search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 சுவாமிகள் கலந்து கொண்ட தீர்த்தவாரி உற்சவம்
    X

    தேவகோட்டையில் 9 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. 

    9 சுவாமிகள் கலந்து கொண்ட தீர்த்தவாரி உற்சவம்

    • தேவகோட்டையில் 9 சுவாமிகள் கலந்து கொண்ட தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
    • முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு 2-ம் தீர்த்தவாரி உற்சவம் நகரில் உள்ள சிவன், ரெங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

    அதேபோல் கண்ணனை யாகிய தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல் அகத்தீஸ்வரர் சவுந்தரநாயகி அலங்கரிக்கப் பட்டு வீதி உலா வந்தார்.

    கோட்டூர், மார்க்கண்டன் பட்டி வழியாக சுமார் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பாதயாத்திரையாக வந்தனர். 9 சுவாமிகள் காந்தி பூங்காவில் வந்தடைந்தது. அதன் பின் சுவாமிகள் மணிமுத்து ஆற்றில் எழுந்தருளினர். அங்கு மூலவர்களுக்கு மஞ்சள், திரவிய பொடி, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக அன்று இரவு சேரிமந்தரமூர்த்தி, விநாயகர் சாமிகள் தீர்த்தவாரி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காரை சேர்க்கையாளர்களும் நாட்டார்களும் நகரத்தார்களும் பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×