என் மலர்
சிவகங்கை
- புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
- இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைமை அறிவுரையாளர் பெருமாள் கலந்து கொண்டார். பிள்ளையார்பட்டியில் கோடைகாலம் முழுவதும் செயல்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனமும், வறுமையில் உள்ள பெண்களுக்கு மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்ச்சி முகாம் அமைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதில் மீனாள் ஆதீனமிளகி, பால சரசுவதி முத்துகிருஷ்ணன், நிருபா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிம்மவாகனத்தில் வந்த ஆனந்தவல்லி அம்மனை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
- திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடை பெறும்.
இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் விழாவில் கோவில் முன்பு அமைக்கப்பட்ட அரங்கில் ஆனந்தவல்லிஅம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். பின் ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. வைகைஆற்றில் திரண்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, முன் னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், தொழில் அதிபர் நடராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கான பூஜைகளை ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர் உள் ளிட்ட சிவாச்சாரியர்கள் நடத்தினர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் மே 2-ந் தேதியும், தேரோட்டம் 3-ந் தேதியும் நடைபெறுகிறது.
- திருப்பத்தூரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட செயலாளர் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறப்புவிழா நடந்தது.
அதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளரும், சிங்கம்புணரி ஒன்றிய குழுத்தலைவருமான திவ்யாபிரபு ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பா ட்டை இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு செய்திருந்தார். இதில் மாநில பாசறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரமசிவம் பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட பேரவை இணைச்செயலாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சிவகங்கை அருகே முகமது நபி குறித்து அவதூறாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழ சீவல்பட்டியை சேர்ந்தவர் சரவணன். சிங்கப்பூரில் பணியாற்றி வரும் இவர் ஆதவப்பிரியன் என்ற பெயரில் உள்ள தனது முகநூலில் முகமது நபி குறித்து அவதூறான கேலிச்சித்திரங்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட சரவணன்
இதை கண்டித்தும், முகமது நபியை அவதூறு செய்த சரவணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் ஜமாத்தார்கள் சார்பாக ஆர்பாட்டம் நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
- கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
- விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திண்டுக்கல் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 8-ம் நாளன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சந்திவீரன் கூடத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தது. அங்கு அன்னை காளியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், இளநீர், பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- பணி பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- கிராம நிர்வாக அலுவலர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் தன்னுடைய அலுவலக அறையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சினையில் வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வட்டத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில்15-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொரு ளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் சுரேஷ், செயலாளர் பூமுருகன், பொருளாளர் அய்யப்பன், முதுகுளத்தூர் வி.ஏ.ஓ. முருகன், ராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனத்தில் ரூ.23.74 கோடியில் நவீன சேமிப்பு தளங்கள் திறக்கப்பட்டது.
- இதனை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய வட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மேற்கூரையுடன் நவீன சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன், காரைக்குடி வட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி பகுதியிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
கடந்த 11.2.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் முதல்கட்டமாக திருப்புவனம் வட்டம் ஏனாதியில் ரூ4.23கோடி மதிப்பீட்டிலும், காரைக்குடி வட்டம் பள்ளத்தூரில் ரூ12.97கோடி மதிப்பீட்டி லும், மானாமதுரை வட்டம், சிப்காட்டில் ரூ10.83 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் ரூ28.03 கோடி மதிப்பீட்டிலும் புதியதாக கான்கீரிட் தளத்துடன் கூடிய கட்டப்பட்டுள்ள மேற்கூரைகளை காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்பு தளங்களை மேற்கண்ட 3வட்டங்களில் இன்றையதினம் திறந்து வைத்துள்ளார். அதன்படி காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பள்ளத்தூரில் 22ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ16.21 கோடி மதிப்பீட்டிலும், திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட ஏனாதியில், 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 நெல் சேமிப்பு மேடைகளை ரூ5.42 கோடி மதிப்பீட்டிலும், மானாமதுரை வட்டத்திற்குட்பட்ட சிப்காட்டில் 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 நெல்சேமிப்பு மேடைகளை ரூ2.11 கோடி மதிப்பீட்டிலும் ஆகிய 3 வளாகங்களிலும் 2-ம் கட்டமாக முடிக்கப்பட்டுள்ள மொத்தம் 29ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 நெல்சேமிப்பு தளங்கள் மொத்தம் ரூ23.74 கோடி மதிப்பீட்டில் முதல்-அமைச்சரால் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்கு உரிய லாபம் முழுமையாக கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், தமிழக அரசால் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) அருண்பிரசாத், பேரூராட்சி தலைவர்கள் சாந்தி சங்கர் (பள்ளத்தூர்), ராதிகா (கானாடுகாத்தான்), முகமுது மீரா(புதுவயல்), உதவி செயற்பொறியாளர் பூமிநாதன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உலக சுகாதார தினத்தையொட்டி சிவகங்கை கோர்ட்டில் மருத்துவ முகாம் நடந்தது.
- இந்த முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதை தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை சுமதி சாய் பிரியா தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். நோய் வரும் முன்பு பாதுகாத்துக் கொள்ளவேண்டும். உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்பட வேண்டும். மனநல பாதிப்பு என்பது முக்கியமானதாகும். மனநல பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ள யோகா மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி சத்தியதாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்- சார்பு நீதிபதி பரமேசுவரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின்பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர் அனிதா கிறிஸ்டி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன், டாக்டர்கள் சங்கரலிங்கம், பாலஅபிராமி காந்திநாதன், ஓமியோபதி மருத்துவர் கவுசல்யா, யோகா மருத்துவர் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
சுகாதாரதுறையின் மூலம் அலோபதி மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ அறிவுரைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள், கபசுர குடிநீர், சித்தா ஓமியோபதி மாத்திரைகள், மருந்துகளும் வழங்கப்பட்டது.
- எஸ்.எஸ்.ஏ. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்றார்.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் மணிக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் ஜி. பழம்ரவி பங்கேற்று பேசினார். 2017 முதல் 2020 வரை இந்த கல்லூரியில் 5 துறைகளில் படித்த சுமார் 450 மாணவ- மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாளாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் செந்தில், நகர அவைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு துறை செயலாளர் நாராயணன், முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
- 34 பயனாளிகளுக்கு ரூ7.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில்எபொதுமக்களிடம் இருந்து 377 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.
அதன்படி தேவகோட்டை வட்டத்தை சேர்ந்த ராசு என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி அவரது குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத் திற்கான காசோலையையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு கலைஞர் திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான் இடுபொருட் களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சார்பில் ரூ.7 ஆயிரத்து 200 மானி யத்துடன் கூடிய மா பழக்கன்று மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.1,500 மானியத்துடன் கூடிய தர்பூசணி பழக்கன்றையும் கலெக்டர் வழங்கினார்.மானாமதுரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கத்தின் சார்பில் 9 உறுப்பினர்களுக்கு ரூ.6 லட்சத்திற்கான கறவை மாட்டு வளர்ப்பிற்கு கடன் திட்டத்திற்கான ஆணை களையும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில், திருக்கோஷ்டியூர் மற்றும் இடைக்காட்டூர் நியாயவிலை கடைகளில் விற்பனை யாளர்களாக தேர்வு பெற்ற முதல் பரிசு ரூ.4ஆயிரத்தை யும், 2-ம் பரிசு ரூ.3ஆயிரத் தையும் கலெக்டர் வழங்கி னார்.
சிவகங்கை மற்றும் சக்கந்தி நியாயவிலை கடை களில் எடையாளர்களாக தேர்வுபெற்ற முதல் பரிசு ரூ.3ஆயிரம், 2-ம் பரிசு தொகை ரூ.2ஆயிரத்திற்கான காசோலைகள் என மொத்தம் 34 பயனாளி களுக்கு ரூ.7லட்சத்து 20 ஆயிரத்து 700 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தின வேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொறுப்பு) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது.
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழி சாலையில் உள்ள மணலூரில் குழாய் விரிசல் காரணமாக தொடர்ந்து குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மணலூர் வைகை ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தினமும் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீரேற்று நிலையம் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
ஊழியர்கள் மரகுச்சிகளை வைத்து சரி செய்தனர். தற்போது குடி நீரேற்று நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் மீண்டும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பனை மர உயரத்திற்கு தண்ணீர் வெளியேறியது. நான்கு வழிச்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறியதை பார்த்து பொது மக்கள் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை தண்ணீர் வீணாக வெளியேறியது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் வீணாகியதாக தெரிகிறது.
கோடை உக்கிரம் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






