

தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள புதூர் காடம்பட்டி பகுதியைசேர்ந்தவர் பெருமாள் (வயது 50) இவர் ஒரு தனியார் கொரியர் நிறு வனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி மற்றும் 2 மகன்களும் புதூர் காடம்பட்டியில் உள்ள குமார் என்பவரின் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு சூளையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது பெருமாளின் இளையமகன் உன்னி கிருஷ்ணன் (16) நெருப்பில் தவறி விழுந்தார். அவரை
மீட்டு சேலம் அரசு மருத்து மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த உன்னிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை இறந்தார். இதுபற்றி பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.