலாளர் சகாயம் பாண்டி, ஆட்டோ சங்க செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர்கள் குஞ்சரம் காசிநாதன், சாரதா அமிர்தசாமி, சசிகுமார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகிற மே 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை நகர் முழுவதும் நடைபயணம், தெருமுனை பிரசாரம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி சமூக விரோத செயலுக்கு இடமளிக்கும் வகையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தலை, நரம்பு, இருதய மற்றும் கேன்சர் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த வித வசதியும் இல்லை. இந்த குறையை உடனடியாக அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். சிவகங்கையின் கிழக்குப்புறத்தில் உள்ள சுற்றுச்சாலையை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை நகர் பகுதியில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
சிவகங்கையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எந்த அரசு அலுவலகங்களையும் மாற்றக்கூடாது. சிவகங்கையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ெரயில் விட வேண்டும். வட மாநிலங்களுக்குச் செல்லும் ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
- சிவகங்கை அருகே நடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பேரணியை பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
- விலையில்லாப் பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கை நாலு கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ''நம் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம் நம் எதிர்காலத்தை திட்டமிடுவோம்'' என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் ஊர் முழுவதும் விழிப்புணர்வு பேரணியாக சென்று கோஷமிட்டனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நாலுகோட்டையில் மாணவர் சேர்க்கை பேரணி ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை யில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் கனிமொழி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆசிரியர்கள் பாப்பா வெள்ளத்தாய், பஞ்சுராஜ், லட்சுமி, ஜெகதாம்பிகை முன்னிலை வகித்தனர்.
இதில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் கூறியதாவது:-
இந்த பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், காற்றோட்டமான கட்டிடம், சுகாதாரமான கழிவறை, தொழில் நுட்ப உதவியுடன் கல்வி கற்க கணினி வசதி, மின் வசதி, கியூ.ஆர். கோடு மற்றும் படவிளக்க தொலைக்காட்சியுடன் கல்வி சேனலில் கற்றல்- கற்பித்தல் வசதி உள்ளது.
ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி, சரளமாக வாசிப்புத் திறனை வளர்க்க செய்தித்தாள், தேன்சிட்டு, நூலகம் வாசிக்கும் வசதி, ஆரோக்கியமாக கல்வி கற்க காலை உணவு, மதிய சத்துணவுத் திட்டம், பல்கலைத் திறன் வளர்க்க இலக்கிய மன்றங்கள், சிறார் திரைப்படம், வானவில் மன்றங்கள், கலைத் திருவிழா போட்டிகள், வென்றவர்களுக்கு வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு, மாலை நேர கல்வி கற்க இல்லம் தேடிக் கல்வி, எதிர்கால கல்வி வழிகாட்டுக்கு நான் முதல்வன் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர வருவாய் மற்றும் சிறப்பு கல்வி திட்டம் விலையில்லா சீருடைகள், விலையில்லா காலணிகள், விலையில்லாப் பாடப் புத்தகம் விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.
வண்ணம் தீட்ட கலர் பென்சில் கிரையான்சுகள், நோட்டுகள், கணித உபகரண பெட்டிகள், நில வரைபடங்கள் பயிற்சி ஏடுகள், கணித செயல் பாடுகளை புதுப்பிக்க மகிழ் கணிதம்நிகழ்வு, கல்வி இணைச் செயல்பாடுகள் மூலம் பெண் குழந்தை களுக்கு யோகா, விளை யாட்டு, ஓவியம் மூலம் பன்முகத்திறன் வளர்க்கும் பயிற்சி, ஆடல், பாடல் விளையாட்டின் மூலம் 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி, 4.5 வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி வழியில் கற்பித்தல், 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்க ளுக்கு படைப்பாற்றல் கல்வி முறையில் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆரம்பக் கல்வி முதல் அரசு பள்ளியின் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியில் உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்கலைக் கழகங்களில் மாதம் ரூ.ஆயிரம் ஊக்க ஊதியம் என எல்லா வசதிகளும் நிறைந்த அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்திடுவோம் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி இந்த பேரணி சிறப்பாக நடந்தது.
இதையடுத்து 15 பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நமது பள்ளி யில் சேர்ந்து படிக்க உறுதி அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளையான்குடி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- கட்டுமான நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 18 வார்டுகளில் தினசரி சேகரமாகும். 5.100மெட்ரிக் டன் குப்பைகளை பேரூ ராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 2.5 ஏக்கர் பரப்ப ளவில் அமைந்துள்ள வளமீட்புப் பூங்காவில் சேகரிக்கப்படுகிறது.
அதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திடக்கழிவுகளை உரிய அகழ்வு முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குப்பைகளில் இருந்து பிரிக்கப்பட்ட பழைய திடக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், திடக்கழிவுகளில் இருந்து தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள், தோல் பொருட்கள் ஆகிய வைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி உரிய பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இளையான்குடி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சிகாகவும் இந்த பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் புதிய பஸ் நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்ட 22.3.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தொடர்பா கவும், கட்டுமான நிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்ப ட்டது. பஸ் நிலைய சுற்றுச்சுவரின் வெளி ப்புறமும் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியும் மேற்கொ ள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வருகிற மே மாதம் இறுதி க்குள் இந்த கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிக்கு கொண்டு வர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இளையான்குடி பேரூராட்சிப் பகுதிக்கென புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் கள ஆய்வுகளும் மேற்கொ ள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, இளநிலைப் பொறியாளர் சந்திரமோகன், இளை யான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபி உள்பட பலர் உடனிருந்தனர்.
- பிரான்மலையில் ஜெயந்தன் பக்தர்கள் விழாவில் வெள்ளி தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.
- உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் திருக்கொடுங்குன்ற நாதர் கோவில் உள்ளது. ஆகாயம், மத்திமம், பாதாளம் என்ற 3 நிலைகளில் பெருமாள் காட்சியளிக்கின்றார்.
பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர் குயில் அமுத நாயகி அம்மனும், மத்திமத்தில் வடுகபைரவர் விஸ்வரூப தரிசனத்திலும், ஆகாயத்தில் மங்கைப்பாகர் தேனம்மை ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.
மத்திமத்தில் தெற்கு திசை நோக்கி விஸ்வரூப தரிசனமாக காட்சியளிக்கும் வடுகபைரவருக்கு ஆண்டுக்கு இருமுறை விழாக்கள் நடைபெறும். குமார சஷ்டி விழா கார்த்திகை மாதத்திலும், ஜெயந்தன் பூஜை விழா சித்திரை மாத அமாவாசை தினத்திலும் நடைபெறுவது வழக்கம்.
கடந்த காலங்களில் வடுகபைரவர் ஜெயந்தன் விழாவை முன்னிட்டு வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருவர். கடந்த வருடம் ரூ.80 லட்சம் செலவில் வெள்ளித்தேர் வடிவ மைக்கப்பட்டது. நேற்று வெள்ளித்தேர் பவனி நடந்தது.
உற்சவர் வடுகபைரவர் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார். தீப ஆரத்திகள் நிறைவு பெற்று வெள்ளி ரதத்தில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திரு விழா ஏற்பாடுகளை திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி அடிகளார் ஏற்பாடு செய்திருந்தார். பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் பூஜைகளை செய்தார்.
- பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
- சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.
இதில் துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சி.எல்.சரவணன், ஆறுசரவணன், மகேஷ், மதியழகன், ஒப்பந்ததாரர்கள் தனசேகர், அமுதன் மற்றும் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரை திருவிழா 10 நாள் விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தேவஸ்தான பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவசாரியாரிடம் திருக்கட்டளை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மேள தாளத்துடன் பொன்னம்பல அடிகளாரை வரவேற்று மந்திர உபதேசங்கள் பெற்று திருக்கட்டளை வாங்கும் வைபவம் நடந்தது.
அதை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
- வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
- இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.
மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.
மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த ஆய்வுகளின்போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப்பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறை களுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர்கள் பாலகுரு (சிவகங்கை), கோபிநாத் (இளையான்குடி), தனி வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அந்தோணிராஜ் (இளையான்குடி), கண்ணன் (சிவகங்கை) உள்பட பலர் உடனிருந்தனர்.






