search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Branmalai"

    • பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சித்திரை திருவிழா 10 நாள் விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தேவஸ்தான பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவசாரியாரிடம் திருக்கட்டளை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மேள தாளத்துடன் பொன்னம்பல அடிகளாரை வரவேற்று மந்திர உபதேசங்கள் பெற்று திருக்கட்டளை வாங்கும் வைபவம் நடந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    • பிரான்மலை கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் பிரசித்திபெற்ற மங்கைபாகர்-தேனம்மை மற்றும் வடுக பைரவர் கோவில் உள்ளது. இந்த மலைப்பகுதி சுமார் 2,500 அடி உயரம் கொண்டது. இதில் பாதாளம், பூலோகம், கைலாயம் என 3 அடுக்குகளாக சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.

    பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர்-குயில்முகநாயகியும், பூலோகத்தில் உமா மகேசுவரர்-விசாலாட்சி அம்பாளுடனும், கைலாயத்தில் திருமண கோலத்தில் மங்கைபாகர்-தேனம்மை யாகவும் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை கொண்ட தாகும். இந்த மலையை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டதாக கூறப்படுகிறது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 5 கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.

    முருகப்பெருமானுக்கு வேறு எங்கும் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தை பூசத்திருநாளான இன்று பிரான்மலை மங்கை பாகர்-தேனம்மை கோவிலில் இருந்து விநாயகர் முன்செல்ல வள்ளி-தெய்வானை உள்ளிட்ட தேவியருடன் முருகப்பெருமான் சப்பரத்தில் புறப்பட்டு 3 மைல் தொலைவில் உள்ள மேலப்பட்டி பிள்ளை யார்பட்டியில் உள்ள சுயம்பெருமாள் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோவில் தோப்பில் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதனை தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுயம்பெருமாள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    அதனை தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பூஜைகள் நிறைவு பெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 5 கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது. ஆகம பூஜைகளை தேவஸ்தானபரம்பரை ஸ்தானிகம் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் செய்தார்.

    ×