search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகமது நபி குறித்து அவதூறு: வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    முகமது நபி குறித்து அவதூறு: வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

    • சிவகங்கை அருகே முகமது நபி குறித்து அவதூறாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழ சீவல்பட்டியை சேர்ந்தவர் சரவணன். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர் ஆதவப்பிரியன் என்ற பெயரில் உள்ள தனது முகநூலில் முகமது நபி குறித்து அவதூறான கேலிச்சித்திரங்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சரவணன்

    இதை கண்டித்தும், முகமது நபியை அவதூறு செய்த சரவணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×