என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    சிவகங்கை

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • மானாமதுரையில் கொட்டும் மழையில் ஆனந்தவல்லி-சோமநாதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லியம்மன்-சோமநாதர், வீரஅழகர் கோவில் உள்ளது.

    சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் அம்மன்-சுவாமி சிம்மம், அன்ன பறவை, கிளி, இரட்டை குதிரை, இரண்டு ரிஷபம், காமதேனு வாகனங்களில் ரத வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நேற்று காலை திருக்கல்யாண நிகழ்ச்சி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இதைதொடர்ந்து இரவு பூ பல்லக்கு அலங்கரிக்கப்பட்டு அம்மன் பூபல்லக்கிலும், சோமநாதசுவாமி பிரியாவிடையுடன் யானை வாகனத்திலும் கோவிலில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாண கோலத்துடன் வீதிகளில் வலம் வந்தனர்.

    அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் நனைந்தபடி ஓம்நமச்சிவாயா கோஷம் மற்றும் சங்குநாதம் எழுப்பியும் வழிபட்டனர்.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின் பேரில் மானாமதுரை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் தலை மையில் ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் வருகிற 5-ந்தேதி காலை 7மணி முதல் 7.25மணிக்குள் வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும், 6-ந்தேதி வைகை ஆற்றில் நிலாச்சோறு உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • சிங்கம்புணரி அருகே மகா மாரியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா நடந்தது.
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கட்டுக்குடிப்பட்டியில் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காப்பு கட்டு தலுடன் சித்திரை பொங்கல் திருவிழா தொடங்கியது.

    ேநற்று மாமன்- மச்சான்கள் உறவு நீடிக்க வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்,பெண்கள் கலர் பொடி தூவியும், பூசியும், முட்டைகளை தலையில் உடைத்தும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர்.

    வெள்ளையம்மாள் சின்னக்கருப்பர் ஆலயத்தின் முன்பு பெண்கள் கும்மி யடித்தும், நேர்த்திகடன் வைத்த பக்தர்கள் பல்வேறு தெய்வங்கள் வேடமிட்டு சாமியாட்டம் ஆடினர். இங்கிருந்து இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு பெண்கள் கும்மியடித்து வழிபாடுகளை நிறை வேற்றினர்.

    அதைத்தொடர்ந்து செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவிலுக்கு பேத்தப்பன் வேடமிட்டவர் தலையில் கோழி இறகுகளை சொருகிய வாப்பெட்டி தலையில் கவிழ்த்தும், கோழி இறகு மீசையுடன் கையில் உலக்கையோடு அழைத்து வரப்பட்டார்.

    இந்த விநோத திருவிழா நிகழ்வால் திருஷ்டி கழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    • மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரை சித்திரை திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.

    மானாமதுரையில் 10 நாட்கள் திருவிழாவும் வைகைஆற்றில் நடைபெறு வதால் வைகை ஆற்று பகுதி களைகட்டிவிடும். ஆற்றில் எங்கு பார்த்தாலும் பொது மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    பொதுமக்கள் கூடுவதை முன்னிட்டு ஆற்றில் பொழுதுபோக்குக்காக ஜெயன்ட் வீல், டோரா டோரா, குட்டி ரெயில், பட்டர் பிளை ராட்சத பலூன், ராட்டினங்கள், கப் ராட்டிணங்கள் என ஏராள மான அம்சங்கள் இடம் பெறும். ராட்டிணங்கள் அமைப்பாளர்களால் அமைக்கபட்ட அலங்கார மின்விளக்குகளால் வைகை ஆற்று பரப்பு முழுவதும் ஜொலிக்கும்.

    இந்நிலையில் இந்தாண்டு திருவிழாவில் ஒருசில ராட்டினங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. தொட்டி ராட்டிணம் இயக்கப்படாததால் பொதுமக்களும், குழந்தைகளும் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அனைத்து வகை ராட்டினங்களையும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். இந்த தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு திருவிழாவில் ராட்டிணங்களை அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • நாலுகோட்டை அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது.
    • பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேற்பார்வையாளர் பிரபா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் சக்தி, மகளிர் குழு உறுப்பினர்கள் மீனாட்சி, காளியம்மை, கனிமொழி, நேத்ரா, தமிழரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெயர் ஒப்புதல் பெறப்பட்டது.

    இங்குள்ள அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை சேர்க்க வலியுறுத்தப்பட்டது. வரவு-செலவு கணக்கு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    கழிவுநீர் செல்ல உறிஞ்சி குழி அமைக்க பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், மாசிலாமணி, பால்ரூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முறையூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள முறையூர் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்.எம். சுரேஷ் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அடிப்படை கட்டமைப்பு-தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கே.வி.வி.டி. வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டு பயனாளிகளுக்கு வீடு கட்டித்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாள்தோறும் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்குமாறும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துமாறும் கிராம மக்களிடத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    இதில் சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, துணைத் தலைவர் கதிரேசன் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயநிதி குழுவினர், பணித்தள பொறுப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    • வாராப்பூர் கிராம சபை கூட்டம் நடந்தது.
    • வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் உள்ள கட்டையம்பட்டி பண்ணை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சியின் வரவு-செலவு விவரங்களை மக்களிடம் நேரடியாக துண்டு பிரசுரங்கள் மூலம் அனைவரிடமும் தலைவர் வழங்கினார். ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, குடிநீர், கிராம வளர்ச்சி திட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதமரின் மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதமரின் கிராம சாலை திட்டம், ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.

    விவசாயத்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ,காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள், மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பற்றாளர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

    • மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.
    • வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்றில் பிரசித்தி பெற்ற வீர அழகர் கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 11-ந்தேதிவரை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சுந்தரராஜ பெருமாளுக்கு காப்பு கட்டும் பூஜைகள் நடந்தன.

    தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது தினமும் இரவு பன வீர அழகர் என்ற நாமத்துடன் அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாள் மண்டகப்படிகளில் எழுந்தருளி, பின்னர் வீதி உலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6.25 மணியில் இருந்து 7.25 மணி வரை நடைபெறுகிறது. மறுநாள் (சனிக்கிழமை) இரவு மானாமதுரை கிராமத்தார் மண்டகபடி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதில் பக்தர்கள் வீர அழகருடன் வைகைஆற்றில் நிலாசோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று முதல்நாள் நிகழ்ச்சி மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெறுகிறது. நகராட்சி அலுவலகத்தில் வீர அழகரை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • கன்னிகா பரமேசுவரி அக்னி பிரவேச தின வழிபாடு நடந்தது.
    • தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கன்னிகா பரமேசுவரி கோவிலில் அன்னை வாசவி அக்னி பிரவேசம் செய்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் மூலம் அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் கன்னிகா பரமேசுவரி நாம சகஸ்ர லட்சார்ச்சனை பெண்களால் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி ஆரிய வைசிய மகாஜன சபையின் தலைவர் முத்துலட்சுமணன் மற்றும் மகிளா சபாவினர் செய்திருந்தனர்.

    • கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
    • ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குட்டையன்பட்டி கூவனக் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்களை அள்ளி செல்ல காத்திருந்தனர்.

    கிராம பெரியவர்கள், கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் அருகில் உள்ள அய்யனார் கோவிலில் வழிபாடுகளை முடித்து கண்மாய் கரையில் இருந்து வெள்ளை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து காத்திருந்த கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கச்சா, பரி, ஊத்தா முதலிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

    அவர்களிடம் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    நல்ல மழை பொழிந்து விவசாயம் பெருகவும், மக்களிடம் ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜாதி-மத பேதமின்றி அனைவரும் இலவசமாக மீன்பிடித்து செல்ல அமைக்கப்பட்டிருந்த இந்த மீன்பிடித் திருவிழா சமூக ஒற்றுமைக்கு குறிப்பிட்ட அம்சமாக விளங்கியது.

    • தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கினர்.
    • தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 11-ந் தேதி அதிகாலையில் தாய் கனகம், மகள் வேலுமதி ஆகியோரை கொலை செய்து 60 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருகில் படுத்திருந்த வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனை மண்டையை உடைத்து காயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பினர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக நேரடி கண்காணிப்பில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்பொழுது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருப்புவனத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் பெரிய பேரூராட்சி ஆகும். இங்குள்ள வைகைஆற்றின் மற்றொரு கரையில் மடப்புரம் காளிஅம்மன் மற்றும் முன்னோர்கள் திதி கொடுத்து வழிபடும் புஷ்பவனேசுவரர் கோவில்கள் உள்ளன.

    கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் மற்றும் திருப்புவனத்தை சுற்றி உள்ள ஏராளமான கிராம மக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருக்கும். அடிக்கடி போக்கு வரத்து நெருக்கடியும் ஏற்படும்.

    தற்போது சாலைகளிலும், பஸ்நிறுத்தம் மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இரவு-பகலாக சாலையில் சுற்றி திரியும் மாடுகள் முட்டி பலர் காயம டைந்துள்ளனர்.

    சிலநேரங்களில் மாடுகளுக்கிடையே ஏற்படும் சண்டையால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் மீது முட்டி மோதி ஏராளமான வாகனங்கள் சேதமடை கின்றன.

    மாடுகள் நிற்பதை அறியாத வெளியூர் பயணிகள் அவை முட்டி காயமடைந்துள்ளனர். திருப்புவனத்திற்கு பஸ்நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சாலைகளில் திரியும் மாடுகளால் அச்சமடை கின்றனர்.

    சாலையில் திரியும் மாடுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×