search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

    சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு

    • சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வுகளின்போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப்பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறை களுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர்கள் பாலகுரு (சிவகங்கை), கோபிநாத் (இளையான்குடி), தனி வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அந்தோணிராஜ் (இளையான்குடி), கண்ணன் (சிவகங்கை) உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×