என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • 20 நிமிடங்களில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டத்தில் பசுமை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 6 நாட்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு கடந்த 9-ந் தேதி காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பசுமை திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    5-ம் நாளான நேற்று வரை 80 ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சமுக ஆர்வலர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினர்க ளுக்கும் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, 6-ம் நாளான இன்று கின்னஸ் சாதனை முயற்சியாக, 20 நிமிடங்களில் 25 ஆயிரத்து 350 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடந்தது.

    அழகப்பா கலை கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சியை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் லால்வேனா, காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மரங்களை ஆர்வமுடன் நட்டனர்.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பட்டுள்ளது. முடிவில் ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.

    • விவசாயிகள் உணவு உற்பத்தியை பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் செட்டிநாட்டில் உள்ள உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரிய மிக்க பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களை சாகுபடி செய்து வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளது.

    பாரம்பாரிய மிக்க உள்ளுர் ரகங்கள் மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான விரும்பத்தக்க புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

    தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தனி நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் சிறந்த பண்புகளைக் கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளுர் பயிர் ரகங்களை கண்டறிந்து பகுதிக்கேற்ற சிறந்த மேம்பாட்டு ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டம் தோறும் இது குறித்த கண்காட்சிகள் வருடத்திற்கு 3 முறை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பாரம்பரிய மிக்க உள்ளுர் ரகங்களை காட்சிப்படுத்துதல், வேளாண் பல்கலைக்கழக பயிர்களை காட்சிப்படு த்துதல் விவசாய விஞ்ஞா னிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு திருவிழா, மரபியல் பன்முகத்தன்மை குறித்த பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப உரை போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

    அனைத்து விவசாயி களும் தங்கள் பகுதியில் விளையும் சிறந்த பண்புகளைக் கொண்ட பாரம்பரியமிக்க உள்ளுர் உயர்ரகங்களை காட்சிப் பொருளாக வழங்கி கண்காட்சியில் பங்கேற்று இதில் இடம் பெற்றுள்ள வேளாண் சார்ந்த உற்பத்திப் பொருட்களை அறிந்து, இது குறித்த கூடுதல் விவரங்களை அலுவலர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். விவசாயிகள் தங்களது உணவு உற்பத்தியைப் பெருக்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தடுப்பு கம்பியில் பைக் மோதி வாலிபர் பலியானார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் கல்லூரியில் படித்து வரும் தனது தங்கையை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அவர் கல்லல் அருகே உள்ள ஏழுமாபட்டி பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட பொது மக்கள் நாச்சியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து பிரவீன்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் ப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பொட்டபாளையம் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்து, முக்குடி ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் பசுமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு அதனை முறையாக பராமாிக்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

    அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆண்டு களுக்குள் 50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று திட்டமிடப்பட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலா்களின் பங்களிப்புடன் அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 2020-21-ம் ஆண்டு மற்றும் 2021-22-ம் ஆண்டிற்கு குறுங்காடு வளா்ப்பதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டு, மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி பொட்டபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2022-23-ன் கீழ் சுமார் 3½ ஏக்கா் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு மரக்கன்று வகைகளான வேம்பு 150 எண்ணிக்கையும், புங்கை 200 எண்ணிக்கையும், பூவரசு 150 எண்ணிக்கையும், தேக்கு 100 எண்ணிக்கையும், மூங்கில் 100 எண்ணிக்கையும், நிலவாகை 100 எண்ணிக்கையும், வாகை 100 எண்ணிக்கை என மொத்தம் 900 எண்ணிக்கை கொண்ட குறுங்காடு அமைப்பதற்காக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    முக்குடி ஊராட்சியில். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் 2021-22-ம் ஆண்டில் குறுங்காடு வளா்ப்பதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டு, கொய்யா, மா, தென்னை, வேம்பு, புளி, வாழை, மூங்கில், முருங்கை, சப்போட்டா, தேக்கு உள்ளிட்ட 20 வகையான சுமார் 4 ஆயிரத்து 250 மரக்கன்று வகைகள் நடப்பட்டு முறையாக பராமாிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவிப் பொறியாளா்கள் தமிழரசி, தேவிகா, ப்புவனம் வட்்டார வளா்்ச்சி அலுவலா்கள் அங்கயங்கண்ணி (வ.ஊ.), ராஜசேகரன் (கி.ஊ), ஒன்றியப்பணி மேற்பார்வையாளா் செல்வம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • அரசு பள்ளியில் படிப்பதே பெருமை என்ற நிலை முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சா் பெரியகருப்பன் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜா் முதலமைச்சராக இருந்தபோது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியா் பள்ளியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார். இருப்பினும், மாண வா்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார்.

    இதன்மூலம் ஏராள மானோா் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார். அதன் தொடா்ச்சியாக, முதலமைச்சராக இருந்த அண்ணா ஓர் ஆசிரியா் பள்ளியை ஈராசிரியா் பள்ளியாக தரம் உயா்த்தினார்.

    அவரது வழியில் செயல்பட்ட கருணாநிதி அனைவருக்கும் இலவச கல்வியை வழங்கி புதிய வரலாற்றை உருவாக்கினார்.

    அதேபோல் மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவ சமுதாயத்தினை ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பஸ் பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகிறது.

    அதன்படி, அவா்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    தற்போது அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உயா்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் படிப்பதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தை களைந்து அரசுப்பள்ளியில் குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும்.

    பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த ப்பட்டு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனா். இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சோ்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுவாமிநாதன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவா் சண்முகவடிவேல், ஊராட்சி மன்றத்தலைவா் சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வாி, சுருளிமூர்த்தி, சகாதேவன், பெற்றோர், ஆசிரியா் கழகத்தலைவா் சக்கரவா்த்தி, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

    • கீழடி அகழ்வாராய்ச்சியை பார்வையிட வருபவர்களுக்கு நிழற்குடை-கழிவறை வசதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது.

    தொல்லியல் ஆராய்ச்சி யாளர்களின் ஆய்வு பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் பார்வையாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள் தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.

    அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பல அரியவகை பொருட்களை அங்கேயே மக்கள் பார்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம், அருங்காட்சியக பொருட்கள் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

    தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றுவரும் பகுதிகள், அருங்காட்சியகம் போன்றவற்றை காண மதுரையில் உள்ள பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தூரமே உள்ளது. பண்டைய தமிழரின் வைகைகரை நாகரிகமாக, அப்போதைய மக்கள் வாழ்வியலுக்கு பயன்படுத்திய அரிய பொருட்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் கிடைத்து வருகிறது.

    அகழ்வாராய்ச்சி பகுதிக்கு எளிதில் சென்று வரும் வகையில் இங்கு போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிபடுகின்றனர். குறிப்பாக மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அகழ்வாராய்ச்சி நடை பெறும் பகுதிக்கு செல்லும் வழியில் பயணிகள் நிழற்குடை, கழிவறை வசதி செய்ய வேண்டும்.

    கீழடி பஸ்நிறுத்தத்தில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அகழ்வாராய்ச்சி பகுதிக்கு பொதுமக்கள், மாணவ- மாணவிகள் எளிதாக செல்ல மதுரை மாட்டுத்தாவணி, பெரியார் பஸ்நிலையம் மற்றும் விரகனூர் சுற்றுசாலையில் இருந்து நேரடி பஸ்கள் விடவேண்டும். அரசுமினி பஸ்கள் இயக்க வேண்டும்.

    மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் முக்கிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வைப்பகம் பற்றிய தகவல் பலகைகள் அமைக்கவேண்டும். கீழடிபகுதிக்கு செல்ல நான்கு வழிசாலையில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.

    ரெயில்களில் வரும் பயணிகளின் வசதிக்காக அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் அருகே உள்ள ரெயில் நிலையமான சிலைமான் ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுகவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 10 நிமிடத்தில் 400 மரக்கன்று நடும் சாதனை நிகழ்ச்சி நடந்தது.
    • ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    சிங்கம்புணரி

    பசுமை தமிழக இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து மாவட்டத்தினை பசுமையானதாக ஆக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 20 ஆயிரம் நாட்டுவகை மரக்கன்றுகள் நடும்விழா மாவட்டம் முழுவதும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி ஒன்றியத்தில் கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 200 நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் முனியாண்டி தலைமையிலும், காளாப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணிய ராஜு தலைமையிலும், செல்லியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும் நடந்தது.

    இதில் வேம்பு, புளி, பூவரசு, மா, நெல்லி, புங்கை, மகோகனி, நீர்மருது போன்ற நாட்டுவகை மரக்கன்றுகள் 10 நிமிடத்திற்குள் 400 மரக்கன்கள் நடவு செய்து சாதனை புரிந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், லட்சுமணராஜு, தலைமை ஆசிரியர்கள் சுபா, முனியாண்டி, ரமேஷ் மற்றும் ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலின், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தம்மாள், அகிலா கண்ணன், ரமேஷ், மகேஷ் கிராம நிர்வாக அலுவலர் அருண், உதவியாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.

    • பெரியாறு நீட்டிப்பு பாசன பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான பெரியாறு வைகை பாசனத்திற்காக, பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கா் நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19 ஆயிரத்து 439 ஏக்கா் நிலங்களுக்கும், ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கா் நிலங்களுக்கு, வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் கடந்த 7.9.2022 முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8 ஆயிரத்து 461 மி.க.அடி தண்ணீரை வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்டது.

    தற்போது, தண்ணீர் திறக்கப்பட்ட ஒருமாத காலத்தில் கட்டாணிப்பட்டி முதல் கால்வாயில் 33 கண்மாய்களுக்கும், கட்டாணிப்பட்டி 2-ம் கால்வாயில் 3 கண்மாய்களுக்கும், 48-வது மடை கால்வாயில் 10 கண்மாய்களுக்கும், சீல்டு கால்வாயில் 6 கண்மாய்களுக்கும் மற்றும் லெஸ்ஸீஸ் கால்வாயில் 14 கண்மாய்க்கும் மொத்தம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 66 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.

    பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று (15-ந் தேதி) முதல் 20 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 க.அடி, விநாடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை கூட்டுறவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 91 விற்பனையா ளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 12 கட்டுநர்கள் (பேக்கர்) பணி யிடங்க ளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbsvg.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யூ-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக்கட்ட ணங்கள் செலுத்த தேவையான சலான்களை மேற்கண்ட இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.drbsvg22@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய அலைபேசி எண் 70942 55260 வாயிலாகவும் சிவகங்கை மாவட்ட ஆன்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கையில் வருகிற 21-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இதில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூரில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்படும்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின் பகிர்மான கோட்டத்திற்கு உட்பட்ட கீழசேவல்பட்டி, ஆ.தெக்கூர் ஆகிய மின் பகிர்மான நிலையங்கள் மற்றும் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் நாளை (15-ந் தேதி) பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இப்பகுதி களை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்தார்.
    • தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி, செட்டிநாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் லால்வேனா, கலெக்டர் மதுசூதன்ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.138.95 லட்சம் மதிப்பீட்டில் செங்கமளத்தான் ஊரணியில் நடைபெற்று வரும் மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் உபகரணங்களான மரம் அறுக்கும் எந்திரம், சவுக்குக்கட்டை, சாரக்கயிறு, தயார் நிலையில் உள்ள மணல் மூட்டைகள் உள்ளிட்டவைகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, ரெயின்கோட்டுகள், தலைக்கவசம், ஒளிரும் சட்டை, பிளாஸ்டிக் தார்பாய் போன்ற உபகரணங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பள்ளித்தம்மம் ஊராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறுவத்தி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், விஜயபுரம் சமத்துவபுரத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ள சமுதாயக்கூடம், மணவயல் ஊராட்சி, கோட்டூர் கிராமத்தில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிர் அடிக்கும் தளம் தொடர்பான கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதேபோன்று திருமணவயல் ஊராட்சி, தேவகோட்டை நகராட்சி, செட்டிநாடு ஊராட்சி பகுதிகளிலும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பு அலுவலர் லால்ேவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது, பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

    ×