search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministerial Opening"

    • காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனத்தில் ரூ.23.74 கோடியில் நவீன சேமிப்பு தளங்கள் திறக்கப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மேற்கூரையுடன் நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

    இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன், காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கடந்த 11.2.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்புவனம் வட்டம் ஏனாதியில் ரூ4.23கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம் பள்ளத்தூரில் ரூ12.97கோடி மதிப்பீட்டி லும், மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ10.83 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்களை மேற்கண்ட 3வட்டங்களில் இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். அதன்படி காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூரில் 22ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ16.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட ஏனாதியில், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ5.42 கோடி மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சிப்காட்டில் 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல்சேமிப்பு மேடைகளை ரூ2.11 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய 3 வளாகங்களிலும் 2-ம் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள மொத்தம் 29ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 நெல்சேமிப்பு தளங்கள் மொத்தம் ரூ23.74 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) அருண்பிரசாத், பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), முகமுது மீரா(புதுவயல்), உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    சிவகங்கை

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    அவர் பேசும் போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.

    பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

    ×