search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshadweep festival"

    • கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா.
    • லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கேரள முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கேரளாவில் உள்ள கோவில்களில் நேற்று திருக்கார்த்திகை தீப விழா நடந்தது. அதேபோல் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை அலங்கார தீபாராதனைக்கு முன்னதாக கோவில் பிரகார விளக்கணி மாடங்களில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் லட்ச தீப விழா நடந்தது. சிறுமிகள், பக்தர்கள், பெண்கள் போட்டி போட்டு விளக்கேற்றினர். லட்ச தீப விழாவின்போது கோவில் ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டை அருகே பெரியநாயகி அம்பாள்-பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீப பெருவிழா
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெளிமுத்தி கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் பழம்பதிநாதர் கோவில் உள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் லட்சதீப பெருவிழா நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர், கோவை ஆனந்த கல்பா பவுண்டேஷன் ஈஸ்வரன் குருஜி, அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலாளர் யதீசுவரி சாரதேசுவரி பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    லட்ச தீப விழாவில் ஓம் நமச்சிவாயம், லிங்கம், தீபம், வேல் போன்ற வடிவங்களில் அகல் விளக்குகளை வரிசைப்படுத்தி கோவிலை சுற்றி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வைத்தனர். பொதுமக்கள் இந்த அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    விளக்குகள் வெளிச்சத்தில் கோவில் ஜொலித்தது. லட்சதீப விழாவை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் கதை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ×