என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    X
    வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

    திருப்புவனம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 19ந்தேதி நடைபெறும் தேர்தலில் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. 

    வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி திருப்புவனம் பேரூரா£ட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளர்கள் பெயர், சின் னங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகள் ஜினு, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் எந்திரத்தில் பொருத்தப்பட்டன. 

    இந்த பணியின் போது வார்டு வாரி யாக போட்டியிடும் வேட்பாளர்கள் அருகில் இருந்து தங்களது பெயர், சின்னங்களை சரிபார்த்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவும் இந்த பணியை ஆய்வு செய்தார். 
    Next Story
    ×