என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா
- பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
- குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரை திருவிழா 10 நாள் விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இதையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தேவஸ்தான பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவசாரியாரிடம் திருக்கட்டளை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மேள தாளத்துடன் பொன்னம்பல அடிகளாரை வரவேற்று மந்திர உபதேசங்கள் பெற்று திருக்கட்டளை வாங்கும் வைபவம் நடந்தது.
அதை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.






