என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது.
இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
அகழாய்வு பணிக்கான தொடக்க விழா ஏற்பாடுகளை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. எங்களை கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? நீட் தேர்வில் வென்றவர்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்?

நீட் தேர்வில் வென்றவர்களுக்கு தனியார் கல்லூரியில் பணம் வசூல் செய்யாமலா சீட் வழங்குகிறார்கள்? பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்றுதான். இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல. சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? நாம் தமிழர் கட்சியை விட பா.ஜ.க. தனித்து நின்று ஒரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் அது பெரிய கட்சி என ஏற்றுக் கொள்கிறேன்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்து விடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக அங்குள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.
இவரது தந்தை சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இதன் காரணமாக அந்த மாணவி காரைக்குடியில் தனது தாய் மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக காரைக்குடியில் மாணவி தனது வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது தாயாருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனது தாயாரை அருகில் உள்ள தனியார் கிளீனிக்குக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் மோகன்குமார் என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அப்போது டாக்டர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் அந்த மாணவி தவித்து வந்தார்.
இதற்கிடையே சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த அவரது தந்தை சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். அப்போது டாக்டரின் அத்துமீறல் குறித்து மகள் தனது தந்தையுடன் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் டாக்டர் மோகன்குமார் மீது காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோகன்குமாரை கைது செய்தனர்.
தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த மாணவிக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் காரைக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






