என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • எமனேசுவரம் கண்மாய் நீர்வழிப்பகுதி ஆக்கிரமிப்பால் 7 கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை. நாகராஜனிடம் முறையிட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-வது பெரிய கண்மாய் எமனேசுவரம் கண்மாய் ஆகும். இந்த கண்மாய்க்கு பாத்தியப்பட்ட குமார குறிச்சி, காந்திநகர், பெரும்பச்சேரி, மலையான் குடியிருப்பு, எமனேசுவரம், சுந்தரனேந்தல், ரகுநாதமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசனம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களில் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இங்கு வைகை ஆறு நீர்ப்பாசனத்தை நம்பியே விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    வைகை கால்வாய் வழியாக வரக்கூடிய நீர் வழித் தடத்தை மறைத்து உயர்ந்த கட்டிடங்களை கட்டி அந்த பகுதியை மேடாக்கி கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்தை வராமல் தடுத்து வருவதாக மேற்கண்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை.நாகராஜனிடம் முறையிட்டனர்.

    அதன்பேரில் அவர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சிவகங்கை மாவட்ட கலெக்டர், இளையான்குடி தாசில்தார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எமனேசுவரம் கண்மாய் உள்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் பட்டா நிலங்க ளில் புதிய வீடுகள், குடியி ருப்புகள் கட்டி வருகின்றனர். விவசாயம் செய்யக்கூடிய நஞ்சை நிலங்களை அழித்து பிளாட்டு போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நீர்வழி பகுதியில் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் புதிய கட்டிடங்கள் கட்டுவதால் கண்மாயின் நீர்வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரி களிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது கண்மாயின் உள்வாயிலில் மராமத்து வேலைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் கண்மாயின் நீர்ப் பிடிப்பு எல்லை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் நீர்வரத்து, விநியோகம் போன்றவை பாதிக்கும் நிலை உள்ளது.

    இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கண்மாய் பகுதி பாலைவனமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எமனேசுவரம் கண்மாயை நம்பி விவசாயம், குடிநீர் போன்றவைகளை எதிர்பார்த்து வாழும் 7 கிராம மக்கள் சோதனைகள், துயரங்கள், வறட்சிகளை சந்திக்கும் நிலை உள்ளது.

    எனவே குமாரகுறிச்சி எமனேசுவரம் கண்மாயை நம்பி வாழும் ஏழை, எளிய விவசாய மக்கள் பாதிப்ப டையாத வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு வருவாய் துறை சான்றுகள் கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர், புல்லமடை, எருமைப்பட்டி ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெறுவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் திருவாடனை ஊராட்சி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பெற்று பயன்பெறுகிறீர்களா? என்று கேட்டறிந்ததுடன், மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனா ளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற கலெக்டர் குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா? என்றும், நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா? குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    தங்களுக்கு தேவையான கோரிக்கைகளில் கால தாமதம் ஏற்பட்டால் இதுகுறித்து எனக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தர விடப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், புல்லமடை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் எருமைப்பட்டி ஊராட்சியில் பொது மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் பயன் குறித்து கேட்டறிந்த கலெக்டர் விஷ்ணுசந்திரன் தங்களின் அத்தியாசிய கோரிக்கைகளை உடனுக்குடன் ஆய்வு செய்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றார்.

    அதேபோல் தகுதியுடைய நபர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

    • மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

    பனைக்குளம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் இலங்கைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாக தங்கம், கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்பட பல்வேறு பொருட்களை கடத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

    இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் தங்கத்தை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்கள் வரும் பகுதிகளுக்கு ரோந்து படகில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு மன்னார் வளைகுடா கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் ஹோவர் கிராப்ட் கப்பலில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.

    அப்போது மண்டபத்திற்கும், வேதாளைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு நாட்டுப்படகு வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளை பார்த்ததும் நாட்டுப்படகில் இருந்தவர்கள் ஏதோ ஒரு பொருளை கடலில் வீசியுள்ளனர்.

    இதையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினர் மற்றும் கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர். அந்த படகில் வேதாளை பகுதியை சேர்ந்த முகமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியை சேர்ந்த ரவி ஆகியோர் இருந்தனர்.

    அவர்களை மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு அழைத்து சென்று தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கடலில் வீசியது தங்கக்கட்டிகளா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது இலங்கை பகுதியில் இருந்து மேலும் ஒரு நாட்டுபடகு வருவது தெரியவந்தது. அந்த படகை போலீசார் மடக்கி, அதில் வந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் இலங்கையில் இருந்து ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வந்த படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக நேற்று 3 பேர் வந்த படகையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கடத்தல்காரர்கள் படகில் இருந்து கடலில் பார்சலை வீசிய பகுதி மணாலி தீவுப்பகுதி ஆகும். அங்கு கடலில் தங்கம் வீசப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் மீனவர்களை வைத்து தங்கத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்ட சம்பவம் மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் நாளை கொடியேற்றம் நடக்கிறது.
    • வருகிற 12-ந்தேதி சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்கா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்ற னர். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது.

    உலமாக்கள், தர்கா ஹக்தார்கள் இணைந்து தர்கா மண்டபத்தில் ஓதுகிறார்கள். மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உலக மக்களின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சிறப்பு பிராத்தனை நடத்துகிறார். இன்று (30-ந்தேதி) மாலையில் தர்கா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படுகிறது.

    நாளை (31-ந்தேதி) ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3.30 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்படுகிறது. முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்து மாலை 6 மணியளவில் பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 12-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்குகிறது. 13-ந்தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. 19-ந்தேதி கொடி இறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் எஸ்.முகம்மது பாக்கிர் சுல்தான் தலைமையில் செயலாளர் எஸ். செய்யது சிராஜ்தீன், துணைத்தலைவர் ஜெ.சாதிக்பாட்சா மற்றும் ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    அபிராமம்

    கடந்த ஆண்டு ராமநாத புரம் மாவட்டம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமும் இன்று வரை வழங்கப்பட வில்லை. மேலும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனையும் இன்றுவரை தள்ளுபடி செய்யவில்லை.

    நெல், உரம், உழவு செய்யும் கூலி உயர்வு காரணமாகவும், வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாகவும் விவசாயிகள் விவசாயத்தை நம்பி இருந்ததில் எந்தவித பயனுமில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்கி குவித்து வீட்டுமனைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்றிவிட்டனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கடும் வறட்சி, புயல், வெள்ள சேதம் என்றாலே பாதிக்கப்படுவது நாங்கள் தான். அபிராமம் பகுதியில் நெல், மிளகாய், பருத்தி விவசாயம்தான் அதிகமாக உள்ளது. அதிகமாக மழை பெய்தா லும், வறட்சியானலும் பாதிக்கப்படுவது நாங்கள்தான். விவசாயம் செய்வதற்கு வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எந்த பயனும் இல்லாததால் விரக்தியில் இருக்கிேறாம்.

    அப்படிபட்ட விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி விளைநிலங்களை பணக்காரர்கள் வாங்கி குவிக்கின்றனர் என்றார்.

    • பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் பாலம் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பரமக்குடி

    மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெளிச்சாத்தநல்லூர் தொடக்கத்தில் உள்ள பாலம் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை பயன் பாட்டில் இருந்து வருகிறது.

    குறுகிய பாலமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாக னங்கள், இருசக்கர வாக னங்கள், பாதசாரிகள் நடந்து செல்லும்போது தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. பழமையான பாலம் என்பதால் மராமத்து செய்யப் படாமல் பழுதடைந்துள்ளது.

    இதனால் மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை கடந்து தான் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    பாலம் கட்டிய நாள் முதல் இன்றுவரை சம்மந்தப்பட்ட துறை மூலம் எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறாமல் இருப்பதால் பாலம் முழுமை யாக சேதமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாலத்தை சுற்றிலும் செடிகள் முளைத்தும், ஆங்காங்கே சிமெண்டு கற்கள் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விபரீதம் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

    48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • கமுதி, கடலாடி வட்டங்களில் ரூ.29.21 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி வட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற் காக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கமுதி வட்டம் கோட்டை மேடு பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்ததை யொட்டி அங்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்து 105 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டு செயல்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.

    இதன் மூலம் 142 வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும். அதே போல் கீழவலசை பகுதி யிலும் ரூ.12 லட்சத்து 600 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் 82 வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்கள் தடை யின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.

    கடலாடி வட்டம், கீழச்செல்வனூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 80 மதிப்பீட்டில் மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இங்கு 56 வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு மின்மோட்டார்கள் தடையின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.

    இதே போல் பொது மக்களின் தேவைக்கேற்ப மின்மாற்றிகள் பல்வேறு கிராம பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மக்களின் தேவையை அறிந்து சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, மின் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் ரெஜினா, உதவி பொறியாளர்கள் சாதிக், விஜயா, முகமது இப்ராகிம், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சர் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாக நவாஸ் கனி எம்.பி. குற்றம் சாட்டினார்.
    • பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருவதாக கூறினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டது. அதனை நவாஸ் கனி எம்.பி. தலைமை தாங்கி திறந்து வைத்தார்.

    முன்னதாக நெல்மடூர் ஊராட்சி மன்றத்தலைவி சுகன்யா சதீஷ் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார். பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதைத்தொடர்ந்து நவாஸ்கனி எம்.பி. பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. அமைச்சரின் வீடுகளில் வரு மான வரித்துறை சோதனை நடந்தது. பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

    கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.கவை எப்படியாவது ஒடுக்கி விடலாம் என நினைத்து இதுபோன்ற செயலை பா.ஜ.க. செய்து வருகிறது. இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பயப்பட மாட்டோம்.

    கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும் நபராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று திருப்புல்லாணி கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பெரியபட்டினம் பைரோஸ்கான். இவர் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இந்த வார்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டில் அதிக மக்கள் வசிக்க கூடிய பெரிய பட்டினம், குருத்த மண்குண்டு, தெற்கு புதுக்குடியிருப்பு, பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும். மாவட்ட தி.மு.க. செயலாளரும்,

    எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவியுடன் இணைந்து இந்த பகுதியில் பல வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.

    யூனியன் கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஹமீதியா நகர் பகுதிக்கு புதிய பாதையில் பைப்லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆலிம் நகர், அம்மன் கோவில் கிழக்கு பகுதி, வடக்குத்தெரு சிறுசிலவு கோவில் பகுதி, தெற்கு புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி, ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளி மையவாடி, பிலால் நகர் ஆகிய பகுகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    நடுத்தெரு மற்றும் ஜலாலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை பூமிக்குள் செலுத்தும் விதமாக உறிஞ்சு குழி அமைக்கப் பட்டுள்ளது. தாமரை குண்டு ஊரணியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் அடிக்கும் வேலை நடை பெற்று வருகிறது.

    எனது தொடர் கோரிக்கையை ஏற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி கப்பலாறு, மொர வாய்க்கால் பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு ளது. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து கலெக்டர் பரிந்துரை யின்பேரில் 70 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்த குருத்த மண்குண்டு கிராமத்திற்கு இடம் தேர்வு செய்து புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி அளித்து தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கம்மாபுரம் சாலையில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குத்தெருவில் புதிய கிராவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பஸ் நிலையம் அருகே இருந்த அங்கன்வாடி இடமாற்றம் செய்யப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.பெரிய பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கல்வலசை வரை உள்ள சாலையை பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் இணைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவிகள் அதிகமாக இருப்பதால் 15-வது மானிய நிதியில் புதிய கழிவறை கட்டப்பட உள்ளது. எனது வேண்டுகோளினை ஏற்று கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்றித்தர காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளியில் இருந்து முத்துப் பேட்டை கடற்கரை வரை தார்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. காயிதேமில்லத் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆலிம் நகர், பிலால் நகர் பகுதி மற்றும் கரிச்சான்குண்டு பகுதிகளை உள்ளடக்கிய காயிதே மில்லத் நகர் பகுதியில் புதிய பகுதி நேர ரேசன் கடை அமைக்கப் பட்டுள்ளது.

    காயிதே மில்லத் நகர் பகுதிக்கு புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பிலால் நகர், தெற்குதெரு பகுதிகளில் குறைந்தழுத்த மின்சார் கிடைப்பதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியபட்டினம் ஊராட்சி பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கையா நகர் பகுதியில் அமைந்துள்ள மோசமான அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பப்பட்டு வருகிறது. இவை தவிர எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

    தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நவாஸ்கனி எம்.பி.நிதியில் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி அருகில் ஹைமாஸ் விளக்கு, பஸ் நிலையத்தில் புதிய நிழற்குடை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ. பரிந்து ரையின்பேரில் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் நிதியில் பொது மயானத்திற்கு பகுதி அளவு சுற்றுசுவர் கட்டப்பட்டது. பெரியபட்டினம் ஊராட்சியில் 77 ஏக்கர் பரப்பளவில் உள்ள கப்பலாறு பகுதி மற்றும் 2,200 மீட்டர் தூரமுள்ள மொரவாய்கால் ஒடை ஆகிய 2 நீர்பிடிப்பு பகுதிகளையும் தூர்வாரி மழைநீரை சேமித்து இப்பகுதி நிலத்தடி நீரை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் கூடுத லாக டாக்டர் நியமிக்க வேண்டும்.

    பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு மையம் அமைக்க வேண்டும், குருத்தமண்குண்டு மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு பகுதி பொது மயானத்திற்கு மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீருக்குள் செல்ல வேண்டியதாக இருப்பதால் அங்கு பாலத்துடன் கூடிய கிராவல் சாலை அமைத்து தரவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர்.
    • கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது40). இவருக்கு சொந்தமான நாட்டு படகு நாகசாமி(58), வடிவேலு(32), அருண் குமார்(22), சதீஸ்குமார்(22), கிருஷ்ணகுமார்(22) ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களுடன் செல்வ ராஜூம் சென்றார். அவர்கள் நடுக்கடலில் சென்றபோது திடீரென படகில் இருந்த என்ஜீன் பழுதானது.

    இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் தத்த ளித்தனர். இதுபற்றி மீன்வ ளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து கப்பலில் சென்று பாம்பன் கடற்கரை விளக்கம் பகுதியில் இருந்து 10நாட்டிக்கல் தூரத்தில் பழுதாகி நின்ற படகில் இருந்த 6 மீனவர்களையும் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உணவு வழங்கினர்.

    பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் பழுதான நாட்டு படகை ரோந்து கப்பலில் கட்டி இழுத்து வந்து மண்டபம் வடக்கு மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    • பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

    இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அ.தி.மு.க சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன்,

    எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மருது பாண்டியர் நகர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ×