என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாம்
பட்டா திருத்த சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
சிவகங்கை
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டுசெல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
அதன்படி நாளை(18ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் வெள்ளிபட்டி கிராமத்திலும், தேவ கோட்டை வட்டத்தில் திருப்பாக்கோட்டை கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் மாதவராயன் பட்டி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் வடவன்பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் வேம்பத்தூர் கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மிளகனூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் கொத்தங்குளம் குரூப், வு.ஆலங்குளம் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில்¢ பெரும்பச்சேரி கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் கால்குளம் கிராமத்திலும், நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.
Next Story






