என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் கும்பாபிஷேகம்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை
சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 9ந் தேதி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
10ந் தேதி 2 மற்றும் 3ம் காலயாக பூஜைகள் நடைபெற்றன. 11ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, புனித நீர் கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Next Story






