என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாம்
கணினி திருத்த முகாம்
பிரான்பட்டியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த கணினி திருத்த முகாம் நாளை நடைபெற உள்ளது.
சிவகங்கை
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் பிரான்பட்டி கிராமத்தில் மட்டும் மஞ்சுவிரட்டு காரணமாக நடைபெற இருந்த முகாம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த முகாம் நாளை(17&ந்தேதி) நடைபெறுகிறது. பொதுமக்கள் மேற்கண்ட கிராமத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






