என் மலர்tooltip icon

    சிவகங்கை

    செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் வகுப்பறையில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

    ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளான். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.

    இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.

    அதன்பின் நேற்று காலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவரும் வழக்கம்போல் வகுப்பிற்கு வந்துள்ளான். ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அருகில் மற்ற வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன.

    அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.

    அவரது சத்தம் ேகட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.

    பிரான்பட்டியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த கணினி திருத்த முகாம் நாளை நடைபெற உள்ளது.
    சிவகங்கை 

    அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.  

    சிவகங்கை மாவட்டம் பிரான்பட்டி கிராமத்தில் மட்டும் மஞ்சுவிரட்டு காரணமாக நடைபெற இருந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த முகாம் நாளை(17&ந்தேதி) நடைபெறுகிறது. பொதுமக்கள் மேற்கண்ட கிராமத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். 
    சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசி பெருவிழா தேரோட்டம் நடந்தது.
    நெற்குப்பை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் அருள்பாலிக்கும் 5 கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசிமக பெருவிழா  கடந்த 7ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  வடம்பிடித்து தொடங்கிவைத்தார். முன்னதாக கிராமத்தவர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து கிராமத்தார்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் தொடங்கியது.  

    4 ரதவீதிகளில் சுற்றிவந்த திருத்தேர் மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. 5 ரதங்களில் பவனிவந்த இந்த தேரோட்டத்தில்  விநாயகர், முருகப்பெருமான், பிரியாவிடையுடன்  ருத்ரகோடீஸ்வரர்,  ஆத்மநாயகி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4 ரதவீதிகளிலும் பெண்கள் கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். அனைத்து தேர்களும் நிலையை அடைந்தும் திருத்தேர் சக்கரத்தில் பக்தர்கள் சிதறு தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    மேலும் பக்தர்கள் வேண்டுதலுக்காக வாழைப்பழங்களை சூறையிட்டு பொது மக்களுக்கு தானமாக வழங்கினர். இதில் சதுர்வேதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி சீனிவாசன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
    ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமணமானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.
    சிவகங்கை:

    திருமணத்தை விமரிசையாக நடத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் இளைஞர்கள் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றவர்களின் பார்வையில்படும் வகையில் நடத்த வேண்டும் என்ற ஆவலில் பேனர் வைப்பது உள்ளிட்ட வி‌ஷயங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

    அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை அருகே உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்கு வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு மதுபாட்டில் மற்றும் சிக்கன் வழங்கப்படும் என்று மணமகனின் நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.

    பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனர் பார்ப்பவர்களை கவர்ந்தது. மது பாட்டில் வேண்டும் என்றால் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வாலிபர்கள் அறிவிப்பின்படி திருமண விழாவிற்கு வந்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டது.

    அந்த வாலிபர்கள், ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமண மானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.


    சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் பிரசித்திபெற்ற மஞ்சுவிரட்டு நாளை நடக்கிறது.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே  உள்ள அரளிப்பாறையில்  பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு மாசி மகத்தை ஒட்டி நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நாளை மாசிமகத்தையொட்டி மஞ்சுவிரட்டு நடக்கிறது. 

    இதன் முன்னேற்பாடாக தடுப்புவேலி அமைத்தல் மற்றும் மஞ்சுவிரட்டு திடலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.  ஊர் பெரியோர்கள், அதிகாரிகள் அமருவதற்கு பரண்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு. தென் மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள அரளிப்பாறையில் நடைபெறும் இந்த மாசிமகம் மஞ்சுவிரட்டு மிகவும் தனிச்சிறப்பு பெற்றது.

    இயற்கை பரணாக அமைந்துள்ள பாறையில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அமர்ந்து பாதுகாப்பாக பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.  

    பாறையில் மேல் உள்ள பாலமுருகன் கோவில் மேற்கு பார்த்து இருப்பது தனி சிறப்பு. இந்த கோவிலில் பிரசாதமாக மரிக்கொழுந்து  பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த கோவில் அமைந்துள்ள பாறையின் அடிவாரத்தில்  உள்ள வாடிவாசலில் நாளை நடக்கவிருக்கும் மாசிமகம் மஞ்சு விரட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் வருவாய்த்துறையினர்கள் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் கயல்செல்வி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர்.


    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 18,144 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம், முனைவென்றி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகள் நாள்தோறும் நெல் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பதிவு செய்யப்பட்ட பதிவேடு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த விவரம் போன்றவைகள் குறித்து பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்ட றிந்தார். 

    அப்பொழுது விவசாயிகள் பதிவு குறித்து விவரங்களை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, விவசாயிகளிடம் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:&

    நாள்தோறும் நெல் எடை போடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டுவந்து எடை போட்டு செல்லவேண்டும். காரணம், நெல் மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கி வைக்கும் பொழுது, மழைக்காலம் மற்றும் காலதாமதத்தால் ஏற்படும் அலைச்சல் போன்ற காரணங்களால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பதிவு செய்யப்பட்டு, எடை போடுவதற்கு தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் வந்தால் அனைத்து சிரமங்களையும் தவிர்த்து உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து விட்டு செல்லலாம். 

    அதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். மேலும் மாவட்டத்தில் 60 மையங்கள் மூலம் இதுவரை 18,144 டன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,397 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையத்திலும் 40 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. 

    குறிப்பாக விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் விவசாயிகளுக்கு நியமித்து, தடையின்றி நெல் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்க பணி மேற்கொண்டு வருகிறார்கள். 
    சிவகங்கையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் இளங்கோ (வயது 31), மணிவண்ணன்(26).

    இவர்களில் மணிவண்ணன் சிவகங்கை நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வாங்க கடைக்கு சென்றபோது, அங்கு புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களுக்கும் மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்த நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மணிவண்ணனின் சகோதரர் இளங்கோ மேலூர் சாலையில் நேற்று புதிதாக ஓட்டல் திறந்தார். காலையில் தொடங்கிய வியாபாரம் இரவு வரை விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் மணிவண்ணன் மற்றும் இளங்கோ வியாபாரத்தை முடித்து விட்டு சாப்பிட தொடங்கினர்.

    அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இங்கு மணிவண்ணன் யார் என்று கேட்டனர். இதையடுத்து மணிவண்ணன் எழுந்தார்.

    அப்போது அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இருவரையும் வெட்டியதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி தப்பிச்சென்று விட்டது. பின்பு பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் இளங்கோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மணிவண்ணன் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்துவந்த முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் தேவாலயம்  உள்ளது. இங்கு கடந்த 4-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் நவ நாள் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

    விழாவின் இறுதி நாள் திருவிழாவான சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் அருட்தந்தை தாமஸ் தலைமை தாங்கி திருப்பலியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாக்கிய தேர்ப்பவனி நடை பெற்றது. 

    வண்ண விளக்குகளால்   அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தேர்ப்பவனியை யொட்டி 150-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    மறுநாள் காலை காளையார் கோவில் பங்குத் தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைந்தது.




    திருப்புவனம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 19ந்தேதி நடைபெறும் தேர்தலில் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. 

    வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி திருப்புவனம் பேரூரா£ட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளர்கள் பெயர், சின் னங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகள் ஜினு, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் எந்திரத்தில் பொருத்தப்பட்டன. 

    இந்த பணியின் போது வார்டு வாரி யாக போட்டியிடும் வேட்பாளர்கள் அருகில் இருந்து தங்களது பெயர், சின்னங்களை சரிபார்த்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவும் இந்த பணியை ஆய்வு செய்தார். 
    திருப்பத்தூரில் மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் 18 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான சின்னத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. 

    முன்னதாக மின்னணு எந்திரம் சரி பார்க்கப்பட்டு வட்டார தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சின்னத்தை பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

     மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.  இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மன்சூர் அலி, காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரேணுகாதேவி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வேட்பாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.
    சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 9ந் தேதி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

     10ந் தேதி 2 மற்றும் 3ம் காலயாக பூஜைகள் நடைபெற்றன. 11ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, புனித நீர் கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில்உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மின்னணு எந்திரங்களை வேட்பாளர்கள் முன்னி லையில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களுக்கும் ஒதுக்குவது சம்பந்தமாகவும்  ஆலோசிக்கப்பட்டது.  செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இது குறித்த விளக்கத்தை வேட்பாளர்கள் முன்னிலையில் செயல் அலுவலர் செய்முறையோடு தெளிவுபடுத்தினார். 

    இந்த நிகழ்ச்சியில் வட்டார தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
    ×