search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 11 பேர் மீட்பு
    X

    செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 11 பேர் மீட்பு

    செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அருகே உள்ள கொளத்தாஞ்சேரியில் செங்கல் சூளை வைத்திருப்பவர் சதீஷ்.

    இந்த செங்கல் சூளையில் 11 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேலன் உத்தரவுப்படி தாசில்தார் பாக்ய லட்சுமி அந்த செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள், அவர்கள் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தனர்.

    இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அரிசி, துணி, பண உதவி ஆகியவை வழங்கப்பட்டது.

    அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 சிறுவர்களையும் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல் சூளை உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×