என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை நகராட்சியில் ரூ.98 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணியை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் ஆய்வு செய்தார்.
    • பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியின் சார்பில் நகரின் மையப்பகு தியான அரண்மனை வாசலில் இருந்து வாரச் சந்தை வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்ற தாக இருந்து வந்தது. அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனையடுத்து அந்த பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். 2 மற்றும் 3-வது வார்டு சி.பி.காலனி உள்ளிட்ட பகுதி களில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதனை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சியில் நகர மக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை நகராட்சியை ஒரு முன்மாதிரி நகராட்சி யாக உருவாக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வின்போது சிவகங்கை நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஆணையா ளர் (பொறுப்பு) பாண்டீஸ் வரி, நகர இளைஞர் அணி அமைப்பாளரும், மன்ற உறுப்பினருமான அயூப் கான், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயகாந்தன், வீரக்காளை, நகர துணை செயலாளர்கள் வீனஸ் ராமநாதன், ஆறு.சரவணன், மாவட்ட மாணவரணி துணை அமைப் பாளர் ராஜா அமுதன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆய்வு செய்தார்.
    • குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள குழந்தைகள் நேய வளாகத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி உடனிருந்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பிச்சை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை முற்றிலும் பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 கோவில் தலங்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளையார் கோவிலும் ஒன்றாகும்.

    இன்றையதினம் காளையார்கோவில் வளாகத்திலும் இது தொடர்பாக கண்காணிப்பதற்கென, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுப்பதற்கான கூட்டம் நடந்தது.

    இதன் அடுத்த கட்டமாக, பஸ் நிலையம், ெரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மேற்கண்ட நடைமுறைகளை செயல்படுத்தவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் குழந்தைகள் நேய வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் 1098 எண்கள் மூலம் புகார்களின் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு அதற்கான முறையான தீர்வுகளும் காணப்பட்டு வருகிறது. வரும் முன் காப்போம் என்ற அடிப்படை யில் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அனைவரின் பங்களிப்பு இருக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தை நல குழுத்தலைவர் சாந்தி, குழந்தைகள் நல காவல் அலுவலர் விமலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது.
    • ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மறுநாள் (30-ந் தேதி) ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.

    பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் வருகிற 1-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த கூட்டப் பொருள்கள் பற்றி விவாதிக்கவும், கூட்டப்பொருள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊராட்சியில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருளை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலைத் திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் திட்டம், பிளாஸ்டிக்குக்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, திரவக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல் ஜீவன் இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பண்ணை சார், சாரா வாழ்வாதார இயக்கம் மற்றும் வறுமை குறைப்பு திட்டம் ஆகியவை கிராம சபை கூட்டத்திற்கான கூட்டப்பொருளில் விவாதிக்கப்பட உள்ளன.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • சிங்கம்புணரி, திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வுகளின் போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு, வட்டாட்சியர் அலுவல கங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையிலுள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களி டம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப் பட்டு வரும் பதிவேடுகள், அலுவலகப் பணியாளர்க ளின் வருகைப் பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறை வாரியாக பொது மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப் பட்டு வரும் கோப்புகள் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவவும், தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப் பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறைகளுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜி முன்னிசா, வட்டாட்சியர்கள் சாந்தி (சிங்கம்புணரி), வெங்கடேசன் (திருப் பத்தூர்), தனி வட்டாட்சி யர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஆனந்தன் (சிங்கம் புணரி), கண்ணதாசன் (திருப்பத்தூர்) உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மானாமதுரை அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாந்தநாயகி அம்பாள் சமேத சொர்ணவாரீசுவரர் கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் அருகே பிரமாண்ட யாகசாலை அமைத்து மூலவர் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மூலவர் விமான கலசங்கள் மற்றும் பரிவார விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நிறைவாக கலசத்திற்கு பட்டு வஸ்திரம், பூ மாலை சாற்றி ஏக முக கற்பூர ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் பக்தர்கள் மீது பைப்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதில் தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம், மானாமதுரை பிரித்தியங்கிரா கோவில் சுவாமி ஞானசேகரன், ஸ்தபதி சண்முகம், சிவகங்கை தேவஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா ராஜ்குமார், துணைத்தலைவர் சிவகாமி ராஜிபிள்ளை, கிராம நிர்வாகிகள் கருப்பையா, ரமேஷ் சுவாமி, முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். செல்லப்பா குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி. நமச்சிவாயம், டி.எஸ்.பி.கண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சார்பு ஆய்வாளர் பூபதி ராஜா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

    மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • தேவகோட்டை அருகே 343 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
    • கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.41.29 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படை யில் திருவேகம்பத்தூர் கிராமத்தில் நடந்த முகாமில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக 287 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

    அதில், தகுதியுடைய 218 மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்க ளுக்கு நலத்திட்ட உதவி களும், அதன் பயன்களும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.இந்த முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரியில் தமிழ் புத்தாண்டு புதுமழையை தொடர்ந்து பொன் ஏர் பூட்டும் திருவிழாவில் விவசாயிகள் பங்கேற்றனர்.
    • புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் தேதிக்கு பிறகு பெய்யும் முதல் மழை அந்த ஆண்டின் புதுமழை மற்றும் உத்தமழை என்று அழைக்கப்படுகிறது.

    இப்பகுதி விவசாயிகள் புதுமழை பெய்த பிறகே விவசாய பணிகளை தொடங்குவர்கள்.

    அதன்படி தமிழ் புத்தாண்டுக்கு பிறகு கடந்த 23, 24-ந் தேதிகளில் சிங்கம்புணரி பகுதியில் புது மழை பரவலாக பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுமழை பெய்ததை தொடர்ந்து சிங்கம்புணரி கிராமத்தார்கள் பொன்-ஏர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதற்காக சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்ய னார் கோவிலுக்கு சொந்த மான விளை நிலத்தில் கோவில் மாடுகளை கொண்டு வழிபாடு செய்து விவசாய பணிகளை தொடங்கினர்.

    சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான செயல் அலுவலர் தன்னாயிரம் முன்னிலையில் கிராமத்தார்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் கோவில் நிலத்தில் ஏர் பிடித்து பொன் ஏர் விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குல தெய்வ வழிபாடு நடந்தது.

    சித்திரையில் புது மழைக்கு பிறகு நல்ல நாள் பார்த்து ஏர் உழுவது சமூக ஒற்றுமைக்கும் , நல்ல மழை பொழிந்து நல்ல விளைச்சலுக்கும் வழி வகுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

    • சிங்கம்புணரி அருகே செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி வேங்கைபட்டி ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. அதை தொடர்ந்து நேற்று 2-ம்கால பூஜைகள் நடந்தது. இன்று காலை பல்வேறு சிறப்பு பூைஜகள்,ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ேகாபுர கலத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×