என் மலர்
சிவகங்கை
- சிவகங்கை அருகே முகமது நபி குறித்து அவதூறாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழ சீவல்பட்டியை சேர்ந்தவர் சரவணன். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர் ஆதவப்பிரியன் என்ற பெயரில் உள்ள தனது முகநூலில் முகமது நபி குறித்து அவதூறான கேலிச்சித்திரங்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சரவணன்
இதை கண்டித்தும், முகமது நபியை அவதூறு செய்த சரவணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
- கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
- விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சந்திவீரன் கூடத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு அன்னை காளியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், இளநீர், பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- பணி பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கிராம நிர்வாக அலுவலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தன்னுடைய அலுவலக அறையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில்15-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் சுரேஷ், செயலாளர் பூமுருகன், பொருளாளர் அய்யப்பன், முதுகுளத்தூர் வி.ஏ.ஓ. முருகன், ராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனத்தில் ரூ.23.74 கோடியில் நவீன சேமிப்பு தளங்கள் திறக்கப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மேற்கூரையுடன் நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன், காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
கடந்த 11.2.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்புவனம் வட்டம் ஏனாதியில் ரூ4.23கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம் பள்ளத்தூரில் ரூ12.97கோடி மதிப்பீட்டி லும், மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ10.83 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்களை மேற்கண்ட 3வட்டங்களில் இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். அதன்படி காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூரில் 22ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ16.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட ஏனாதியில், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ5.42 கோடி மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சிப்காட்டில் 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல்சேமிப்பு மேடைகளை ரூ2.11 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய 3 வளாகங்களிலும் 2-ம் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள மொத்தம் 29ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 நெல்சேமிப்பு தளங்கள் மொத்தம் ரூ23.74 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) அருண்பிரசாத், பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), முகமுது மீரா(புதுவயல்), உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உலக சுகாதார தினத்தையொட்டி சிவகங்கை கோர்ட்டில் மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதை தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை சுமதி சாய் பிரியா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். நோய் வரும் முன்பு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட வேண்டும். மனநல பாதிப்பு என்பது முக்கியமானதாகும். மனநல பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள யோகா மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின்பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், டாக்டர்கள் சங்கரலிங்கம், பாலஅபிராமி காந்திநாதன், ஓமியோபதி மருத்துவர் கவுசல்யா, யோகா மருத்துவர் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
சுகாதாரதுறையின் மூலம் அலோபதி மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிவுரைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள், கபசுர குடிநீர், சித்தா ஓமியோபதி மாத்திரைகள், மருந்துகளும் வழங்கப்பட்டது.
- எஸ்.எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி. பழம்ரவி பங்கேற்று பேசினார். 2017 முதல் 2020 வரை இந்த கல்லூரியில் 5 துறைகளில் படித்த சுமார் 450 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாளாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை செயலாளர் நாராயணன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
- 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.
சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையில் உள்ள மணலூரில் குழாய் விரிசல் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மணலூர் வைகை ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீரேற்று நிலையம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
ஊழியர்கள் மரகுச்சிகளை வைத்து சரி செய்தனர். தற்போது குடி நீரேற்று நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மீண்டும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பனை மர உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. நான்கு வழிச்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறியதை பார்த்து பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாகியதாக தெரிகிறது.
கோடை உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
- 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் உள்ள குறும்பலூர் கிராமத்தில் சுமார் 250 குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் பொருட்களை வாங்க சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள வாராப்பூருக்கு ரேசன் கடைக்கு சென்று வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குறும்பலூர் கிராமத்தில் பகுதிநேர ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அவரது சொந்த செலவில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சி துணை தலைவர் சித்ரா சுப்பையா, ஊர் முக்கியஸ்தர்களான வி.என்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் நாகராஜன், ஆறுமுகம், வழுக்கையன், சின்னையா, சுப்பையா, கவுன்சிலர்கள் பழனிச்சாமி, வேங்கையன், ஆறுமுகம், சக்திவேல், ராசு, கரகமாடி சின்னையா, அழகு, பூசாரி மச்சக்காளை, சின்னையா, வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சொந்த செலவில் சடையம்பட்டி கிராமத்தில் 2, குறும்பலூர் கிராமத்தில் 4, வாராப்பூர் கிராமத்தில் 1 குளியல் தொட்டியும், இந்த பகுதியில் பகுதிநேர ரேசன் கடை கட்டிடங்களும் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் வாக்குறுதி அளித்தார்.
- திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் நாளை (26-ந் தேதி) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- கீழடி அருங்காட்சியகத்தை வார இறுதி நாட்களில் கூடுதலாக ஒரு மணி நேரம் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை முதன்மை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் கீழடியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர். தற்போது 9-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் நடைபெறுகிறது.
கீழடி அருங்காட்சியகத்தை தமிழக அரசின் முதன்மை செயலர் (சிறப்பு ெசயலாக்க திட்டம்) உதயசந்திரன் பார்வையிட்டார். இங்கு கூடுதலாக மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு செய்தார். பின்னர் உதயசந்திரன் கூறியதாவது:-
அகழாய்வு பணிகளின் போது கிடைக்கப்பெறும் தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அவற்றை உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருகை புரியும் பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும், உலகளவில் அனைத்து நாடுகளும் வியக்கும் வகையில் செட்டிநாடு கலைநயத்துடன் ரூ18.42கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வசதி களை மேம்படுத்தும் வகையில் அரசின் அறிவுரையின்படி துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு வலைத்தளம் வழியாக பணம் செலுத்தும் முறை, சுற்றுலா பயணிகளின் பொருட்களை பாதுகாப்ப தற்கென பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ள பொருட்களில் மாதிரி வடிவ பொருட்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அதற்கான தெளிவான குறிப்புகளை நிறுவுவதற்கும், அருங்காட்சியத்தில் உள்ள அனைத்து பிரிவுகள் குறித்தும் வழித்தடங்களை பொதுமக்கள் எளிதில்அ றிந்துகொள்ளும் வகையில் நிறுவுவதற்கும், கூடுதலாக காற்றோட்ட வசதி களை ஏற்படுத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரலாற்று குறிப்புகளை தெளிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கென துறைசார்ந்து கூடுதலாக வழிகாட்டிகளை நியமிப்பதற்கும், இதற்கென தொல்லியல் துறையில் ஆர்வத்தின் அடிப்படையில் இந்த பகுதிகளை சேர்ந்தவர்களை வழிகாட்டிகளாக நியமனம் செய்து அதற்கென முறையான பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் தற்போதுள்ள நேரத்தை கூடுதலாக ஒரு மணிநேரம் மாலை வேளையில் அதிகரிக்கவும், பொதுமக்களின் வருகையை பொறுத்து குறும்படங்களை தொடர்ந்து திரையிடவும், கூடுதல் கழிவறைகளை ஏற்படுத்தம், அருங்காட்சியகத்தினுள்ள ஒவ்வொரு பிரிவிலும் அவைகள் சார்ந்த புத்தகங்களை நிறுவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சுயஉதவி குழுக்களின் சார்பில் இயங்கிவரும் சிற்றுண்டி உணவ கத்தின் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்களை தரமான முறையில் பொதுமக்களுக்கு வழங்கவும், அதற்கான விலை பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிபடுத்துவது என இதுபோன்று பல்வேறு கூடுதல் வசதிகளை மேம்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி அருகே கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொல்ல முயன்றார்.
- நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெ ருமாள்(வயது35). இவரது மனைவி ராணி(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகிய சேவுகப்பெருமாள், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ராணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி வந்துள்ளார்.
நேற்றுமுன்தினமும் சேவுகப்பெருமாள் மது குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ராணியை தாக்கி உள்ளார். பின்னர் அவர் போதையில் தூங்கிவிட்டார்.
இந்தநிலையில் கணவர்மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்துவந்த ராணி, தூங்கிக்கொண்டிருந்த சேவுகப்பெருமாள் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கொலை செய்ய முயன்ற ராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






