தாராபுரம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்த குழந்தை தொழிலாளர்கள் 2 பேர் மீட்பு

புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தாராபுரம்:

தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அவினாசி தன்னார்வ அமைப்பினருக்கு புகார் வந்தன. புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனுக்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் போலீசார் 2 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர்.

இதனை தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்கள் 2 பேரும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையம் தனியார் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது வருவாய்த்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com