என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளில் அதிகாரிகள் வார்டுகளை மறுவரையறை செய்ததில் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வார்டு தனித்தனியாக ஒதுக்கப்பட்டதால் குழப்பம் நிலவி வருகிறது.
குடும்பத்தில் உள்ள 3 பேருக்கு ஒருவருக்கு 3-வது வார்டு இன்னொருவருக்கு 4-வது வார்டு இன்னொருவருக்கு 6-வது வார்டு என ஒதுக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கானாடுகாத்தான் பேரூராட்சியில் 3, 5 வார்டுகளிலும் உள்ள குழப்பத்தால் பாலையூர் கிராமமக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. பழையூர் பகுதியில் ஏற்கனவே 1, 2 என 2 வார்டுகள் இருந்தன.ஆனால் அதிகாரிகள் சமீபத்தில் வார்டுகளை மறுவரையறை செய்தபோது 2-வது வார்டை 2-ஆக பிரித்து 3, 5-வது வார்டுகளில் சேர்த்தனர். இதையடுத்து பழையூர் பகுதி மக்கள் வார்டை ஏற்கனவே இருந்தபடி சீரமைத்து தர வேண்டும் இல்லாவிட்டால் தேர்தலை புறக்கணிப்பதாக போவதாக அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
நடவடிக்கை இல்லாத நிலையில் பழையூர் பகுதியைச் சேர்ந்த பழைய 2-வது வார்டு மக்கள் திடீரென தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தற்போது பாலையூர் பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால், அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நேற்று கீழடியில் பணிகள் நடைபெற்றபோது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 2 பச்சை நிறமும், 2 ஊதா நிறத்திலும் உள்ளன.
தொடர்ந்து குழி தோண்டியபோது நேற்று மாலையில் செவ்வக வடிவில் ஒரு பொருள் கிடைத்தது. அதனை ஆய்வு செய்தபோது, அது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் என தெரிய வந்துள்ளது. இதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கன சதுர வடிவத்தில்தான் பகடைக்காய் கிடைத்து வந்தன. தற்போது நடந்த அகழாய்வு பணியில் கீழடியில், முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழாவின் 10-ம் நாளில் மஞ்சு விரட்டு நடைபெறும். திறந்தவெளியில் நடைபெறும் இதனை காண சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருவார்கள்.
இந்த ஆண்டு மஞ்சு விரட்டு நேற்று நடைபெற்றது. அரளிப்பாறை மலை மீதுள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சேவுகமூர்த்தி அய்யனார்கோயில் காளைகளுக்கு மரியாதை செய்து, காளைகளுக்கு வேஷ்டி, துண்டு வழங்கப்பட்டன. பிறகு தொழுவத்திலிருந்து முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் மற்ற காளைகள் தொடர்ந்து அவிழ்க்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட 125 மாடுகள் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. எனினும் ஆங்காங்கே வயல்வெளிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், கட்டு மாடுகள் (தொழுவத்தில் அடைக்காத மாடுகள்) அவிழ்த்து விடப்பட்டன.
இதில் கூட்டத்தில் சீறிப்பாய்ந்து சென்ற மாடுகள் வழியில் சிக்கியவர்களை முட்டி தள்ளியது. எனினும் இளைஞர்கள் அதனை விரட்டி சென்று அடக்க முயன்றனர். மஞ்சுவிரட்டு மாடு முட்டியதில் மேலூரை அடுத்த கிழையூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் (வயது 60) பலத்தகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுந்தரம் இறந்தார். மாடுகள் முட்டியதில் சுமார் 110 பேருக்கு மேல் காயமடைந்தனர். இதில் பலர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.






