search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brick kiln"

    • நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது‌.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 40). இவரது மனைவி அமுல் (30). தம்பதியினருக்கு சந்தியா (16), சினேகா (14), அரவிந்த் (12) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

    தெய்வசிகாமணியும், அவரது மனைவி அமுலுவும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 15 ஆண்டுகள் வாடகை மூலம் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

    தம்பதியினர் தினமும் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டப்பட்டது. அப்போது தெய்வசிகாமணி மற்றும் அமுல் ஆகியோர் சூளைக்கு பக்கவாட்டில் இறக்கப்பட்டுள்ள தகர சீட் அருகே தங்கியுள்ளனர்.

    மேலும் செங்கல் சூளையில் மூட்டப்பட்ட தீ அணையாமல் இருக்க சூளையை சுற்றி தார்பாய் மூடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை முதல் விடியும் வரை கணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    தொடர்மழையின் காரணமாக சூளை மூடப்பட்டு இருந்த தீ அணைந்து புகை மண்டலம் சூழ்ந்தது.

    அப்போது கிளம்பிய புகை அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் குபீரென பரவியது. அப்போது தூக்கத்தில் இருந்த தெய்வசிகாமணி, அமுலு ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறி கூச்சலிட்டனர்.

    பலத்த மழை பெய்ததால், இவர்களது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன், அந்த வழியாக சென்றபோது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டது.

    உடனே சீனிவாசன் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

    ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த, வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, தாசில்தார் செந்தில், இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அவினாசி தன்னார்வ அமைப்பினருக்கு புகார் வந்தன. புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனுக்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் போலீசார் 2 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்கள் 2 பேரும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையம் தனியார் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது வருவாய்த்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

    • செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ரமேஷ் என்பவர் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை தலைமையில் அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீரன் (வயது58), செல்வி (46), மகேஸ்வரி (29), குணா (22), திருமூர்த்தி (21), பிரகாஷ் (17), முத்துக்கருப்பன் (39), கயல்விழி (22), விஜயசாந்தி (17) உள்ளிட்ட 9 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது.

    உடனடியாக 9 பேரும், அவர்களுடன் இருந்த 5 குழந்தைகளும் உடமைகளுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புலிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கிருஷ்ண மூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறையினர் உடனிருந்தனர். 

    • பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள புதூர் காடம்பட்டி பகுதியைசேர்ந்தவர் பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி மற்றும் 2 மகன்களும் புதூர் காடம்பட்டியில் உள்ள குமார் என்பவரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு சூளையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார். அவரை

    மீட்டு சேலம் அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சையில் இருந்த உன்னிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை இறந்தார். இதுபற்றி பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    மோதிஹரி:

    பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டம், ராம்கர்வா பகுதியில் செங்கல் சூளை உள்ளது. இன்று வழக்கம்போல் ஊழியர்கள் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலையில் திடீரென அங்கு குண்டுவெடித்ததுபோன்று பலத்த சத்தம் கேட்டது. சிம்னி வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. இதனால் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர். சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் செங்கல் சூளை உரிமையாளர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூளையில் 13 வயதுடைய சுபஸ்ரீ என்ற மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறினர்.
    • பள்ளியில் 8-ஆம் வகுப்பு சேர்க்கப்பட்டு புத்தகம்,சீருடை மற்றும் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் வட்டார வளமை யத்தின் சார்பாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்று திறன் படைத்த மாணவர்களை கண்டறியும் பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உத்தரவின் படி நடைபெற்று வருகின்றது. அதன் அடிப்படையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் ஆகியோர் மாதானம் பகுதியில் ஆய்வு செய்த பொழுது செங்கல் சூலையில் 13 வயதுடைய சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் கூறினார். காலை மாதானம் செங்கல் சூளைக்கு சென்ற பொழுது மாணவி சுபஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரிய வந்தது பெற்றோர்களிடம் விசாரி த்த பொழுது கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியம் கல்பூண்டியில் 4 ஆம் வகுப்பு படித்தாகவும் தாரபுரம் கடலூர் கேரளா போன்ற இடங்களுக்கு. சென்று கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டதால் படிக்க வைக்க முடிய வில்லை என்று பெற்றோர்கள் கூறினார்கள்.

    பெற்றோர்களுடன் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மாவட்டஉதவி. திட்ட அலுவலர் ஞானசே கரன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் திருசங்கு மற்றும் ஜெய்கிருஷ்ணன் ஆலோசனையின் படி மாணவி அருகில் உள்ள சிவானந்த உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு சேர்க்க ப்பட்டு புத்தகம்மற்றும் சிருடை மற்றும் விலையி ல்லா பொருட்கள வழங்க ப்பட்டது. அப்பொழுது பள்ளியின் தலைமை ஆசிரியர் பவானி ஆசிரி யர்கள் மணிமாறன் மற்றும் சேகர் ஆகியோர் இருந்தனர்.

    • நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் வருவாய்துறை செங்கல்சூளையில் ஆய்வு.
    • செங்கல்சூளைக்கு 10 அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூரில் அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தப்பட்டு வருவதாக வருவாய்துறையினருக்கு புகார்கள் சென்றது. இதனை தொடர்ந்து நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மலையடிபுதூரில் இயங்கி வந்த செங்கல்சூளையில் ஆய்வு நடத்தினர்.

    அதில் செங்கல்சூளை அனுமதி இன்றி நடத்தப்பட்டதும், செங்கல்சூளைக்கு 10 அடி ஆழத்தில் மண் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதுபற்றி நாங்குநேரி மண்டல துணை தாசில்தார் கோமதி, திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் அனுமதி இன்றி செங்கல்சூளை நடத்தியதாக மாவடியை சேர்ந்த சங்கரநாராயணன் (வயது 56) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள கொளத்தாஞ்சேரியில் செங்கல் சூளை வைத்திருப்பவர் சதீஷ்.

    இந்த செங்கல் சூளையில் 11 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேலன் உத்தரவுப்படி தாசில்தார் பாக்ய லட்சுமி அந்த செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள், அவர்கள் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தனர்.

    இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அரிசி, துணி, பண உதவி ஆகியவை வழங்கப்பட்டது.

    அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 சிறுவர்களையும் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல் சூளை உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை அருகே செங்கல் சூளைகளுக்கு மணல் எடுப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில்  திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

    இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்கு திரண்ட   கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது. #kollidamriver

    அய்யம்பேட்டை:

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் தஞ்சை மாவட்டம் வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிக்காடு, கருப்பூர் ஆகிய கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பட்டுக்குடி கிராமம் வடக்கு தெருவிலும், கூடலூர் கிராமம் வடக்கு தெருவிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வெள்ள சூழ்ந்த வீடுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். கால்நடைகளை மேடான பகுதிகளில் கட்டி வைத்துள்ளனர்.

    அதுபோல அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு கொள்ளிடத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் நீரேற்று நிலையத்தையும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் இந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு, முருங்கை, சவுக்கு தோட்டங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. மேலும் கூடலூர் காளியம்மன்கோவில் கும்பாபிக்ஷேகம் இந்த மாதம் 23-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த கோவிலையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தில் செங்கல் சூளை ஒன்று மூழ்கி உள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது முதல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொள்ளிடக்கரைக்கு வந்து வெள்ளநீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர். அவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர். பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கொள்ளிட ஆற்றுக்கரை ஒரு சுற்றுலாதலம்போல் காட்சியளிக்கிறது. #kollidamriver

    ×