என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாயிகளிடம் இருந்து 18,144 டன் நெல் கொள்முதல்
Byமாலை மலர்15 Feb 2022 10:20 AM GMT (Updated: 15 Feb 2022 10:20 AM GMT)
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 18,144 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம், முனைவென்றி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகள் நாள்தோறும் நெல் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பதிவு செய்யப்பட்ட பதிவேடு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த விவரம் போன்றவைகள் குறித்து பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்ட றிந்தார்.
அப்பொழுது விவசாயிகள் பதிவு குறித்து விவரங்களை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, விவசாயிகளிடம் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:&
நாள்தோறும் நெல் எடை போடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டுவந்து எடை போட்டு செல்லவேண்டும். காரணம், நெல் மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கி வைக்கும் பொழுது, மழைக்காலம் மற்றும் காலதாமதத்தால் ஏற்படும் அலைச்சல் போன்ற காரணங்களால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பதிவு செய்யப்பட்டு, எடை போடுவதற்கு தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் வந்தால் அனைத்து சிரமங்களையும் தவிர்த்து உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து விட்டு செல்லலாம்.
அதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். மேலும் மாவட்டத்தில் 60 மையங்கள் மூலம் இதுவரை 18,144 டன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,397 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையத்திலும் 40 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் விவசாயிகளுக்கு நியமித்து, தடையின்றி நெல் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்க பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X