search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Administrators Meeting"

    • பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் நிர்வாகிகள் சந்திப்புக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட "நிர்வாகிகள் சந்திப்பு" கீழ்க்கண்ட அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, "அண்ணா அறிவாலயத்தில்" நடைபெறும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    • திருப்பத்தூரில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட செயலாளர் பேசினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆேலாசனை கூட்டம் நடந்தது. முன்னதாக பஸ் நிலையம் அருகே கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறப்புவிழா நடந்தது.

    அதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இப்ராம்ஷா, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளரும், சிங்கம்புணரி ஒன்றிய குழுத்தலைவருமான திவ்யாபிரபு ஆகியோர் வரவேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பா ட்டை இளைஞர்- இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு செய்திருந்தார். இதில் மாநில பாசறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரமசிவம் பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

    இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியும், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் இருக்கின்றனர். அதை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க.வில் இளைஞர்கள், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவன், ஒன்றிய செயலாளர் சிவமணி, மாவட்ட பேரவை இணைச்செயலாளர் முருகேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    ×