search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theerthavari Utsavam"

    • 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல நேற்று தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தால் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் தங்க மூஷிக வாகனத்திலும் அருள்பாலித்தனர். காலை 9.30 மணிக்கு அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் புறப்பாடாகி கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினர்.

    தீர்த்தவாரி உற்சவம்

    அங்கு பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதர் குருக்கள் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவரை எடுத்துச் சென்று திருக்குளத்தில் 3 முறை மூழ்கி தீர்த்தவாரி உற்சவத்தை நடத்தினார். தொடர்ந்து அங்கு நின்ற பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இரவு 7 மணிக்கு மூலவர் சன்னதி முன் மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் புதிய புத்தாண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி ராம.மெய்யப்பன் செட்டியார், பூலான்குறிச்சி சுப.முத்துராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேவகோட்டையில் 9 சுவாமிகள் கலந்து கொண்ட தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு 2-ம் தீர்த்தவாரி உற்சவம் நகரில் உள்ள சிவன், ரெங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    அதேபோல் கண்ணனை யாகிய தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல் அகத்தீஸ்வரர் சவுந்தரநாயகி அலங்கரிக்கப் பட்டு வீதி உலா வந்தார்.

    கோட்டூர், மார்க்கண்டன் பட்டி வழியாக சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாதயாத்திரையாக வந்தனர். 9 சுவாமிகள் காந்தி பூங்காவில் வந்தடைந்தது. அதன் பின் சுவாமிகள் மணிமுத்து ஆற்றில் எழுந்தருளினர். அங்கு மூலவர்களுக்கு மஞ்சள், திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காரை சேர்க்கையாளர்களும் நாட்டார்களும் நகரத்தார்களும் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

    • பிரான்மலை கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் பிரசித்திபெற்ற மங்கைபாகர்-தேனம்மை மற்றும் வடுக பைரவர் கோவில் உள்ளது. இந்த மலைப்பகுதி சுமார் 2,500 அடி உயரம் கொண்டது. இதில் பாதாளம், பூலோகம், கைலாயம் என 3 அடுக்குகளாக சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார்.

    பாதாளத்தில் திருக்கொடுங்குன்ற நாதர்-குயில்முகநாயகியும், பூலோகத்தில் உமா மகேசுவரர்-விசாலாட்சி அம்பாளுடனும், கைலாயத்தில் திருமண கோலத்தில் மங்கைபாகர்-தேனம்மை யாகவும் அருள் பாலித்து வருகின்றனர்.

    திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமை கொண்ட தாகும். இந்த மலையை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டதாக கூறப்படுகிறது. குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் 5 கோவில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடை பெறும்.

    முருகப்பெருமானுக்கு வேறு எங்கும் தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தை பூசத்திருநாளான இன்று பிரான்மலை மங்கை பாகர்-தேனம்மை கோவிலில் இருந்து விநாயகர் முன்செல்ல வள்ளி-தெய்வானை உள்ளிட்ட தேவியருடன் முருகப்பெருமான் சப்பரத்தில் புறப்பட்டு 3 மைல் தொலைவில் உள்ள மேலப்பட்டி பிள்ளை யார்பட்டியில் உள்ள சுயம்பெருமாள் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோவில் தோப்பில் தைப்பூச தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அதனை தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தவாரி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்ற சுயம்பெருமாள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பால் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சுவாமிக்கு அபிஷே ஆராதனைகள் நடந்தன.

    அதனை தொடர்ந்து மகா தீபாராதனையுடன் பூஜைகள் நிறைவு பெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை 5 கோவில் தேவஸ்தானம் செய்திருந்தது. ஆகம பூஜைகளை தேவஸ்தானபரம்பரை ஸ்தானிகம் சிவஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் செய்தார்.

    ×