என் மலர்
சிவகங்கை
திருமணத்தை விமரிசையாக நடத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் இளைஞர்கள் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றவர்களின் பார்வையில்படும் வகையில் நடத்த வேண்டும் என்ற ஆவலில் பேனர் வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.
அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை அருகே உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்கு வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு மதுபாட்டில் மற்றும் சிக்கன் வழங்கப்படும் என்று மணமகனின் நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனர் பார்ப்பவர்களை கவர்ந்தது. மது பாட்டில் வேண்டும் என்றால் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வாலிபர்கள் அறிவிப்பின்படி திருமண விழாவிற்கு வந்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டது.
அந்த வாலிபர்கள், ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமண மானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.
சிவகங்கை:
சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் இளங்கோ (வயது 31), மணிவண்ணன்(26).
இவர்களில் மணிவண்ணன் சிவகங்கை நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வாங்க கடைக்கு சென்றபோது, அங்கு புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களுக்கும் மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முன்விரோதத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்த நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மணிவண்ணனின் சகோதரர் இளங்கோ மேலூர் சாலையில் நேற்று புதிதாக ஓட்டல் திறந்தார். காலையில் தொடங்கிய வியாபாரம் இரவு வரை விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் மணிவண்ணன் மற்றும் இளங்கோ வியாபாரத்தை முடித்து விட்டு சாப்பிட தொடங்கினர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இங்கு மணிவண்ணன் யார் என்று கேட்டனர். இதையடுத்து மணிவண்ணன் எழுந்தார்.
அப்போது அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இருவரையும் வெட்டியதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி தப்பிச்சென்று விட்டது. பின்பு பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் இளங்கோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிவண்ணன் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்துவந்த முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி டி.டி.நகரை சேர்ந்தவர் சோமகணேசன் (35). எம்.பி.ஏ பட்டதாரி. இவர் காரைக்குடி 100 அடி ரோட்டில் ‘கேப் ஸ்டாக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்தார். உறவினர்கள் மற்றும் படித்த நண்பர்களிடம் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 60-க்கும் மேற்பட்டோரிடம், ரூ 40 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்கிடையில் தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என காரைக்குடியை சேர்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவான சோம கணேசனின் மனைவி வள்ளியம்மை தனது கணவரை காணவில்லை என கூறி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் சோமகணேசன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோமகணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து காரைக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சோம கணேசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பலர் சோம கணேசன் மீது புகார் அளித்து வருகின்றனர். காரைக்குடியில் தொடர்ச்சியாக இதுபோல் நிதி மோசடி புகார்கள் எழுந்து மக்கள் ஏமாந்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






