search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்
    X

    தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள்

    • தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
    • தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து ''எனது வாக்கு, எனது உரிமை-ஒரு வாக்கின் சக்தி'' என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியை நடத்தியது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக சுவரொட்டி தயாரித்த மாணவ-மாணவிகளை பாராட்டினர். சிறந்த சுவரொட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரால் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோருடன் இணைந்து தலையாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×